ஊழல் மோசடி! வவுனியா பிரதேசசெயலாளர் சுலோஜினி பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டார்!
வவுனியா மாவட்டத்தின் வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த சுலோஜினி குகன், பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் பணித்தடை செய்யப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஒரு நடவடிக்கை தொடர்பில், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் இலஞ்சச் சட்டத்தின் கீழ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து, பொதுச்சேவைகள் ஆணைக்குழுவானது அவரை பணியில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
செம்மணியில் இன்றும் 5 எலும்புக்கூடுகள் மீட்பு!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று ஒரு குழந்தையின் எலும்புக்கூடு உட்பட 5 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதிதாக 7 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 28ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று (18) திகதி நடைபெற்றது. சான்று பொருட்களாக சிறு பாசிமணி துண்டு, கை வளையல், ஆணிகள் பிளாஸ்ரிக் என்பவை மீட்கப்பட்டுள்ளன. அதவேளை பாரிய உலோக துண்டு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அதற்குள் எலும்புக்கூடுகள் காணப்படுவதனால், அதனை பக்குவமாக சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதனடிப்படையில்...
அம்பாறை வைத்தியசாலையில் கடமையாற்றிய 33 வயது பெண் மருத்துவரை அனுபவித்த பின் கொன்றது இவனா? பொலிசார் தேடுகின்றார்கள்!! நடந்தது என்ன? வீடியோ
கண்டி தெல்தெனியவில் பூட்டப்பட்ட கார் ஒன்றிற்குள் பிசியோதெரபிஸ்ட் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காதலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ள நிலையில் பொலிஸார் முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் பணியாற்றிய, வெலிகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பிசியோதெரபிஸ்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காதலன் தலைமறைவு... தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றினுள் சடலம் ஒன்று இருப்பதாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நேற்று (17) பிற்பகல் 2 மணியளவில் தொலைபேசி மூலம் தகவல் அளித்ததாகக் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள்...
கைதான சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்!
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் எதிர்ப்பு குழுவினால், ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இடம்பெற்ற...
அமெரிக்கா போயும் ஆமத்துறு அடங்கவில்லை!! பாலியல் சேவை பெற முயன்ற போது கைது!! நடந்தது என்ன?
அமெரிக்காவின் பொஸ்டன் நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பாலியல் சேவைகளைப் பெற முயன்ற குற்றச்சாட்டில் கைதான இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு, தனது பல்கலைக்கழகப் பதவியிலிருந்து விலகியுள்ளார். ஆட்கடத்தல் மற்றும் வணிக ரீதியிலான பாலியல் தொழிலை ஒடுக்குவதற்காக பொஸ்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட ‘ஒப்ரேஷன் ரெட் கார்ட்’ (Operation Red Card) என்ற விசேட இரகசிய நடவடிக்கையின் கீழ், கடந்த சனிக்கிழமை ‘ரிவியர்’ (Revere) ஹோட்டலில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 32 வயதான மஹாயாயே வினீத தேரர், அமெரிக்காவின்...
அந்த நரகலோகத்திற்கு திரும்ப போக மாட்டேன்!! 4ம் மாடிக்கு மீண்டும் செல்லமாட்டேன் என அழுது புலம்பும் சுரேஷ் சலே!
நான் மீண்டும் அந்தத் தடுப்புக் காவல் கூடத்திற்குச் செல்ல விரும்பவில்லை. அந்த இடம் ஒரு நரகம் போன்றது. எனக்கு மரணமே பொருத்தமானது " என அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தனது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலின் கீழ் இருந்த சுரேஷ் சலே, திடீர் உடல்நலக் குறைவு காரணமாகத் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை இந்த நிலையில், மருத்துவமனையில் சுரேஷ் சலே,...
திருகோணமலை கடற்படை முகாம் சித்திரவதை கூடம்; சீல் வைக்க நடவடிக்கை!
திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ‘கன் சைட்’ என்ற பெயரில் இயங்கி வந்த மிகவும் இரகசியமான நிலத்தடி சிறைச்சாலை வளாகத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சீல் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் 60 பேருக்கும் அதிகமான நபர்களை இங்கு தடுத்து வைத்து, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கப்பம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல பாரிய குற்றங்களுடன் இந்த இடத்திற்கு தொடர்பு இருப்பதாக நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் விசாரணை இந்த நிலையில், புலனாய்வு பிரிவினரின் இந்த நடவடிக்கை அவ்விசாரணைகளின் தீர்க்கமானதொரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்த இரகசிய...
கோட்டாவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர கைது!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அரச நிறுவனங்கள் இரண்டில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்ததால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் பகுதியில் முஸ்லீம் மதகுருவை தன்னுடன் படுக்க வைத்த மனைவியும் அதனை வீடியோ எடுத்த கணவனும் பிடிபட்டது எப்படி?
புத்தளம் "தில்லயடி" பகுதியில் வசிக்கும் 30 மற்றும் 35 வயதுடைய தம்பதியினர், "மல்வானை" பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் பணியாற்றும் மெளலவி ஒருவரை ஏமாற்றி, அவரை ஆபாசமான நிலையில் வீடியோ எடுத்து, பணம் பறிக்க முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்த தம்பதியினர் புத்தளம் ஏரிக்கு அருகில் வைத்து மெளலவியை சந்தித்து, அவருடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டு, தொடர்ந்து தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்துள்ளனர். பின்னர், அந்த பெண் மெளலவியை தனது வீட்டிற்கு வருமாறு...
சற்று முன் அரியாலையில் ரயில் முன் பாய்ந்து ஒருவர் பலி!!
முள்ளிப்பகுதியில் ரயில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன் லக்மால் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ சிப்பாய் விடுமுறையில் வீட்டுக்கு சென்ற நிலையில் , விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்ட காலம் கடமைக்கு திரும்பாது , இன்றைய தினம் மீண்டும் கடமைக்கு திரும்பிய வேளை பலாலி இராணுவ அதிகாரிகள் , நீண்ட காலம்...









