திருகோணமலை இளம் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு!

0

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருகோணமலை இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் செய்த நிலையில் ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுவதுடன், குறித்த குடும்பஸ்தர் திருகோணமலையில் வீடியோ கடையை நடாத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவத்தில் திருகோணமலை அலஸ்தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதான செல்வநாயகம் சத்தியகுமார் குடும்பஸ்தரே உயிரிழந்தவர் ஆவார் .

பணம் பறிக்கும் மோசடி வலை! பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

0

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்களாக நடித்துப் பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி குழுக்கள் குறித்து இலங்கை மக்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள், இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதி மோசடி விசாரணைப் பிரிவு (FCID) அதிகாரிகள் என்றோ அல்லது வங்கிப் பிரதிநிதிகள் என்றோ தவறாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி ஏமாற்ற முயற்சிப்பதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். குறித்த மோசடி குழு பணமோசடி அல்லது நிதி குற்றங்கள் போன்ற பாரதூரமான குற்றங்களுக்காக நீங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்றும், உடனடி கைது அல்லது...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடான சட்டமூலம் தயார்!

0

இலங்கையில் கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கி மாற்றீடாக அரசு கொண்டுவர உத்தேசித்திருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இப்போது தயாராகி விட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. இப்போது முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயலைச் செய்பவர்களுக்கு மேல் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். “பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் – எண். 2026” என்ற புதிய சட்டம் நீதி மற்றும்...

புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டியவர்கள் கைது!!

0

புதுக்குடியிருப்பு – தேவிபுரம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) மாலை புதையல் தோண்டிய 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.சந்தேகநபர்கள் 35 முதல் 48 வயதுக்குட்பட்ட அநுராதபுரம், இனாமலுவ, மொரகொட, கலேவெல, மடாடுகம மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.சந்தேகநபர்களிடமிருந்து அகழ்வாராய்ச்சி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுந்தீவு கடலில் வீழ்ந்த பிறேமகுமார் சடலமாக மீட்பு.!! வீடியோ

0

நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் தேங்காய் மூட்டையுடன் “நெடுந்தாரகை” பயணிகள் படகில் ஏறுவதற்கு முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (2025.12.10) காலை 6.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு கிழக்கு, 15ம் வட்டாரம், தொட்டாரம் பகுதியைச் சேர்ந்த பரராசசிங்கம் பிறேமகுமார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகளலால் மேற்படி சடலம் மீட்கப்பட்டது.

யாழில் பஸ்சிலிருந்து வீழ்ந்து சிவகுமார் பலி!

0

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருந்தார். இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார். இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார். அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

வென்னப்புவ உலங்கு வானூர்தி விபத்தின் பின்னணி: காரணம் வெளியானது!

0

வென்னப்புவ பிரதேசத்தில் அண்மையில் விபத்துக்குள்ளான விமானப்படைக்கு சொந்தமான உலங்கு வானூர்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே கிங் ஓயாவில் தரையிறக்க நேரிட்டதாக, அதன் துணை விமானி, லெப்டினன்ட் எரங்க சாமர ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மாரவில நீதிவான் தினிந்து சமரசிங்க முன்னிலையில் நடைபெற்றபோது, சாட்சியமளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு வென்னப்புவவுக்கு மேலே உலங்கு வானூர்தி பறந்துகொண்டிருந்தபோது, கிங் ஓயா பாலம் மற்றும் அதை சுற்றியுள்ள மக்கள், கைகளை அசைத்து உதவி கோரியதாகத் துணை விமானி தெரிவித்தார். எனினும், அங்கு...

காணாமல்போன அனகொண்டா: தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் என்ன நடந்தது?

0

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து ஒரு அனகொண்டா காணாமல் போனதாக தெஹிவளை காவல்துறையில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் நிர்வாக பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். மிருகக்காட்சிசாலையில் உள்ள கண்ணாடி மூடிய கூண்டில் வைக்கப்பட்டிருந்த குட்டி அனகோண்டா, கடந்த 7 ஆம் திகதி காணாமல் போயுள்ளது. காவல்துறையினரும் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த ஒரு குழுவும் அனகொண்டாவை கண்டுபிடிக்க விசாரணையைத் தொடங்கியுள்ளதாக நிர்வாக பணிப்பாளர் தெரிவித்தார். மேலும் மஞ்சள் அனகொண்டா என்று அழைக்கப்படும் இந்த குட்டி அனகொண்டா யாராலும் கடத்தப்பட்டதா அல்லது கண்ணாடி கூண்டில் உள்ள ஒரு சிறிய...

உலகின் முதல் சமூக ஊடகத் தடை அவுஸ்திரேலியாவில் அமுல் – 1.5 மில்லியன் கணக்குகள் நீக்கம்!

0

அவுஸ்திரேலியா உலக வரலாற்றில் முதல் முறையாக, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகங்களை முற்றிலும் தடை செய்யும் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. பதின்ம வயது சிறுவர்களின் மனநலம், பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் கீழ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ், டிக்டாக், ஸ்னாப்சாட், ட்விட்ச், கிக், எக்ஸ் (முன்னதாக ட்விட்டர்), யூடியூப் மற்றும் ரெட்டிட் உள்ளிட்ட முக்கிய சமூக ஊடக தளங்கள் அடங்கும். அமுல்பாட்டிற்கு வந்த உடனேயே, 1.5 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் அந்தந்த தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும்,...

திருகோணமலை விபத்தில் புது மாப்பிளை மரணம்!

0

திருகோணமலை–மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள சீனக்குடா பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில், ஜமாலியாவை சேர்ந்த 27 வயது இளைஞர் ராசித் உயிரிழந்தார் இவர் திருகோணமலையில் நன்கு அறியப்பட்ட உதைப்பந்தாட்ட வீரர் ராஜ்கபூர் அவரின் மகனும் ஆவார் . மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, இராணுவ வாகனம மோதியதில் இவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தார்.இவர் திருமணம் செய்து ஒரு மாதம்கூட ஆகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.இவ்விபத்து தொடர்பான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.