யாழில் சூட்கேஸில் கஞ்சா கடத்தல்; பொலிஸாரை கண்டதும் தப்பியோடிய இளைஞர்கள்!

0

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் வழி மறித்துள்ளனர். அதனை அடுத்து இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளையும், தாம் எடுத்து சென்ற பயண பொதியையும் கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.கைவிட்டு சென்ற பயண பொதியை பொலிஸார் சோதனை செய்த போது,...

யாழில் கள்ள மண் ஏற்றி வந்த டிப்பர் கொடூர விபத்து! 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி! Video

0

யாழில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 பேர் பலியாகியுள்ளாதாகத் தெரியவருகின்றது. இவர்கள் கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  டிப்பர் வாகனம் கள்ள மண் ஏற்றிச் சென்ற போது சாவகச்சேரிப் பொலிசார் துரத்திச் சென்ற வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த விபத்தில் வட்டக்கச்சி  பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய ராஜீவன் விதுசன் மற்றும்  அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நாகராஜா ஜீவராஜ்  ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

75 நாடுகளின் விசாக்களை முடக்கியது அமெரிக்க வெளியுறவுத்துறை! தீவிரமாகும் நடவடிக்கை!

0

ஜனவரி 21 முதல் ஈரான், ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கும் நடைமுறைகளை அமெரிக்கா இடைநிறுத்தவுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை திணைக்களம் வெளியிட்டுள்ள குறிப்பாணையின்படி, ஜனவரி 21 முதல் 75 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து மற்றும் நைஜீரியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. விசா விண்ணப்பதாரர்களைப் பரிசோதிக்கும் முறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் வரை, தற்போதைய சட்டங்களின் கீழ் விசாக்களை...

மன்னார்க்குப் பெருமை: தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக கிரிஜா அருள்பிரகாசம் நியமனம்!

0

இலங்கையின் விளையாட்டு மற்றும் கல்வித்துறையில் ஆளுமைமிக்க ஒரு வீராங்கனையாகத் திகழ்ந்த மன்னார் மண்ணின் புதல்வி செல்வி கிரிஜா அருள்பிரகாசம், தமிழக மாநிலப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியின் (Tamil Nadu State Women’s Netball Team) பயிற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எல்லைகளைக் கடந்து, ஒரு இலங்கையராகத் தென்னிந்திய மாநில அணியொன்றின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது இலங்கை விளையாட்டுத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய கௌரவமாகும். கல்வியிலும் விளையாட்டிலும் ஒரு சரித்திர சாதனை கிரிஜா அருள்பிரகாசம் அவர்கள் அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39-வது பட்டமளிப்பு விழாவில், ஊடகக் கற்கைகள் துறையில்...

தை மாதத்திற்கான ஒவ்வொரு நட்சத்திரத்திற்குமான இராசி பலன்கள்!

0

மேஷம்: அசுவினி..:தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஞான மோட்சக்காரகன் சஞ்சரித்தாலும், லாபாதிபதி சனி லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சந்திப்பதுடன், யோகக்காரகன் ராகுவும் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் கை கொடுக்கும். அந்நியரால் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில் தொடங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரிகள்,...

டுபாயிலிருந்து கட்டுநாயக்கா வந்த இலங்கை பெண்ணிற்கு நடந்த கொடுமை! நடந்தது என்ன?

0

டுபாயில் இருந்து கட்டுநாயக்க வந்த விமானத்தில் இலங்கை பெண் ஒருவரிடமிருந்து பெரும் தொகை பணம், நகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணின் 1,314,400 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை திருடிய சீன நாட்டவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.இஸ்ரேலில் குழந்தை சுகாதார ஆலோசகராக பணி புரியும் போரலஸ்கமுவவைச் சேர்ந்த 52 வயது இலங்கைப் பெண்ணின் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் நகைகளை சீன நாட்டவர் திருடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் நேற்று காலை 08.15...

இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் – மூன்று இளைஞர்கள் கைது..!

0

இந்தியாவில் இருந்து புறாக்களை கடத்தி வந்த நெடுந்தீவை சேர்ந்த மூன்று இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து கூடுகளில் புறாக்களை அடைத்து நெடுதீவுக்கு படகில் கடத்தி வந்த இளைஞர்கள் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , புறாக்களை கடத்தி வந்த மூன்று இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் அவர்களால் கடத்தி வரப்பட்ட புறாக்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பிருத்தானியாவில் இலங்கை குடும்பப் பெண் நிரோவை குத்திக் கொன்ற கணவன்!! நீதிமன்றில் வெளிவந்த பரபரப்பு தகவல் இதோ!!

0

பிரிட்டனின் கார்டிஃப் (Cardiff) நகரில் வசித்து வந்த 32 வயதான இலங்கை பெண் நிரோதா நிவுன்ஹெல்லா (Nirodha Niwunhella), ஒரு அமைதியான குடியிருப்புப் பகுதியில் கொடூரமான முறையில் Stabbed to death (குத்திக் கொலை) செய்யப்பட்டுக் கிடந்தார். காலை 7.37 மணியளவில் ரத்த வெள்ளத்தில் இரண்டு கார்களுக்கு இடையே பிணமாகக் கிடந்த இவரைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மருத்துவக் குழுவினர் விரைந்து வந்தும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்...

யாழ் போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் வந்த நோயாளி பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வெட்டிவிட்டு தப்பி ஓட்டம்!!

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர் , பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் அதிகாலை 1.40 மணியளவில் நிறை போதையில் இரத்த காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் 24ஆம் இலக்க விடுதியில் தங்க வைத்து சிகிச்சை வழங்கப்பட்டது. அதன் போது, தாதிய உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களுடன் முரண்பாடு , தூஷண வார்த்தைகளை பேசி , விடுதியில் ஏனைய நோயாளர்களுக்கு...

மட்டு’வில் கணவனும் மனைவியும் விசமருந்தி மரணம்!

0

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய முதியவரும், அவரது 73 வயதுடையுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவத்தில் உயிரிழந்த முதிய பெண் தீராத நோயால் கட்டிலில் படுத்த நிலையில் இருந்துவர, அவரை அவரது கணவர் பராமரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கணவர் நேற்று மாலை 6.00 மணியளவில் மதுபோதையில் வீட்டுக்கு வந்ததாகவும்,...