இன்றைய ராசி பலன்கள் (16.03.2026)
மேஷம் இன்று பல பிரச்னைகள் ஒரே நேரத்தில் சிரமம் தந்தாலும் ஏற்றுக் கொண்டு முயற்சியினால் வெற்றிகளை ஈட்டுவீர்கள். ரியல் எஸ்டேட் துறையினர் முன்னேற்றம் காண்பர். உடல்நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒத்துப்போக வேண்டும். சகோதர சகோதரிகளுடன் உறவு சிறக்கும். உடன்பிறந்தவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று மன உறுதி அதிகரிக்கும். பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பாராட்டுகளும் விருதுகளும் கிடைக்கும். மத நம்பிக்கை அதிகரிக்கும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்....
வாரத்தில் நான்கு நாள் மட்டுமே வேலை ; இலங்கையில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
மத்திய கிழக்கில் (ஈரான் - இஸ்ரேல்) நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் மசகு எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலும் எதிரொலிப்பதால், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு பல்வேறு அவசர நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறது. 1. வாரத்திற்கு 4 நாட்கள் வேலைத் திட்டம் பரிசீலனை: அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை வழங்கும் யோசனை குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இன்று (மார்ச் 16, 2026) உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நோக்கம்: அலுவலகங்களுக்குச் செல்லும் வாகனப் போக்குவரத்தைக்...
பிரித்தானியாவில் தமிழர்களை குறி வைத்து சுற்றி வளைக்கும் பொலிசார்!! ரவுடிகள் என கருதுகின்றார்களா? நடப்பது என்ன?
பிரித்தானியாவின் லண்டனில் இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை குறித்து அதிகளவான சோதனைகளை பொலிஸார் முன்னெடுப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லண்டன் மாநகர மேயரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆய்வொன்றில், லண்டன் மாநகர பொலிஸார் மேற்கொள்ளும் நிறுத்தி சோதனையிடும் நடவடிக்கைகள் குறித்த அதிரடியான தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023-ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவல்களின்படி, லண்டன் முழுவதும் மொத்தமாக 1,17,339 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பகுதி வாரியான சோதனைகளின் விவரம்: பகுதி சோதனைகளின் எண்ணிக்கை ஈலிங் 3,673 பிரெண்ட் 4,622 ஹில்லிங்டன் 2,737 ஹவுன்ஸ்லோ 2,223 வெஸ்ட்மின்ஸ்டர் 9,593 (அதிகபட்சம்) ரிச்மண்ட் 748 இன ரீதியான ஏற்றத்தாழ்வுகள்: இந்த ஆய்வு அறிக்கை இன ரீதியான மக்கள் எவ்வாறு...
யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வைத்து போதைப்பொருள் விற்பனை செய்து வந்தவன் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தினுள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன், நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று (14) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்துகொண்டிருந்த வேளையில், கோப்பாய் பொலிஸார் அவரைக் கைது செய்தனர். இதன்போது அவரிடமிருந்து 41 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றிலிருந்து QR முறையில் எரிபொருள் விநியோகம்! QR பெறுவது எப்படி?*
இலங்கையில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் QR முறையில் மட்டுமே இன்றிலிருந்து எரிபொருள் வழங்கப்படும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் அனுமதிப்பத்திரத்தைப் பதிவு செய்ய, கீழுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்: 1.இணையதளத்திற்குச் செல்லுங்கள்: முதலில் http://fuelpass.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லுங்கள். 2. பதிவு செய்தல்: அங்கு கோரப்பட்டுள்ள விவரங்களை வழங்கி, பதிவு நடைமுறைகளை நிறைவு செய்யுங்கள். 3. QR குறியீட்டைப் பெறுதல்: பதிவு முடிந்ததும், உங்களுக்கு என பிரத்யேகமான QR குறியீடு (QR Code) திரையில் தோன்றும். 4. சேமித்து வைத்தல்: அந்த QR குறியீட்டை உங்கள் கைப்பேசியில் (Mobile...
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமனம்!
புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ்.சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார். நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.
இன்றைய (12.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். எதையும் சமாளிக்கும் மனநிலை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம். பார்ட்னர் மூலம் நன்மை உண்டாகும். நிதி உதவி எதிர்பார்த்தபடி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைத்து அலுவலக பணிகளை முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் நல்லபலன் கிடைக்கும். பிள்ளைகள்...
இன்றைய (11.03.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 ரிஷபம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில்...
கடந்த வருடம் மட்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களிடம் 62 கோடியை சுருட்டிய கில்லாடிகள்! பொலிசார் அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல் உள்ளிட்ட மோசடிகள் மூலம் சுமார் 62 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் , மோசடிகாரர்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.பி.எஸ்.ஜெயமகா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில். கடந்த ஒரு வருட கால பகுதிக்குள், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக, இணையக் குற்றங்கள் ஊடாக, காணி விற்பனை உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக 225 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் மூலம் 62 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. அவற்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 200...
கலைச்செல்வம் ஐயரின் மனைவியுடன் கிருஷ்ணகுமார் ஐயர் தகாத உறவு! நயினாதீவு ஐயர் வெட்டிக் கொலையின் பின்னணி!!
நயினாதீவு தெற்கு பிள்ளையார் கோவில் பூசகர், அதே பகுதியில் அமைந்துள்ள அம்பாள் ஆலய பூசகரை நெஞ்சில் உதைந்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் கிருஷ்ணகுமார் (வயது) என்ற பூசகரே இன்று மாலை 5 மணியளவில் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். குறித்த பூசகரின் மனைவியுடன் உயிரிழந்த பூசகர் தகாத உறவில் ஈடுபட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த முருகேசு கலைச்செல்வம் என்ற இந்த பூசகர் வாமதேவ கைலாசபாணு குருக்களின் வீட்டிற்கு முன்பாக உள்ள வீட்டில் முருகன் கிருஷ்ணகுமார் உறங்கிக்கொண்டிருந்த...








