மகனின் கண்ணை தடியால் குத்தி வெளியே எடுத்த பின் எரித்து கொன்றார்கள்! நேற்று நீர்கொழும்பு சிறையில் நடந்த கொடூரம்!! தாய் நந்தினியின் கதறல் இது!!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதியின் தாயாரின் உருக்கமான வாக்குமூலம் அனைவரின் கண்களையும் கலங்க செய்துவிட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற "மோதலின்" போது உயிரிழந்ததாகக் கூறப்படும் கைதி ஒருவரின் உறவினரான நந்தினி, பிபிசி சிங்கள சேவையிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். "எனது மகன் உள்ளே இருக்கிறான். அவனுக்கு வலது கை இல்லை. அந்த மகனை என்னிடம் ஒப்படைக்குமாறு நான் கோருகிறேன். எனது மற்றுமொரு மகனும் உள்ளே இருக்கிறான். நேற்றைய தினம் அவர்கள் அவனை அடித்துக் கொன்றுவிட்டனர். தலையை உடைத்து, கண்களில் குச்சிகளால் குத்தி, தீயிட்டுச்...
கிசோரின் பதவி பறிப்பு – வடமாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு இடைக்கால தடை விதிக்க மன்று மறுப்பு!
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது. உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து , அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர் ,வடமாகாண ஆளூநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியவை வறிதாக்கப்பட்டது. இந்நிலையில் ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலை...
யாழ் மறுவன்புலவில் பொலிசாருக்கு தண்ணீர் காட்டிய மணல் கொள்ளையர்கள்!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணம், சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார், நீண்ட தூர துரத்தலின் பின்னர் அந்த வாகனத்தை கைப்பற்றியுள்ளனர். சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமாக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை பொலிஸார் மறித்து நிறுத்த முயன்றபோது, சாரதி பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை வேகமாக செலுத்திச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் உழவு இயந்திரத்தை துரத்திச் சென்ற நிலையில், தம்மை பொலிஸார் பின்தொடர்வதைத் தடுக்கும் நோக்கில், உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்ற...
அம்பாறையில் பொலிஸ் காவலில் இருந்த 23 வயது இளைஞன் பலி!! போதைப்பொருள் உட்கொண்டதால் மரணமா?
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (5) இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தாரா? அல்லது...
யாழில் மோட்டார் சைக்கிளுடன் அரச வாகனம் மோதி கோர விபத்து – தவராசா பலி!
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் நல்லையான் வீதி, சில்லாலை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய சாம் தவராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான வாகனமும், முதியவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மோதலின் தாக்கம் காரணமாக அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்தவரின் சடலம் மேலதிக சட்ட வைத்திய பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா...
யாழில் மூன்று வாகனங்கள் மோதி கோர விபத்து – இருவர் படுகாயம்!
யாழ்ப்பாணம், சாவகச்சேரி ஏ9 பிரதான வீதியின் நுணாவில் பகுதியில் பாரவூர்தி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து நேற்று (05) மாலை சுமார் 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பாரவூர்தியுடன், அதே திசையில் பின்னால் வந்த கார் மோதியுள்ளது.அதனைத் தொடர்ந்து, குறித்த வாகனங்களை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளும் விபத்தில் சிக்கியுள்ளது.இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும், காரின் சாரதியும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் என்ன நடக்கிறது? அதிகாரிகள் உட்பட 25 பேர் பலி! Video
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், சிறைச்சாலைக்கு உள்ளேயும் வெளியேயும் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் சிறைச்சாலை வளாகத்திற்குள் நுழைந்து, மோதல் நிலைமையைக் முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் சிலரது உடல்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்படுவதாக நீர்கொழும்பு...
டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்: கந்தளாயில் டிப்பர் வாகனத்துடன் சாரதி கைது!
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் செலுத்தப்பட்டு வந்த டிப்பர் வாகனம் ஒன்றுடன் அதன் சாரதி கந்தளாய் போக்குவரத்து பொலிஸாரால் நேற்ற (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (25) காலை ஏழு மணியளவில் போக்குவரத்து பொலிஸார் வழமையான வாகன சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போதே இந்த டிப்பர் வாகனம் சோதனையிடப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த வாகனம் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் மூலம் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகத் தலைமையிலான பொலிஸ்...
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நடந்தது என்ன? முழுமயான விபரங்கள் இணைப்பு!! வீடியோ
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் நேற்று (05) மதியம் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, "பூரு மூனா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினருடன் நெருங்கிய தொடர்புடைய சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 28 கைதிகள் தற்போதும் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அவர்களில் பலத்த...
இன்றைய (06.07.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வார்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம்...










