யாழில் சுவிஸ் நாட்டிலிருந்து வந்து தனது வீட்டில் தங்கியிருந்தவர் கொலையான திடுக்கிடும் CCTV காட்சிகள்

0

சுவிற்சர்லாந்து நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதியவர் ஒருவர் முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகைகளும் பெருந்தொகைப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சோகச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட #சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார். நீண்ட காலமாகத் தனது குடும்பத்துடன் சுவிஸ் நாட்டில் வசித்து வந்த இவர், கடந்த இரண்டு மாதங்களாக விடுமுறையைக் கழிப்பதற்காகச் சண்டிலிப்பாயில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வந்து...

யாழில் வடிவேலு பாணியில் பொலிசாருக்கு வந்த சோதனை! பூனையை காணவில்லை என முறைப்பாடு!

0

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சந்தை வீதி பகுதியில் தான் செல்லமாக வளர்த்து வந்த பூனையை காணவில்லை என்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவது, தன்னுடைய வீட்டுக்கு முன்னால் இருக்கும் காணியில் வீடு கட்டும் பணிகள் இடம் பெற்று வருவதாகவும் அதனில் கல் மணல்கள் பறித்து ஒற்றைச் சில்லு வண்டியில் கொண்டு சென்று வேலை செய்வார்கள் என்றும் ஆரம்பத்திலிருந்து அந்த காணியில் மர நிழலிலும் பாவிக்கப்படாத மலசல கூடத்திலும் தனது பூனை படுத்திருக்கும் என்றும் காணாமல் போன திகதி (2026.04.09)...

வீட்டு குளியலறையில் இயங்கிய கள்ளச்சாராய ஆலை முற்றுகை; சந்தேகநபர் கைது!

0

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அம்பாறை மாவட்டம் தமன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஹேன கிராமத்தில் உள்ள இன்று வீடொன்றில் குறித்த குளியலறையில் சட்டவிரோத சாராயம் உற்பத்தி நடைபெறுவதாக அம்பாறை மாவட்ட ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பிரியங்கரவுக்குக் ரகசியத் தகவல் கிடைத்திருந்தது. குறித்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதுடன் 3,60,000 மில்லி லிட்டர் கோடா மற்றும் 30,000 மில்லி லிட்டர் கள்ளச்சாராயம் காய்ச்சும் உபகரணங்களுடன் சந்தேக...

மட்டக்களப்பைச் சேர்ந்த பொறியில் பீட மாணவன் பண்டாரவளையில் பலி ; இரவில் நடந்த பெரும் துயரம்..!

0

பண்டாரவளை - பதுளை வீதியின் 3ஆம் மைல் பகுதியில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவர் படுகாயமடைந்த நிலையில் சனிக்கிழமை (16.05.2026) இரவு தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, இருதயபுரம், கோவில் வீதியைச் சேர்ந்த ருஹுணு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இரண்டாம் வருட மாணவரான 22 வயதுடையவர் எனப் பொலிஸார் கூறினர். இவ்விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்த...

யாழில் சுவிஸ்லாந்திலிருந்து வந்து தங்கியிருந்த சந்திரசேகரம் கொடூரமாக கொலை! 8 இடங்களில் வெட்டு காயம்! மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய் பொடி வீச்சு! சிசிரீவி கமராக்கள் அடித்து நொருக்கப்பட்டது!

0

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த வல்லிபுரம் சந்திரசேகரம் (வயது 67) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நீண்ட காலமாக சுவீஸ் நாட்டில் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாத காலமாக விடுமுறையில் சண்டிலிப்பாயில் உள்ள தனது வீட்டில் வந்து தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் , கடந்த 14ஆம் திகதிக்கு பின்னர் அவருடன் குடும்பத்தார் தொடர்பு...

சைக்கிள் பிறேக் செயலிழந்தது! 15 அடி ஆழமான குழிக்குள் வீழ்ந்து 19 வயது இளைஞன் பலி!

0

கம்பளை, தொரகல - கிதுல்பத்த பகுதியில் மிதிவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், சுமார் 15 அடி ஆழமான நீர்நிலைக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் தனது உறவினர் முறையான சகோதரர் ஒருவருடன் மிதிவண்டியில் பயணித்தபோது, அதன் பிரேக் செயலிழந்தமையினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இன்றைய (17.05.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று உறவினர்கள் - நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். அறிவுத்திறன் அதிகரிக்கும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6 ரிஷபம் இன்று எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு வீண் அலைச்சலுக்கு பிறகே எந்த ஒரு காரியமும்...

முறுகண்டிக்கு அருகில் ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி! இருவர் படுகாயம்! வீடியோ

0

ஏ9 வீதியில் கொக்காவிலுக்கும் முறுகண்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் இனறு மாலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். கார் ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதிய விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த ஒருவரே உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு அப்பகுதிக்கு பொலிசார் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

முல்லைத்தீவில் இரு மாணவர்களை மோதிய பின் தப்பி ஓடி இராணுவ முகாமுக்குள் புகுந்த சாரதி!! வீடியோ

0

முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் எதிரே விரைந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் மோதியதில் இருசக்கர மோட்டார் வாகனத்தில் பயணம் செய்த இருமாணவர்கள் காயமடைந்தனர் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி பஸ்ஸை நிறுத்தாமல் தப்பி ஓடி அளம்பில் இராணுவ முகாமின் அருகில் நிறுத்தி விட்டு இராணுவ முகாமில் தஞ்சம் அடைந்தனால் முகாமை சுற்றி மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர் இது தொடர்பான விசாரணையை செம்மலை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சாரதி மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் கைது செய்யப்பட்ட...

கனடாவில் ஈழத் தமிழர்கள் இருவர் உட்பட 4 பேர் அதிரடியாக கைது! எதற்காக தெரியுமா?

0

கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32 வயதான சர்வதன் பாலசுப்பிரமணியம், 34 வயதான கஜன் கருணாநிதி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் முக்கிய விவரங்கள்: டெயில்விண்ட் திட்டம் (Project Tailwind): திருடப்பட்ட வாகனங்களை மீண்டும் விற்பனை செய்வது தொடர்பான இந்த விசாரணைக்கு "டெயில்விண்ட் திட்டம்" எனப் பெயரிடப்பட்டு, போலீசார் நடவடிக்கைகளை...