நெடுந்தீவு மீனவரின் சடலம் தமிழகத்தில் கரையொதுங்கியது!
நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்காக சென்று காணாமல் போயிருந்த இலங்கை மீனவர் ஒருவரது சடலம் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளது. குறித்த சடலம் இன்று (19) நாகப்பட்டினம் கடற்கரையோரத்தில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார். இந்த மீனவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலமாக தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. உரிய விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை...
குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி ராட்சத முதலையால் பரபரப்பு; அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை சுமார் 8 அடி நீளமான ராட்சத முதலை ஒன்று புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது. குடியிருப்பு பகுதிக்குள் முதலை நுழைந்ததை அவதானித்த பொதுமக்கள் உடனடியாக வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளின் பின்னர் முதலையை உயிருடன் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச...
பிரபல தேசிய பாடசாலையின் 15 வயது மாணவி வல்லுறவு!! சம்பவத்தை மூடி மறைத்த அதிபரும் உப அதிபரும் கைது!
அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவன் ஆகியோர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். வேறு பாடசாலையிலிருந்து வந்த மாணவன் கடந்த மே மாதம் 21-ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பாடசாலையில் நடைபெற்ற...
கனடா ஆசையை தர்சினிக்கு துாண்டி நுவரேலியா கொண்டு சென்று றுாம் எடுத்து …..! அம்பாறை பெண் மருத்துவரின் மரணத்தின் அதிர வைக்கும் பின்னணி!!
தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில்தெல்தெனிய மாவட்ட மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஒரு காரில் மீட்கப்பட்ட சடலம அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மருத்துவமனையின் இயன்முறை சிகிச்சையாளரான அந்த பெண்ணின் மரணம், நுவரெலியாவில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், அது கொலை அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. இந்த மரணத்திற்கான பிரேதப் பரிசோதனையை தெல்தெனிய மாவட்ட மருத்துவமனையின் மாவட்ட தடயவியல் நிபுணர் டொக்டர் கே.பி.யு.கே. பண்டாரா நேற்று (18) நடத்தினார். அவர் மரணம் குறித்து திறந்த...
யாழில் எம்.பி அர்ச்சுனாவின் 10 அடி கட்டவுட் செருப்பு மாலை!! காரில் வந்து கிழித்தெடுத்த அர்ச்சுனா!! பரபரப்பு வி
யாழில். தனது பாதகைக்கு செருப்பு மாலை அணிவித்ருந்த பதாகையை கிழித்து , தனது காரில் எடுத்து சென்றுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன். யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகை வைக்கப்பட்டு , அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தகாத வார்த்தை பிரயோகங்கள் , சபை நாகரீகமின்றி செயற்படுதல் , கூட்டங்களை குழப்புதல் போன்ற செயல்களில் அருச்சுனா இராமநாதன் செயற்பட்டு வருவதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்...
குடிகாரக் கணவனின் கொடூர செயல்! மனைவி கத்தியால் குத்திக் கொலை!!
கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக் கோரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலைச் சம்பவத்தில் கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான 42 வயதுடைய பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். சந்தேகநபரான 48 வயதுடைய கணவனுக்கும், உயிரிழந்த மனைவிக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்ச்சியாகக் குடும்பத் தகராறு நிலவி வந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இன்றைய தினமும்...
மட்டு’வில் பெரும் சோகம்! 54 வயது காமுகன் தனது 12 வயது மகளை துஸ்பிரயோகம் செய்ததை அறிந்த தந்தை தற்கொலை!
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமி ஒருவருக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் துஷ்பிரயோக சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நஞ்சு அருந்தி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் தகவல்களின்படி, 54 வயதுடைய நபர் ஒருவர் 12 வயது சிறுமி மற்றும் அவரது 10 வயது தோழியுடன் தொடர்புடைய பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை ஆரம்பக்கட்ட விசாரணைகளின் படி, சம்பவம் சில வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் வீட்டிற்கு...
இன்றைய (19.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று பணவரத்து கூடும். உடல் சோர்வு உண்டாகலாம். சந்திரன் சஞ்சாரத்தால் வீண் கவலை, வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும். ஆனாலும் ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தின் மூலம் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். பயணம் மூலம் வியாபாரம், தொழில் விரிவாக்கம் பெறும். பழைய பாக்கிகள்...
கனடாவில் பெண்ணுடன் சேட்டை விட்ட 36 வயதான இலங்கைத் தமிழனான திருக்குமரன் கைது!!
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்கார்பாரோ (Scarborough) பகுதியில் உள்ள டர்ஹாம் பிராந்திய போக்குவரத்துப் பேருந்தொன்றில் (Durham Regional Transit bus) இடம்பெற்ற, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Hate-motivated) தாக்குதல் சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி புரோகிரஸ் அவென்யூ (Progress Avenue) மற்றும் மில்னர் அவென்யூ (Milner Avenue) ஆகிய பகுதிகளை இணைக்கும் வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நெருங்கி, அவருக்கு எதிராகப் பல அவதூறான மற்றும்...
கிளிநொச்சியில் வீதி விபத்து: யாழ்ப்பாண இளைஞன் பலி!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர வாகன விபத்தில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் நிதர்சன் என்ற இளைஞனே இவ்வாறு விபத்தில் பலியானவராவார்.இவர் கிளிநொச்சி பகுதியில் தனது தினசரி பணியினை முடித்துக்கொண்டு, நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி பிரதான வீதி வழியாக பயணித்துள்ளார். உமையாள்புரம் பகுதியைச் சென்றடைந்த போது, மோட்டார் சைக்கிள் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதி...










