மட்டு’வில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம்!! அண்ணன் இறந்த துக்கம்! தங்கையும் பலி!
மட்டக்களப்பு பகுதியில் பாசமலர் திரைப்படத்தை மிஞ்சிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது களுவாஞ்சிக்குடிப் பகுதியைச் சொந்த இடமாகவும் நாவற்குடாவை வசிப்பிடாமாகவும் கொண்ட . மட்டக்களப்பு சிவானந்தா தேசியபாடசாலையின் பிரதி அதிபராக இருந்து ஓய்வு பெற்ற 62 வயதான சங்கரநாராஜணபிள்ளை மணிவண்ணன் என்பவர் கடந்த 15ம் திகதி திடீரென நோய்வாய்ப்பட்டு மரணமானார். இவர் இறந்த தகவல் கேட்டு மரண வீட்டுக்குச் சென்ற இவரது சகோதரியான ஏறாவூர் 5ம் குறிச்சியில் வசித்து வந்த பிரியதர்சினி பகீரதன் எனும் 57 வயதான குடும்பப் பெண் அங்கு மரணமடைந்துள்ளார். இச்...
யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தில் தங்கத்தை மர்ம பகுதிக்குள் வைத்து கடத்தி வந்த பெண்கள் பிடிபட்டது எப்படி?
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, கப்பல் ஊடாக தங்கம் கடத்துவதற்கு முயற்சித்ததாக கூறப்படும் சுமார் 26 பேரின் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய பிரஜைகள் இருவரிடம் தலா 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சூரியன் செய்திப் பிரிவுக்கு உறுதிப்படுத்தினார். காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கு முன்னெடுக்கப்படும் சிவகங்கை பயணிகள் கப்பலில் பயணிக்கவிருந்த இலங்கை மற்றும் இந்திய பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை கைது செய்யப்பட்டவர்களில் 09 இலங்கையர்களும், 17 இந்திய பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர். கைது...
இன்றைய (18.06.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று சந்திரன் சஞ்சாரம் மன சஞ்சலத்தை ஏற்படுத்தும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும். ராசிநாதன் செவ்வாயின் சஞ்சாரத்தால் திடீர் கோபம் ஏற்படும். வீண் செலவும் இருக்கும். பிடிவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6 ரிஷபம் இன்று தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தன போக்கு காணப்படும். வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல் சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு வழி செய்யும். பணவரத்து திருப்தியாக இருக்கும். செலவும் கூடும்....
தமிழர் பிரதேசத்தில் கலியாண வீட்டில் நடந்த கடும் சண்டை! தடுக்கச் சென்ற பொலிசார் மீதும் தாக்குதல்! நடந்தது என்ன?
கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இரு குழுவினரிடைய ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொட்டக்கலை நகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தலவாக்கலை வட்டக்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களால் திருமண விழா ஒன்று இன்று (17) மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக வந்தவர்களில் மதுபோதையில் இருந்த இரு குழுவினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது. தகவலறிந்த பொலிஸார் உடனடியாக அங்கு விரைந்து அந்த குழுவினரை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளனர். இதன்போது மோதலில் ஈடுபட்டிருந்த குழுவினரால், அங்கு சமாதானத்தில் ஈடுபட்ட...
மட்டு’வில் மோட்டார் சைக்கிள் விபத்து : ஆசிரியை பிரேமநந்தினி பலி!
மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளும், மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் நோக்கிப் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஆசிரியையை உடனடியாக மீட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு வித்தியாலயத்தில் பணியாற்றி வந்த, தம்பிலுவில் பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் வசித்து வந்தவருமான திருமதி பிரேமநந்தினி மிதுலோஜன் (40) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...
இலங்கை யுவதியிடம் வெளிநாட்டு மாப்பிளை நடாத்திய லீலை!! அவதானம் மக்களே!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும். சமூக வலைத்தள காதல் மோகத்தால், தங்க நகைகளை அடகு வைத்து 5 இலட்சம் ரூபாயை ஏமாந்து, நடுத்தெருவுக்கு வந்துள்ள இலங்கை யுவதி ஒருவரின் அதிர்ச்சிப் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த குறித்த யுவதிக்கு, சில மாதங்களுக்கு முன்பு முகநூல் (Facebook) வழியாக ஒரு அறிமுகம் கிடைத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஒரு அழகான இளைஞன் என்று கூறி பழகிய அந்த நபர், குறுகிய காலத்திலேயே தனது அன்பான பேச்சால் யுவதியின் மனதைக் கொள்ளையடித்துள்ளார். ஆன்லைன் நட்பு, அடுத்த சில நாட்களிலேயே தீவிர காதலாக...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய்க்கு உயிராபத்து?
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் உயர் நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்து மீண்டும் உறுதிப்படுத்தியது. அதேவேளை உயர் நீதிமன்றினால் , வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும் மேல் நீதிமன்று நேற்றைய தினம் விடுதலை செய்தது. புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு , கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ட்ரயல்ட் பார் முறையில்...
புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் மனைவி பரபரப்பு தகவல்!! கணவனின் ஆடைகள் அணைத்தையும் களைந்தார்கள்! அதன் பின்…
அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒப்புக்கொண்டுள்ளதாக சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே தெரிவித்துள்ளார். இன்று (17) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சுரேஷ் சலே மனைவி , சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை சுரேஷ் தொடர்ந்து உண்பதோ, குடிப்பதோ இல்லை. அவர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. நாளுக்கு நாள் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது. பேசுவதற்கும் சற்று சிரமப்படுகிறார். அவரால்...
யாழ் கண்டி வீதியில் பயங்கர விபத்து! இருவர் பலி!
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் அநுராதபுரம், பூனேவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியின் பின்புறத்தில் மற்றொரு பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 35 மற்றும் 43 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
யாழில் மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்கும் மாடுக் கொள்ளையர்கள்!! 2 பேர் கைது!! அதிர்ச்சித் தகவல்!
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கும்பல் ஒன்று தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்டு இருவரிடம் இருந்தும் 5.2 கிராம் மற்றும் 5கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற...










