யாழ் பண்டத்தரிப்பு குளத்தில் நீராடச் சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் மீட்கப்பட்டது!

0

பண்டத்தரிப்பு தவிட்டைக் குளத்தில் நீராடச் சென்று நேற்று காணாமல் போன இளைஞன் இன்று (09-12-2025) காலை கடற்படையைச் சேர்ந்த சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் போன இளைஞன் பிரான்பற்று பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர் ஆவார்.

உயர் தரப்பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரி 12 இல் ஆரம்பம் !!!

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை, எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி முதல் மீண்டும் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால் உயர் தரப் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதேநேரம் ஏனைய வகுப்புகளுக்கான மூன்றாம் தவணை பரீட்சை நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமரா; உரிமையாளரின் மொபைலில் காணொளிகள்!

0

கொழும்பு மஹரகம - தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் ரகசிய கமராவை பொருத்தி பெண்கள் ஆடை மாற்றுவதை காணொளி எடுத்த குற்றச்சாட்டில் கடையின் உரிமையாளர் தலங்கம பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் நேற்று (8) கைதுசெய்யப்பட்டுள்ளார். உரிமையாளரின் கையடக்கத் தொலைபேசியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அணியறைக்குள் பெண்கள் ஆடை மாற்றும் காணொளிகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சந்தேக நபரின் கையடக்கத் தொலைபேசியில் உள்ள காணொளிகள்...

காரைநகர் கசூரினா கடற்கரையில் டெல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது !

0

நேற்று அதிகாலை காரைநகர் கசூரினா கடற்கரைப் பகுதியில் டொல்பின் ஒன்று அரை குறை உயிருடன் கரையொதுங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரையில் வெள்ளை நுரை – விஞ்ஞான விளக்கம்

0

இன்று பருத்தித்துறை இறங்குதுறை கடற்பகுதியில் கரையொதுங்கிய வெள்ளை நுரை மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பொதுவாக இயற்கை காரணங்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு. விஞ்ஞான ரீதியான காரணங்கள் அலைகள் + கடல் நீரில் உள்ள இயற்கை பொருட்கள் கடலில் உள்ள பாசி, உயிரினங்களின் சிதைவுகள் போன்றவை அலைகளுடன் கலந்து நுரை போன்ற வடிவத்தை உருவாக்கும். பாசி அதிகரிப்பு (Algal Bloom) கடலில் பாசி திடீரென அதிகரிக்கும் போது அவை சிதைந்து நுரை உருவாக வழிவகுக்கும். மழைக்கால ஓடை நீர் மழையால் நிலத்திலிருந்து கடலுக்குள் வரும் உரம், சாக்கடை...

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

0

யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   யாழ், நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் சிறிய படகொன்றில் பண்ணை கடற்பகுதிக்கு சென்று , படகில் இருந்து குதித்து கடலில் நீச்சல் அடித்த போது அவர்கள் சுழிக்குள் அகப்பட்டு , கடல் நீரில் தத்தளித்த வேளை பண்ணை பகுதியில் நின்றவர்கள் அதனை அவதானித்து , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கியதுடன் ,...

மட்டக்களப்பில் பிக்கப் வாகனம் மோதியதில் குடும்பப் பெண் பலி!

0

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள  தாமரைக்கேணி, சவுக்கடி வீதி, நாற்சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பிக்கப் வாகனமொன்றில் மோதுண்டு குடும்பப் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். சனிக்கிழமை  மாலை இடம்பெற்ற இவ்விபத்தில் ஏறாவூர் மீராகேணி, நேயம் கிராமத்தைச் சேர்ந்த ரீ. சாமிளா (வயது 46) என்ற இரு பிள்ளைகளின் தாயே பலியாகியுள்ளார், சம்பவ தினம்  பகல் உணவுக்காக அவர் சவுக்கடியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்று பகல் உணவை முடித்து விட்டு பிற்பகல் 04.00 மணி அளவில் தனது...

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டு பொருட்களை மீட்க முற்பட்டவர் எருமை தாக்கி பலி!!

0

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட தனது வீட்டில் இருந்து பொருட்களை சேகரிக்க முயன்றபோது நான்கு பெண் பிள்ளைகளின் தந்தை  எருமை மாடு தாக்கியதில் உயிரிழந்தார். 30 ஆம் திகதி, தனது வீட்டிற்கு அருகில் எருமைமாடு தாக்கியதில் தெஹியட்டகண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் பொலன்னறுவை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பொலன்னறுவை பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஐந்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த  மனம்பிடிய மகந்தோட்டையைச் சேர்ந்த ரோஷன் குமாரசிறி என்பவரே உயிரிழந்துள்ளார். சமீபத்தில் தனது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் அடித்துச் செல்லப்பட்ட...

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு காத்திருக்கும் ஆபத்து; பலத்த மின்னல், மண்சரிவு அபாய எச்சரிக்கை!

0

நாட்டில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (06) மாலை வெளியிட்டுள்ளது.இதன்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு...

வீடுகளை இழந்தோருக்கு மாதந்தோறும் 25,000 வாடகை கொடுப்பனவு!

0

அண்மையில் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பாரிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் இன்று (டிசம்பர் 5, 2025) பாராளுமன்றத்தில் ஒரு விரிவான நிவாரணத் தொகுப்பை அறிவித்தார். வீடுகளை இழந்தோருக்கும், வாழ்வாதாரத்தை இழந்தோருக்கும் உடனடி உதவிகளை வழங்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: வீடமைப்பு மற்றும் வாடகை கொடுப்பனவு: வீடுகளை இழந்த மக்களுக்கு மாற்று வசிப்பிட வசதிகளை உறுதி செய்யும் வகையில், ஜனாதிபதி அவர்கள்...