கதிர்காமம் செல்வோருக்கு உணவு தயாரித்து கொடுத்து விட்டு வீடு திரும்பிய ஜெயநாதன் பலி!

0

கதிர்காம பாதயாத்திரை செல்லும் அடியார்களுக்காக இன்று அதிகாலை முதலே காலை ஆகாரம் தயாரித்து அன்னதானப் பணியில் ஈடுபட்டிருந்த காரைதீவைச் சேர்ந்த மார்க்கண்டு ஜெயநாதன் அவர்கள், இன்று காலை 10.00 மணியளவில் ஊறணி பகுதியில் இடம்பெற்ற துயரகரமான சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பானந்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சட்டக் கல்வி மாணவி – தீவிர விசாரணையில் பொலிஸார்.!

0

பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீடு ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் பாணந்துறை வடக்கு கல்கணுவ வீதியிலுள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பை பயின்று வந்த 26 வயதுடைய யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளார். உயிரிழந்த இளம் பெண் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதோடு, அவர் இவ்வீட்டிலிருந்து தனது கல்வி நடவடிக்கைகளையும், மேலதிகமாக சட்டத்தரணி ஒருவரின் நீதிமன்ற பணிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். இது தற்கொ*லை*யா? அல்லது வேறு ஏதேனும்...

யாழ் அராலிக் கடலில் சிவகுமார் சடலமாக மீட்பு!

0

யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் இன்றைய தினம் கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர், இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை ஏனைய மீனவர்கள் அவதானித்துள்ளனர். உடனடியாக இது குறித்து அவரது உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா...

கடத்திச் செல்லப்பட்டு 32 வெறி நாய்களால் வேட்டையாடப்பட்ட 13 வயது சிறுமி மரணம்! Video

0

ராஜஸ்தான் கங்கா நகரை சார்ந்த 13 வயது சிறுமி ஆட்டோ டிரைவரால் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்டார்.5 நாட்களாக அடுத்தடுத்து 32 அயோக்கியன்களால் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, மீட்கப்பட்ட பின் ICU வில் சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணமடைந்துள்ளதாக சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் ஆட்டோ ஓட்டுநரால் கடத்தப்பட்டு, பின்னர் பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான குற்றத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள்...

சினிமா பாணியில் பல கிலோமீற்றர் துரத்தல்: கிளிநொச்சியில் சிக்கிய வாகனம்! தப்பியோடிய சாரதி!

0

கிளிநொச்சி - மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோமீற்றர் தூரம் சினிமா பாணியில் துரத்திச் சென்று கிளிநொச்சி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சம்பவத்தின் போது வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தகவலின்படி, மாங்குளத்திலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த குறித்த வாகனம், பொலிஸ் சோதனையில் சிக்காமல் இருக்க இரணைமடு சந்தியிலிருந்து திருவையாறு உள்வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது. அதேவேளை, திருவையாறு பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில்...

29 வருடங்களுக்கு முன் வேலாயுதம் உதயகுமாரையும் குசுமாவதியையும் கொன்ற 8 பேருக்கு கொழும்பு உச்சநீதிமன்றம் மரணதண்டனை விதித்தது!! எதற்காக நடந்தது இந்தக் கொலைகள்!!

0

29 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு, குருந்துவத்தை, தாராவத்தை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒரு பெண் உட்பட இருவரைக் கொலை செய்ததற்கும், மேலும் இருவரைக் காயப்படுத்தியதற்கும் எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (08) மரண தண்டனை விதித்தது. நீண்ட விசாரணைக்குப் பிறகு, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல இந்தத் தீர்ப்பை அறிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்று கூறிய நீதிபதி, அவர்களை வெலிக்கடை சிறைக்குக் கொண்டு சென்று, ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்படும்...

இன்றைய (09.07.2026) இராசி பலன்கள்!

0

மேஷம் வியாழக்கிழமை இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 2, 5 ரிஷபம் இன்று குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சனை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம்...

தப்பி ஓடிய ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ எனும் முஹம்மது பௌசி ஹிதாயா!: போதைப் பொருள் சாம்ராஜ்யம் சுற்றிவளைப்பு!

0

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரியாக அடையாளம் காணப்பட்டுள்ள ‘கிராண்ட்பாஸ் லொக்கு நோனா’ எனப்படும் முஹம்மது பௌசி ஹிதாயா என்பவருக்குச் சொந்தமான 5.7 கோடி ரூபாவிற்கும் அதிக மதிப்புள்ள பல சொத்துக்களை முடக்குவதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் இணைக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் இந்த விசேட சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டவை என விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகிறது. உஸ்வெட்டகியாவ பகுதியில் வசிக்கும் இந்த சந்தேக நபரான பெண்ணும் அவரது நெருங்கிய சகாக்களும்...

யாழில் ரயிலுடன் மோதி தாயும் மகளும் வைத்தியசாலையில்..! வீடியோ

0

சாவகச்சேரி அரசடி தொடருந்து கடவைப் பகுதியில் தொடரூந்துடன் மோதி தாயும்-6வயதான மகளும் வைத்தியசாலையில். இதன்போது தாய் கால் மற்றும் கை பகுதிகளில் காயமடைந்த நிலையில் மகள் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் தப்பிதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் காணிப் பதிவாளரை தன்வசப்படுத்திய பின் கள்ள உறுதிகள் தயாரித்த சட்டத்தரணி!! காணிப்பதிவாளருக்கு நடந்த கதி!!

0

கொழும்பு நிலப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் நிலப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களை வெளித் தரப்பினருக்கு வழங்கியதற்காகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. வாக்குமூலம் கைது செய்யப்பட்டவர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் காணிப் பதிவாளர் என தெரிவிக்கப்படுகின்றது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் சந்தேக நபர் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சந்தேகநபர்...