ஈரான் ட்ரோன்களுக்கு மரண அடி கொடுக்க ஆயத்தமாகும் அமெரிக்கா! வரலாற்றில் முதல்முறை! போர்க்களத்தில் லேசர் ஆயுதத்தைப் பயன்படுத்திய அமெரிக்க கடற்படை!
அமெரிக்க கடற்படை ட்ரோன்கள் மற்றும் சிறிய வான்வழி இலக்குகள் போன்ற நவீன அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட உயர் ஆற்றல் கொண்ட லேசர் அமைப்பைச் (High-energy laser system) சோதித்துள்ளது. HELIOS என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு, 'யுஎஸ்எஸ் பிரெபில்' (USS Preble) கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது. இது இலக்குகளை உடனடிாக முடக்க அல்லது அழிக்க 60 கிலோவாட்டிற்கும் அதிகமான நேரடி ஆற்றலைச் செலுத்தக்கூடியது. பாரம்பரிய ஆயுதங்களைப் போலன்றி, லேசர் அமைப்புகள் கப்பலால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைச் சார்ந்திருக்கின்றன. இதனால் பௌதிக வெடிமருந்துகள் அல்லது மறுஏற்றம் (Reloads) தேவைப்படாமல்...
யாழ்பாணத்தில் விபத்து! அண்ணனும் தங்கையும் பலி!
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் மணியந்தோட்டத்தை சேர்ந்த அண்ணன் தங்கை பலி. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்கள் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கொழும்புத்துறை பகுதியை அண்டிய பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்த பிரட்லீ (வயது 24) அவரது சகோதரியான டிலக்ஸி (வயது 19) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். சகோதரர்களான இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை!
தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும், வாரத்தின் ஏனைய 4 வேலை நாட்களிலும், எத்தனை பணியாளர்களை பணிக்கு அழைக்க வேண்டும் என்பது குறித்த முடிவை எடுப்பதற்கான அதிகாரம் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், இந்த...
பேருவளை பகுதியில் போதைப்பொருள் சந்தேகத்தில் மற்றொரு படகும் மீட்பு!
பேருவளை பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு பலநாள் மீன்பிடி படகையும் கடற்படையினர் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகு இன்று (16) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அது தொடர்பான விடயங்களை தௌிவுப்படுத்தும் போதே, அவர் இதனை கூறியுள்ளார். அந்தப் படகு தற்போது கரைக்கு கொண்டு வரப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இந்த நேரத்தில் கடற்படையினரின் நடவடிக்கையில், போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு...
மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை – இலங்கையை அதிரவைத்த ‘தங்கச் சங்கிலி’ கொள்ளை பின்னணி!
பெற்ற தாயே மகனின் போதைப்பொருள் பாவனைக்காகவும், கொள்ளைச் சம்பவங்களுக்கும் துணையாக நின்ற அதிர்ச்சிச் சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🔍நடந்தது என்ன? இலங்கையின் பல பாகங்களில், குறிப்பாக வென்னப்புவ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் கொள்ளைச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வந்தன. இது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த வென்னப்புவ குற்றப் புலனாய்வுப் பிரிவினர், கடந்த 13ஆம் திகதி களுத்துறை பகுதியில் வைத்து 53 வயதுடைய பெண் ஒருவரை அதிரடியாகக் கைது செய்தனர். 🔙அதிர்ச்சியூட்டும்...
இன்றைய ராசி பலன்கள் (16.03.2026)
மேஷம் இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்....
வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை ; இலங்கையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல்) நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிப்பதால், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அவசர நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது. 1. வாரத்திற்கு 4 நாட்கள் வேலைத் திட்டம் பரிசீலனை: அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை வழங்கும் யோசனை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று (மார்ச் 16, 2026) உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோக்கம்: அலுவலகங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்தைக்...
பிரித்தானியாவில் தமிழர்களை குறி வைத்து சுற்றி வளைக்கும் பொலிசார்!! ரவுடிகள் என கருதுகின்றார்களா? நடப்பது என்ன?
பிரித்தானியாவின் லண்டனில் இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை குறித்து அதிகளவான சோதனைகளை பொலிஸார் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டன் மாநகர மேயரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வொன்றில், லண்டன் மாநகர பொலிஸார் மேற்கொள்ளும் நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்த அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவல்களின்படி, லண்டன் முழுவதும் மொத்தமாக 1,17,339 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பகுதி வாரியான சோதனைகளின் விவரம்: பகுதி சோதனைகளின் எண்ணிக்கை ஈலிங் 3,673 பிரெண்ட் 4,622 ஹில்லிங்டன் 2,737 ஹவுன்ஸ்லோ 2,223 வெஸ்ட்மின்ஸ்டர் 9,593 (அதிகபட்சம்) ரிச்மண்ட் 748 இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள்: இந்த ஆய்வு அறிக்கை இன ரீதியான மக்கள் எவ்வாறு...
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தவன் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன், நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று (14) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில், கோப்பாய் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். இதன்போது அவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றிலிருந்து QR முறையில் எரிபொருள் விநியோகம்! QR பெறுவது எப்படி?*
இலங்கையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் QR முறையில் மட்டுமே இன்றிலிருந்து எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் http://fuelpass.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். 2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள். 3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும். 4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile...










