இன்றைய (19.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9 ரிஷபம் இன்று எதிர்பார்த்த செல்வசேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில்...
யாழில். கணவனை கைது செய் மூன்று நாட்களாக சித்திரவதை! மனைவி முறைப்பாடு
தனது கணவனை களவு குற்றச்சாட்டொன்றில் கைது செய்து போதைப்பொருள் வழக்கில் கைது செய்ததாக பொலிஸார் குற்றம் சாட்டுகின்றனர் எனவும், கைது செய்யப்பட்டவர் மீது சித்திரவதைகளை புரிந்துள்ளதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அது குறித்து மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவரின் மனைவி தெரிவிக்கையில், கடந்த 14ஆம் திகதி வீடு ஒன்றில் களவு ஒன்று இடம் பெற்றதாக அது தொடர்பில் விசாரிக்க வேண்டும் என எனது கணவர் உள்ளிட்ட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவரின் கைது விவரம் தொடர்பில்...
யாழ் பலாலி வீதியில் இடம்பெற்ற விபத்தில் 48 வயது குடும்பஸ்தர் மரணம்!
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுகிர்தர் (48 வயது) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார். கடந்த 14 ஆம் திகதியன்று பலாலி வீதியில் மேற்படி குடும்பஸ்தர் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிறிதொரு உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இதன்போது படுகாயமடைந்த அவர், உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...
யாழ் பல்.கலையில் ராக்கிங் என்ற பெயரில். மாணவிகளுக்கு சீண்டல்கள் செய்யும் சீனியர்கள்!!கண்டுகொள்ளாத நிர்வாகம்! சிஐடி விசாரணை!!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. பகிடிவதை எனும் பெயரில் , பாலியல் அத்துமீறல்கள் , துஸ்பிரயோகங்கள் , சீண்டல்கள் என்பவற்றுடன் உடலியல் ரீதியான தாக்குதல்களும் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக கற்கைகள் பீடத்தில் பகிடிவதைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை தருமாறு...
இன்றைய (18.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகமான போக்கு காணப்படும். சரக்குகளை அனுப்பும் போதும் பாதுகாத்து வைக்கும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கிடப்பில் இருந்த கடன்கள் பைசலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் வேலை பற்றி மனதில் திருப்தியற்ற எண்ணம் உண்டாகும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மனவருத்தத்தை தருவதாக இருக்கலாம். கவனமாக கையாள்வது நல்லது....
யாழில் 34 வயது 2 பிள்ளைகளின் தந்தையான ஜெனிஸ்ரன் மனைவியின் சகோதரியின் மகளான சிறுமியுடன் ஓட்டம்! பொலிஸ் தேடுகின்றது!
கேவலில் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் புத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட 34 வயதுடைய செல்வராசா ஜெனிஸ்டன் என்பவர், அவரது மனைவியின் சகோதரியின் மகளான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த துஷ்யந்தன் யது என்பவரைக் கூட்டிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபருக்கு நிறைமாதக் கர்ப்பிணி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இருக்குன்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் மருத்துவத் தாதியர் பயிற்சி நிலையத்தில் கல்வி கற்கும், 18 வயது பூர்த்தியாகாத தனது பெறாமகள் முறையான குறித்த சிறுமியைக் கூட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறுமி தனது...
“கணவரின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை”: பிரிட்டன் புதிய விசா மாற்றத்தால் இலங்கையர்கள் சந்திக்கும் சவால்கள்!
பிரிட்டனின் குடியேற்ற விதிகளில் முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் அங்கு வசிக்கும் இலங்கை குடிமக்கள் உட்பட பல வெளிநாட்டினருக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. காலவரையற்ற குடியிருப்பு அனுமதி (ILR) பெற வேண்டிய குறைந்தபட்ச காலத்தை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தும் திட்டம் அவர்களின் குடும்பத் திட்டங்கள், பொருளாதாரம் மற்றும் மனநிலையை பாதிக்கக்கூடும் என அவர்கள் கூறுகின்றனர். தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும், தன்னும் மனைவியும் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்ற பின் குழந்தை பெற திட்டமிட்டிருந்ததாக கூறுகிறார். ஆனால் காத்திருக்கும் காலம் 10...
இன்றைய (17.02.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த பூசல்கள் அகலும். பெண்களுக்கு எதைபற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இ, உ, ஒ, வ, வி, வே, இன்று...
பிரித்தானியாவில் இரட்டை குடியுரிமை வைத்துள்ள இலங்கையர்களுக்கு அதிர்ச்சித் தகவல்! நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் அபாயம்!
பிரித்தானியா தனது குடியேற்றக் கொள்கையில் மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் இரட்டை குடியுரிமை வைத்துள்ள பலர் பிரித்தானிய எல்லைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முக்கிய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்: அமலாக்க தேதி: எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் தேதிக்கு பின்னர் இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. பயண ஆவணங்கள்: வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டை பிரித்தானிய குடிமக்கள், செல்லுபடியாகும் பிரித்தானிய கடவுச்சீட்டு (Passport) அல்லது உரிமைப் பத்திரத்தை (Certificate of Entitlement) பிரித்தானிய கடவுச்சீட்டுடன் காட்ட வேண்டும். பயணத் தடை: இந்த ஆவணங்கள் இல்லையெனில், அவர்கள் பிரித்தானியாவிற்கு...
யாழ் கோப்பாயில் செல்வரஞ்சன் அடித்துக் கொலை! 3 பேர் தலைமறைவு!
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக...








