கனடாவில் தமிழ் பொலிஸ் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது! எதற்காக?

0

அனுமதியின்றி கணினியைப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் தமிழரான York பிராந்திய காவல்துறை அதிகாரி மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. York பிராந்திய காவல்துறை அதிகாரி Const. கிவியன் கேதீஸ்வரன், கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், நம்பிக்கைத் துரோகம் செய்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். கணினியை அனுமதியின்றி பயன்படுத்தியது, ஒரு அரசு அதிகாரியின் நம்பிக்கையை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் புதன்கிழமை (17) இவர் கைது செய்யப்பட்டார். அவர் எதிர்வரும் September மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். York பிராந்திய காவல்துறையின்...

ஜேர்மனியில் தனது 20 மாத குழந்தையை தமிழ் குடும்பப் பெண் கொலை செய்தாளா? நடந்தது என்ன?

0

ஜேர்மனியின் ஷ்வன்டோர்ப் (Schorndorf) நகரில், பெற்றோரால் காரில் மறதியாக விட்டுச் செல்லப்பட்ட 20 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உடற்பயிற்சிக் கூடம் (climbing gym) ஒன்றின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில், அக்குழந்தையின் தாய் குழந்தையை பல மணி நேரம் விட்டுச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அப்பகுதியில் 28 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகியிருந்தது. கடுமையான வெப்பத்தின் (Hyperthermia) காரணமாகவே குழந்தை இறந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. வெப்பத்தாக்கத்தால் ஏற்பட்ட உறுப்பு செயலிழப்பே மரணத்திற்கான உறுதியான காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 44 வயதான...

யாழ் நல்லுாரில் பட்டப்பகலில் ரவுடிகளின் மோட்டாா சைக்கிள் அணிவகுப்பால் பெரும் பரபரப்பு!! வீடியோ

0

யாழ் நல்லுார் கந்தசாமி கோவில் பின் வீதியில் ரவுடிகள் மோட்டார் சைக்கிள்களில் ஒன்று கூடி அப்பகுதியின் போக்குவரத்தை தடை செய்த பெரும் அட்டகாசம் செய்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்தவகள் தெரிவிக்கின்றார்கள். இவர்களின் இந்தச் செயற்பாட்டால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டதுடன் அவர்கள் குக்குரல் இட்டு கத்திச் சென்றதால் தெருவால் சென்றவர்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியதாகத் தெரியவருகின்றது.

யாழில் சினிமா பாணியில் மணல் கடத்தல்!! துரத்திய பொலிசஸ் ஜீப்பை வழி மறித்த டொல்பின் வாகனம்!! நடந்தது என்ன?

0

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக வாகனம் தொடர்பில் பொலிஸார் விசரணைகளை முன்னெடுத்துள்ளனர். கிளாலி பகுதியில் இருந்து அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் இரண்டு டிப்பர் வாகனங்களில் மணல் ஏற்றி வருவதாக , சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கொடிகாமம் - புத்தூர் வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது குறித்த இரண்டு டிப்பர் வாகனமும் அவ்வீதியூடாக வந்த போது அதனை வழி மறித்துள்ளனர்....

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கே லஞ்சம் கொடுக்க முற்பட்டார்களாம்!! முன்னாள் நீதி அமைச்சரின் மகன் உட்பட இருவர் கைது!

0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்படிருந்த, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனான ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்னவை பொலிஸார் கொலை செய்வதைத் தடுப்பதற்கும், குறித்த சந்தேகநபரின் தடுப்புக்...

அம்பாறை பெண் வைத்தியரை கொலை செய்த கள்ளக் காதலனுக்கு அக்காவாக மாறி அலுவல் பார்த்த மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!

0

நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் பிசியோதெரபிஸ்ட் ஒருவரின் மரணம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அந்த மரணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், பொலிஸாரின் நீண்ட தேடுதல் வேட்டையின் பின்னர், சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரையும் அவரது மனைவியையும் பொலிஸார் இன்று (24) யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்தனர். இந்தக் கைதின் பின்னர் இவ்வாறு மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் பின்னணி மற்றும் சடலம் மீட்பு   கடந்த ஜூன் 17 ஆம் திகதி...

இன்றைய (25.06.2026) இராசி பலன்கள்

0

மேஷம் இன்று அரசியல் துறையினருக்கு எடுக்கக் கூடிய ஒப்பந்தகளை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். மேலிடத்தின் கனிவான பார்வை கிடைக்கப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9 ரிஷபம் இன்று நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 மிதுனம் இன்று நன்மைகள் சேரும். வாக்குவாதங்கள்...

யாழில் மிக இளவயது தவில் வித்துவான் தவறான முடிவெடுத்து மரணம்!

0

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த பிரபல இளம் தவில் வித்துவான் சச்சின் பிரசாத் அவர்கள் சற்று முன் தன் முடிவால் வாழ்வை முடித்துக் கொண்டார் என அறியமுடிகிறது... இவர் எதற்காக இவ்வாறான முடிவெடுத்தார் என அறிய முடியவில்லை.

கனடாவுக்கு அழைப்பதாகக் கூறி யாழில் பெற்றோரின் 8 கோடி ரூபா பெறுமதியான சொத்தை அபகரித்த கனடா நிரோஜன்!!

0

கனடாவில் அஜாக்ஸ் (Ajax) பகுதியில் வசித்து வரும் 47 வயதான சிவரட்ணம் நிரோஜன் என்னும் காவாலி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது பெற்றோரை கனடாவுக்கு எடுப்பதாக கூறி யாழ்ப்பாணம் வந்து அவர்களின் 8 கோடி ரூபா பெறுமதியான வீடு,வளவினை தனது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டு அவர்களை அம்போ என கைவிட்டுச் சென்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களும் ஓரிரு நாட்களில் வெளியிடுவோம்.

மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாணவி துஸ்பிரயோகம்! தடயவியல் வைத்தியர் கைது!

0

வட கொழும்பில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர், 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை, பெம்முல்லா பகுதியைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி, 16 வயது மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகத்தின் பேரில் கைது பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணையின்போது வெளிப்பட்ட மருத்துவத்...