முல்லைத்தீவு துணுக்காயில் வயல் காவலில் நின்றவர்கள் மீது இன்று அதிகாலை யானை தாக்குதல்!! 19 வயது சுஜீவன் பலி!! வீடியோ

0

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட தேறாங்கண்டல் பகுதியில் இன்று (17) அதிகாலை வயல்காவலில் ஈடுபட்ட வேளை காவல்கொட்டில்மீது யானைதாக்கி சேதப்படுத்தியுள்ளதுடன் கொட்டிலில் காவலில் ஈடுபட்ட மூவர்மீது தாக்குதல் நடத்தியுள்ளது இதில் இருவர் கொட்டிலை விட்டு தப்பிஓடிய நிலையில் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். 19 அகவையுடைய தேறாங்கண்டல் பகுதியினை சேர்ந்த பொன்முடி சுயீவன் என்ன இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தினை தொடர்ந்து சம்பவஇடத்திற்கு வந்த கிராமசேவையாளர் மற்றும் பொலீசார் உடலத்தினை மீட்டு மல்லாவி மருத்துவமனைகொண்டுசெல்லப்பட்டு பிரேத அறையில் உடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மல்லாவி...

இன்றைய (17.01.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேற்றுமொழி பேசுபவர்களின் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்து வீர நடை போடுவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன்தரும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள்...

யாழ். வட்டுக்கோட்டை இலங்கை வங்கியில் இப்படி ஒரு பெண் முகாமையாளரா?

0

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்...  இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்றாலே நேர விரயத்தை ஏற்படுத்தி, மக்களை காக்க வைக்கும் வங்கிகள் என்றே பொதுவாக மக்கள் கருதுகின்றனர். ஏனெனில் அவை அரச வங்கிகள் என்பதால் சுறுசுறுப்புடன் இயங்க மாட்டார்கள் என்பதே மக்களின் கணிப்பு. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதுவும் உண்மையே. ஆனால் வட்டுக்கோட்டையில் உள்ள இலங்கை வங்கி கிளையானது மேற்குறித்த கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டது. காரணம் அந்த வங்கி கிளையில் ஒரு துடிப்புள்ள பெண்ணொருவர் முகாமையாளராக கடமை புரிவதேயாகும். நான் பல தடவைகள் வங்கிக்கு சென்றபோது, அந்த...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நிலானி லண்டனில் கணவன் குத்திக் கொலை! நீதிமன்றில் நடந்தது என்ன?

0

பிருத்தானியாவின் லிவர்பபூல் பகுதியில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வவுனியா முகத்தான்குளம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட நிலானி நிமலராஜா எனும் 44 வயதான 3 பெண் பிள்ளகைளின் தாயான குடும்பப் பெண் பூட்டில் எனும் பகுதியில் வைத்து 47 வயதான கணவன் நிமலராஜாவால் 20.06.2025 அன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது. நிமலராஜா போதைக்கு அடிமையானவர் எனத் தெரியவருகின்றது. இதன் காரணமாக நிறை வெறியில் வந்து மனைவி, பிள்ளைகளை தொடர்ச்சியாக தாக்கி வந்ததால் நிலானி பொலிசாரிடம் முறையிட்டு நிமலராஜாவை வீட்டில் இருந்து...

யாழில் வட்டிக்கு பணம் வாங்கிய வர்த்தகர்! மனைவி பணம் கொடுத்தவனுடன் ஓட்டம்!! பொலிசார் முன் நடந்தது என்ன?

0

யாழில் வர்த்தகரன கணவனுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த 30 வயதான இளைஞனுடன் வர்த்தகரின் மனைவி தலைமறைவாகியுள்ளார். யாழ் புறநகர்ப் பகுதியில் உள்ள பிரபலமான பான்சி கடை உரிமையாளரின் 36 வயதான மனைவியே தற்போது தலைமறைவாகியுள்ளார். குறித்த இளைஞனிம் 20 லட்சம் ரூபாக்களுக்கு மேல் வர்த்தகர் பணம் பெற்றுள்ளார். அந்தப் பணத்திற்கான வட்டியும் சேர்த்து 40 லட்சங்களுக்கு மேல் இளைஞனுக்கு கொடுக்காது இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக இளைஞனால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு அதுவும் இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளது. வர்த்தகர் இல்லாத நேரங்களிலும் குறித்த இளைஞன்...

உடல் எடை கூடுவது ஏன்? சரியான தூக்கம் இல்லையா? கொழுப்பாக மாற்றத் தொடங்கும் உணவு : புதிய ஆய்வு தகவல்!

0

புதிய ஆய்வுகளின்படி, ஒரு நபர் முறையான உணவு முறையை (Good Diet) பின்பற்றினாலும், போதிய தூக்கம் இல்லையென்றால் அவரது உடல் உணவை கொழுப்பாக மாற்றத் தொடங்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்: தூக்கமின்மை காரணமாக உடலின் வளர்சிதை மாற்றம் (Metabolism) பாதிக்கப்பட்டு, கலோரிக்கள் எரிக்கப்படுவதற்குப் பதிலாக கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றன. போதிய ஓய்வு இல்லாதபோது பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் அதிகரித்து, தேவையற்ற கொழுப்பு உடலில் சேர வழிவகுக்கிறது. நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டாலும், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 7-8 மணிநேரத் தூக்கம் இல்லையெனில் உடல் பருமன் குறையாது.

சீன விஞ்ஞானிகள் எலும்பு முறிவு சிகிச்சையில் புதிய புரட்சி – உடைந்த எலும்பை நிமிடங்களில் ஒட்டும் பயோ பசை

0

சீன விஞ்ஞானிகள் மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளனர். எலும்பு முறிவுகளை மிகக் குறுகிய காலத்தில் குணப்படுத்தும் உலகின் முதல் "எலும்புப் பசையை" (Bone Glue) அவர்கள் உருவாக்கியுள்ளனர். இது உலகெங்கிலும் உள்ள எலும்பு முறிவு சிகிச்சை முறையை முற்றிலுமாக மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாகப் போடப்படும் மாவுக்கட்டு அல்லது அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் உலோகத் தகடுகளுக்கு மாற்றாக, இந்தப் பசை உடைந்த எலும்புகளைச் சில நிமிடங்களிலேயே ஒன்றாக ஒட்டுகிறது. இது வெறும் பசை மட்டுமல்ல; எலும்பின் இயற்கையான கட்டமைப்பைப் போலவே வடிவமைக்கப்பட்ட உயிரிப்...

மட்டக்களப்பு இளைஞன் ரினோசனின் மரணம்; பொலிஸார் மீது உறவினர்கள் சந்தேகம்!

0

சிறைச்சாலையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டுசென்ற இளைஞன் ரினோசனின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் சந்தேகம் தெரிவித்துள்ளதாக சட்டத்தரணி ஜெயரட்னராஜா தெரிவித்தார். மட்டக்களப்பு பொலிஸாரினால் கடந்த மாதம் 02ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அங்கு சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மாதம் 07ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில் குறித்த இளைஞன் பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மரணமான இளைஞரின் குடும்பத்தினரால் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவந்தன. இது தொடர்பில் மட்டக்களப்பு நீதிவான்...

லண்டனில் தமிழ் வர்த்தகரையும் 51 வயது கள்ளக்காதலியையும் ஆடைகள் அற்ற நிலையில் துரத்தி துரத்தி தாக்கிய மனைவி!!

0

லண்டன் புறநகர்ப் பகுதியான ஓர்பிர்ண்டன் பகுதியில் உள்ள தமிழ்கடை ஒன்றின் 45 வயதான முதலாளியும் கள்ளக்காதலியும் அவரது மனைவியால் அவரது வீட்டில் வைத்து கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. தனது வீட்டில் வைத்து 51 வயதான தமிழ் குடும்பப் பெண் ஒருவருடன் (விசேட தேவைக்குரியவர்) உல்லாசமாக இருந்த போதே மனைவியால் பிடிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தால் அப்பகுதி சிறிது நேரம் அமளிதுமளியாகியுள்ளது. குறித்த கடைக்கு வாடிக்கையாளராக தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த தமிழ்க் குடும்பப் பெண் ஒருவருடன் குறித்த வர்த்தகர் பழகி அந்தரங்கத் தொடர்பில் இருந்துள்ளார். வர்த்தகரின்...

விண்வெளியில் இருந்து மின்சாரம் தயாரித்து பூமிக்கு அனுப்பி ஜப்பான் உலக சாதனை!

0

2025-ஆம் ஆண்டில் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளித் தொழில்நுட்பத்தில் ஒரு பிரம்மாண்ட மைல்கல்லை எட்டியுள்ளனர். விண்வெளி சுற்றுப்பாதையில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை வெற்றிகரமாக பூமிக்குக் கம்பியில்லா முறையில் அனுப்பி அவர்கள் சாதனை படைத்துள்ளனர். விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட சூரியத் தகடுகள், அங்கு தடையின்றி கிடைக்கும் சூரிய ஒளியைச் சேகரித்து மின்சாரமாக மாற்றின. பின்னர், அந்த மின்சாரம் நுண்ணலை கற்றைகள் (Microwave Beams) மூலம் பூமியில் உள்ள பெறுப்பான்களுக்கு (Receivers) அனுப்பப்பட்டது. இதன் மூலம், விண்வெளி சார்ந்த சூரிய மின்சக்தித் திட்டம் ஆய்வகங்களுக்கு வெளியே நிஜ உலகிலும்...