யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளுக்கு சீண்டல்கள் செய்யும் சீனியர்கள்!!கண்டுகொள்ளாத நிர்வாகம்! சிஐடி விசாரணை!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு...

இன்றைய (18.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது....

யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!

0

கேவலில் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய செல்வராசா ஜெனிஸ்டன் என்பவர், அவரது மனைவியின் சகோதரியின் மகளான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த துஷ்யந்தன் யது என்பவரைக் கூட்டிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்குன்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதியர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும், 18 வயது பூர்த்தியாகாத தனது பெறாமகள் முறையான குறித்த சிறுமியைக் கூட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது...

“கணவரின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை”: பிரிட்டன் புதிய விசா மாற்றத்தால் இலங்கையர்கள் சந்திக்கும் சவால்கள்!

0

பிரிட்டனின் குடியேற்ற விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் உட்பட பல வெளிநாட்டினருக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. காலவரையற்ற குடியிருப்பு அனுமதி (ILR) பெற வேண்டிய குறைந்தபட்ச காலத்தை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் திட்டம் அவர்களின் குடும்பத் திட்டங்கள், பொருளாதாரம் மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர். தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும், தன்னும் மனைவியும் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்ற பின் குழந்தை பெற திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார். ஆனால் காத்திருக்கும் காலம் 10...

இன்றைய (17.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இ, உ, ஒ, வ, வி, வே, இன்று...

பிரித்தானியாவில் இரட்டை குடியுரிமை வைத்துள்ள இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அபாயம்!

0

பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்துள்ள பலர் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்: அமலாக்க தேதி: எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் தேதிக்கு பின்னர் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. பயண ஆவணங்கள்: வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டை பிரித்தானிய குடிமக்கள், செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு (Passport) அல்லது உரிமைப் பத்திரத்தை (Certificate of Entitlement) பிரித்தானிய கடவுச்சீட்டுடன் காட்ட வேண்டும். பயணத் தடை: இந்த ஆவணங்கள் இல்லையெனில், அவர்கள் பிரித்தானியாவிற்கு...

யாழ் கோப்பாயில் செல்வரஞ்சன் அடித்துக் கொலை! 3 பேர் தலைமறைவு!

0

யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்,  கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக...

பிருத்தானியாவில் மாணவர்களை குறிவைத்து மோசடி: நபருக்கு சிறை தண்டனை

0

பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து ஆயிரக்கணக்கான பவுண்டுகளை மோசடி செய்த நபருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. தேசிய குற்றவியல் ஏஜென்சி (NCA) நடத்திய விசாரணையின் பின்னர், பிராட்ஃபோர்டைச் சேர்ந்த 32 வயதான சிப்டைன் ஹுசைன் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் படி, ‘நிதி திறன்’, ‘மாணவர் சேவைகள்’ மற்றும் ‘தங்குமிடம் வைப்புத்தொகை’ போன்ற பெயர்களில் மாணவர்களிடமிருந்து பணம் வசூலித்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவர் போலியான மின்னஞ்சல்கள், மாற்றுப்பெயர்கள் மற்றும் பல வங்கிக் கணக்குகளை பயன்படுத்தியிருந்தார். 2017ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் கல்வி தொடங்கிய ஹுசைன்,...

கனடாவில் தமிழ்ச் சமூக மையம் (TCC): அடையாளத்தின் அடையாளமா அல்லது திசைமாறிய முதலீடா?

0

​கனடாவில் அமையவிருக்கும் தமிழ்ச் சமூக மையம் (Tamil Community Centre - TCC) குறித்த விவாதங்கள் தற்போது சூடுபிடித்துள்ளன. ஒருபுறம், தாயகத்தின் பொருளாதாரச் சிதைவைச் சுட்டிக்காட்டி இந்த முதலீடு அங்கு சென்றிருக்க வேண்டும் என்ற ஆதங்கம்; மறுபுறம், புலம்பெயர் தேசத்தில் எமது அடையாளத்தை நிலைநிறுத்த இது ஒரு வரலாற்றுத் தேவை என்ற வாதம். ​இந்த இரண்டு கருத்துக்களையும் தொகுத்து நோக்கும்போது எழும் முக்கிய புள்ளிகள் இதோ: ​1. முன்னுரிமை எங்கே? தாயகமா? புலம்பெயர் தேசமா? ​தாயகத்தில் தமிழீழ மக்கள் சொல்லொணா பொருளாதார நெருக்கடியையும், திட்டமிட்ட வளச் சுரண்டலையும்...

லண்டனில் காதலர் தினத்தன்று வாலிபர் கத்திக் குத்துக்கு பலி!

0

லண்டனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பெக்காம் (Peckham) பகுதியில், காதலர் தினமான நேற்று (பிப்ரவரி 14, 2026) இரவு 19 வயது இளைஞர் ஒரு வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெக்காம் ரைய் (Peckham Rye) பகுதியில் உள்ள ரை லேன் (Rye Lane), ஹீட்டன் ரோடு சந்திக்கு அருகில்.சனிக்கிழமை இரவு சுமார் 7:09 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்கான 19 வயதுடைய இளைஞர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட...