இன்றைய (16.01.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணும். பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5 ரிஷபம் இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். சக ஊழியர்கள் மூலம்...
யாழில் காதலனின் அந்தரங்கப் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட பெண் பொறியியலாளர் கைது!! நடந்தது என்ன?!!
யாழ்ப்பாணத்தில் தனது முன்னாள் காதலனின் நிர்வாண புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியதாக கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணம், கந்தர்மடத்தில் வசிக்கும் 25 வயது இளம் கணினி பொறியாளர் என பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நிர்வாண புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டதாகவும், அது அவரது முன்னாள் காதலியால் செய்யப்பட்டதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார். அதற்கமைய, வடக்கு மாகாண குற்ற புலனாய்வு பிரிவு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முன்னாள் காதலியின்...
மட்டக்களப்பில் மாணவிகள் தங்கியிருந்த விடுதிகளுக்குள் புகுந்து உள்ளாடைகள் திருடியவன் நையப்புடைப்பு! பிடிபட்டது எப்படி?
மட்டக்கிளப்பு மாவட்டத்தின் தாளம்குடா பிரதேசத்தில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றின் பெண்கள் விடுதியில், பெண்களின் ஆடைகள் தொடர்ச்சியாக திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொதுமக்களால் கைவசமாக பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்கள் விடுதியில், ஆடைகளை உலர்த்துவதற்காக வெளியில் வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகள், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக காணாமல் போய்வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் விடுதியில் வசித்து வந்த பெண்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து, குறித்த விடுதியில் தங்கியிருந்த பெண்கள் இந்த சம்பவம் தொடர்பில் அதிக அவதானத்துடன் கண்காணிப்புகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அந்த கண்காணிப்பின் போது,...
மன்னார் பேசாலைக் கடலில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கிப் பலி!!
மன்னார் பேசாலைக் கடலில் குளிக்க சென்ற சிறுவர்களில் பேசாலை மற்றும் வசந்தபுரத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். இன்றைய தினம் (.15.01.2026) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீரில் மூழ்கியவர்களில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு மேலும் ஒரு சிறுவன் கடலில் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரைத் தேடும் பணியிலும் மக்களும் அந்த பகுதி கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கலா ஓயா பேருந்து அனர்த்தம் – பத்மநிகேதனை கொன்றதாக சாரதி மீது கொலைக் குற்றச்சாட்டு: ஜனவரி 21 வரை விளக்கமறியல் !
நாட்டில் ஏற்பட்ட ‘டிட்வா’ சூறாவளிப் பாதிப்புகளின் போது, 68 பயணிகளுடன் பயணித்த பேருந்து ஒன்று பெருக்கெடுத்து ஓடிய கலா ஓயா பாலத்தைக் கடக்க முயன்றது. பொலிஸார் மற்றும் பொதுமக்களின் கடும் எச்சரிக்கையையும் மீறி சாரதி எடுத்த இந்தத் தீர்மானத்தினால் ஏற்பட்ட விபத்தில் இரு பயணிகள் உயிரிழந்தனர். பாரதூரமான குற்றச்சாட்டுகள்: பொதுவாக வீதி விபத்துக்களின் போது சுமத்தப்படும் சாதாரண குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக, இச்சம்பவத்தில் சாரதிக்கு எதிராகப் பின்வரும் கடுமையான பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்: பிரிவு 296: கொலைக் குற்றச்சாட்டு (Murder) பிரிவு 300: கொலை முயற்சி (Attempt...
அமெரிக்கா vs ஈரான் – துப்பாக்கி ஏந்தாமல் ஆட்சியை கவிழ்க்கும் டிரம்ப்பின் மாஸ்டர் பிளான்!”
அமெரிக்கா vs ஈரான்: ஒரு விரிவான வரலாற்று மற்றும் அரசியல் ஆய்வு முன்னுரை உலக அரசியலில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியைத் தீர்மானிக்கும் மிக முக்கிய சக்திகளாக அமெரிக்காவும் ஈரானும் திகழ்கின்றன. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் பனிப்போர், 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் ஒரு நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஜனவரி 15, 2026 நிலவரப்படி, இரு நாடுகளும் ஒரு மாபெரும் போரின் விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றன. இக்கட்டுரை அதன் வரலாறு, காரணங்கள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகளை...
கனடாவில் ஒரு கருப்பு நிற நிசான் கார்! அதற்குள் 4 உயிரற்ற பெண்களின் உடல்கள்! 3 முஸ்லீம்களுக்கு ஆயுள் தண்டனை!!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள கிங்ஸ்டன் மில்ஸ் லாக் பகுதியில் அந்த காலை ஒரு அதிர்ச்சியோடு விடிந்தது. அமைதியாக ஓடிக் கொண்டிருந்த கால்வாயின் அடியில், ஒரு கருப்பு நிழலைப் போல அது கிடந்தது — ஒரு கருப்பு நிற நிசான் கார். அது ஒரு சாதாரண விபத்து அல்ல. காருக்குள் நான்கு உயிரற்ற உடல்கள். டீனேஜ் வயதிலான மூன்று பெண் குழந்தைகள் மற்றும் சுமார் ஐம்பது வயதுடைய ஒரு பெண். 19 வயது சைனப், 17 வயது சஹார், 13 வயது கீட்டி, மேலும் 52 வயது ரோனா...
போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில். புனர்வாழ்வு மையம்!
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முழு நாடும் ஒன்றாக - தேசிய வேலைத்திட்டத்தின் செயற்பாட்டு குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், காவல்துறையினர் மாத்திரமின்றி, முப்படையினர் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர், அதன் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், சிவில்...
யாழில். கடற்கரையில் கஞ்சாவுடன் நடமாடிய இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் சுமார் 28 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை இன்பருட்டி கடற்கரை பகுதியில் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இருவரையும் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 28 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழப்பு – மகன் படுகாயம்
வெலிகம, கம்மல்கொட பகுதியில் சட்டவிரோத மின் வேலியில் சிக்கி தந்தை உயிரிழந்த நிலையில் மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தனது மகனுடன் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மாடுகளைக் கட்டுவதற்காகச் சென்றிருந்த போது, அருகிலுள்ள காணியொன்றில் சட்டவிரோதமாக இழுக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மின்சாரக் கம்பியை அமைத்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










