யாழில் உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து.!

0

உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஒன்று சிறுப்பிட்டிப் பகுதியில் இன்று அதிகாலை வீதியோரம் இருந்த தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள காணிக்குள் பாய்ந்தது. யாழ். நகரிலிருந்து பருத்தித்துறைக்கு உந்துருளிகளை ஏற்றிச் சென்ற கனரக வாகனமே விபத்தில் சிக்கியுள்ளது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது எனக் கூறப்படும் இந்த விபத்தின்போது வாகனம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்புக் கம்பம் பலத்த சேதங்களுக்குள்ளான போதும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்டதா? அல்லது சாரதியின் நித்திரைத்...

யாழ் வடமராட்சியில் இளைஞன் உயிர் மாய்த்தான்!

0

செம்பியன்பற்று, தனிப்பனை பகுதியில் இளைஞன் ஒருவன் தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. உயிரை மாய்த்துக்கொள்வதற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். குறித்த இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.

யாழ் வடமராட்சி கிழக்கு கடலில் குளித்தவர்களுக்கு நடந்த பயங்கரம்!! Photos

0

இது ஒரு சமூகவிழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்ட பதிவாகும்...  நேற்று (2025.12.14) ஞாயிற்றுக்கிழமை உடைகள் சேகரித்தல் செயற்பாட்டினை மருதங்கேணி, உடுத்துறை மற்றும் வடமராட்சி ஆகிய இடங்களில் மேற்கொள்ளும் போது பொழுதுபோக்கிற்காகவும், ஒரு ஓய்விற்காகவும் எமது சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பின் அணியினர் நாம் தாளையடி கடற்கரையில் விளையாடிக் கொண்டு இருந்தோம்... நாங்கள் சென்று சிறிது நேரத்தில் அங்கு ஏற்கனவே குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தனர் எமக்கு அந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்வது என்று எதுவுமே தெரியவில்லை உதவி அழைப்புகளை நாடிய போது அவர்களிடம்...

கிளிநொச்சியில் காயங்களுடன் பற்றைக்குள் குற்றுயிராக மீட்கப்பட்ட நபர்; நடந்தது என்ன?

0

கிளிநொச்சியில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு வடலிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தினம் (16) குறித்த நபர் காயங்களுடன் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் பற்றாஇக்குள் கிடந்த நிலையில், மக்கள் சென்ற போது குற்றுயிரும் குலையுயிருமாக இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அவரை மீட்டபோது உடலில் அடிகாயங்கள் காணப்பட்டுள்ளது. பிரான்ஸ் கடவுச்சீட்டுடன் ஜேர்மன் செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன்; சோதனையில் சிக்கியது எப்படி? பிரான்ஸ் கடவுச்சீட்டுடன் ஜேர்மன் செல்ல முயன்ற கிளிநொச்சி இளைஞன்; சோதனையில் சிக்கியது எப்படி? வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி பனை...

இலங்கையில் அதிகரித்த எயிட்ஸ் நோயாளர்கள்!

0

இலங்கையில் எயிட்ஸ் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் 600 இற்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்புத் திட்டம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 6% நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எயிட்ஸ் பாதிப்பினால் சுமார் 30 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. தொற்று ஏற்பட்டவர்களில் ஆண்களே அதிகம். மேலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களில் 68 ஆண்களும் 3 பெண்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு ஏனையோர்...

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை!

0

வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் வீதித் தடைகள் காரணமாக சேவைக்கு வர முடியாத அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்றைய தினம் (16) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'டித்வா' புயல் காரணமாக தமது வதிவிடத்திலிருந்து சேவை நிலையத்திற்கு பொதுப் போக்குவரத்துச் சேவைகள் தடைப்பட்டதால் சேவைக்கு சமூகமளிக்க முடியாத உத்தியோகத்தர்கள், வீதித் தடைகள் காரணமாக அல்லது...

மட்டு’வில் விபத்து! தொழில்நுட்ப கல்லூரி மாணவன் கிசாளன் பலி!

0

இன்று மட்டு கிரானில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்த மட்டு தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் இன்று மதியம் இரண்டு மணியளவில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கும்புறுமூலைச் சந்தியில் மோட்டார்சைக்கிள் மற்றும் டிப்பர் என்பன மோதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின்( Ref&AC Technician) கற்கை நெறியினை தொடர்ந்து கொண்டிருக்கும் கிரானைச் சேர்ந்த சுரேந்திரன் கிசாளன் என்பவராகும் மிகுந்த கெட்டித்தனமான ஒழுக்கம் மிக்க இம் மாணவன் நாளை தனது பாடநெறியைப்பூர்த்தி செய்து அதற்கான நைற்றா பயிற்சி...

சமூக ஊடகங்களின் ஊடான மோசடி அதிகரிப்பு

0

சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் மோசடிகள் அதிகரிப்பது குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக சமூக ஊடகத் தளங்கள் ஊடாக இணையவழி மோசடிகள் மற்றும் நிதி மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதன் காரணமாக மிகவும் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலம் மற்றும் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை அனர்த்த நிலையை பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் மக்களின் நம்பிக்கை மற்றும் அவசர நிலையை...

ரி-56 ரக துப்பாக்கியுடன் 64 வயதுடைய முதியவர் கைது – பல கொலைகள் திட்டமிடப்பட்டிருந்ததாம்

0

எல்பிட்டிய - படபொல, சடாமுல்ல பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து ரி 56 ரக துப்பாக்கி, 02 மகசின்கள் மற்றும் 45 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சாதமுல்ல பகுதியை சேர்ந்த 64 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சந்தேகநபர் ஒரு திட்டமிட்ட குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும், இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி பல கொலைகளைச் செய்யத் தயாராகி வந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில். புதுவகை மோசடி – மக்களை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல்

0

யாழ்ப்பாணத்தில் , உடைந்த தொலைபேசியை வைத்து ,நபர்களிடம் பணம் பறிக்கும் மோசடிக்காரன் தொடர்பில் மக்களை விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வோகோ ரக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் நபர் ஒருவர் , ஆள் நடமாட்டம் அற்ற வீதிகளில் காத்திருந்து , வீதியில் தனியாக வரும் நபர்களை இலக்கு வைத்து , அவர்களை பின் தொடர்ந்து முந்தி சென்று , பின் வீதியோரமாக நின்று , அவர்களை முந்தி செல்ல விட்ட பின்னர் , பின்னர் மீண்டும் அவர்களை துரத்தி சென்று , வீதியில்...