கனடாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழர்கள் உட்பட 296 பேர் நாடுகடத்தல்!! நடந்தது என்ன?

0

கனடாவில் மிரட்டி பணம் பறிக்கும் குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டினரை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையில் உள்ளவர்கள்: பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய 296 வெளிநாட்டினரிடம் கனடா குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடவடிக்கைகள்: ஏற்கனவே 10 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 32 பேரை வெளியேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 பேர் நாடு கடத்தப்படுவதற்கான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகள்: இக்குற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒண்டாரியோ, ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளதாகப்...

பிரான்சில் தனது நண்பனின் மனைவியை ஆயுத முனையில் வல்லுறவுக்குள்ளாக்கிய பின் சுவிஸ் தப்பி ஓடி வாழ்ந்து வந்த ஈழத் தமிழன் பிடிபட்டது எபபடி? 9 ஆண்டு சிறை!

0

சம்பவம்: 2018-ஆம் ஆண்டில், பாரிஸின் புறநகர் பகுதியான கிரீத்தையில் (Creteil) வசித்து வந்த ஈழத் தமிழர் ஒருவர், தனது நண்பரின் மனைவியைத் துப்பாக்கி முனையில் மிரட்டிப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்ற விசாரணை: இது தொடர்பான வழக்கு விசாரணை வால்-டி-மார்னே (Val-de-Marne) மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. குற்றவாளியின் வாதம்: ஆரம்பகட்ட விசாரணையின் போது, அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார். தன்னை வீட்டை விட்டு வெளியேற்றத் திட்டமிட்டு நடத்தப்படும் சதி இது என நீதிமன்றத்தில் வாதிட்டார். தீர்ப்பு மற்றும் தலைமறைவு தீர்ப்பு: வழக்கின் இறுதித் தீர்ப்பு...

யாழ் பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவத்துறையில் 8 தங்கப்பதக்கங்கள்! அபிராமியின் சாதனை

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, மருத்துவத்துறையில் செல்வி அபிராமி நற்குணம் நிகழ்த்தியுள்ள சாதனை இன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 2026 பெப்ரவரி 19 இன்று நடைபெற்ற 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், அவர் பெற்றுக்கொண்ட 8 தங்கப்பதக்கங்கள் அவரது கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் சான்றாக அமைந்துள்ளன. ​இந்தச் சாதனை குறித்த முக்கிய விபரங்கள் இதோ: ​சாதனைச் சுருக்கம் ​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற செல்வி அபிராமி தனது மருத்துவப் படிப்பின் பல்வேறு துறைகளிலும் அதீத திறமையை வெளிப்படுத்தி, ஒரே மேடையில்...

யாழில் மாமியார் மீது லண்டன் தாயகரனும் மருமகளும் கூலிப்படை வைத்து வாள்வெட்டுத் தாக்குதல்.!

0

கற்கோவளம், பருத்தித்துறையை சேர்ந்த திருமதி. பாலபாரதி நிர்மலா எனும் 65 வயதுடைய வயோதிபப் பெண் மீது நள்ளிரவு 12:30 மணியளவில் மூன்று பேரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த வயோதிபப் பெண்ணின் மகனிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பழி தீர்க்கும் வகையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண் அவரது கணவருடன் வீட்டில் தனித்து இருந்த நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்த மூவர் குறித்த பெண்ணை சரமாரியாக வாளினால் வெட்டியதுடன் அவரது கணவனை மார்பில்...

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆசிரியை பிரசாந்தினி உயிரிழப்பு..!

0

நேற்று (18) மாலை பண்டாரவளையில் இடம்பெற்ற விபத்தில் சென் தோமஸ் கல்லூரியின் ஆங்கில பாட ஆசிரியரும் பல்கலை ஆற்றல்மிக்க படைப்பாளியுமான செல்வி சண்முகவேல் பிரஷாந்தி உயிரிழந்துள்ளார். ஆசிரியர் சண்முகவேல் பிரஷாந்தி, கலை இலக்கிய ஆர்வமிக்க ஒருவராக திகழ்ந்தவராவர். அண்மையில் நாட்டில் ஏற்பட்ட ' தித்வா' புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தினால் நாட்டையும் மக்களையும் மீளெழுச்சி பெரும் நோக்கில் தனது தனிப்பட்ட முயற்சியில் உருவாக்கிய "Rebuild Sri Lanka " எனும் ஆங்கிலம், சிங்களம், தமிழ் என மும்மொழியில் தானே பாடி இசையமைத்து பாடல் ஒன்றினை வெளியிட்டார். இவரது பாடல்...

எந்தவொரு பயங்கரவாதத் சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை! யாழ். பல்கலைச் சமூகம் தொடர் போராட்டம் ஆரம்பம்!

0

எந்தவொரு பயங்கரவாதத் தடைச்சட்டமும் எங்களுக்குத் தேவையில்லை, அதை அரசு உடனடியாக இரத்துச்செய்யவேண்டும் என வலுயுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகத்தின் கையெழுத்துப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று (19)ஆரம்மிக்கப்பட்ட குறித்த போராட்டம் தொடர்ந்து (22) நான்கு நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளது. பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை மீளப் பெறு என்றும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கு என்றும் வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆகியன இணைந்தே குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய (19.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில்...

யாழில். கணவனை கைது செய் மூன்று நாட்களாக சித்திரவதை! மனைவி முறைப்பாடு

0

தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில்  களவு ஒன்று இடம் பெற்றதாக அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என எனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது  செய்யப்பட்டனர். அவர்களில் இருவரின் கைது விவரம் தொடர்பில்...

யாழ் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயது குடும்பஸ்தர் மரணம்!

0

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தர் (48 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 14 ஆம் திகதியன்று பலாலி வீதியில் மேற்படி குடும்பஸ்தர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிறிதொரு உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...

யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளுக்கு சீண்டல்கள் செய்யும் சீனியர்கள்!!கண்டுகொள்ளாத நிர்வாகம்! சிஐடி விசாரணை!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு...