முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிள்ளைகளுடன் படுத்திருந்த 35 வயது குடும்பப் பெண்ணிற்கு நள்ளிரவு கூரை பிரித்து உள்ளே சென்றவன் நடத்திய கொடூரச் செயல்!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்பப் பெண் மீது வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு புதியகுடியிருப்பு கிராமத்தில் அதிகாலை 1 மணியளவில், வீட்டினுள் தாயும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்த வேளையில், வீட்டுக் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த இனந்தெரியாத நபர் ஒருவர், அந்தப் பெண்தலைமைத்துவ குடும்பத்தலைவி மீது தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான பெண் கூக்குரல் இட்டமையையடுத்து அயலவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர்...

கண்கள் மூடினாலும் மறையாத பார்வை – சீன ஆராய்ச்சியாளர்களின் புதிய தொழில்நுட்ப புரட்சி!

0

"கண்ணை மூடிக்கொண்டே என்னால் பார்க்க முடியும்" என்று யாராவது சொன்னால், அவர்களை மந்திரவாதி என்று நினைப்போம். ஆனால், இனி அப்படிச் சொல்பவர்களை 'விஞ்ஞானி' என்று அழைக்கலாம். ஆம், இனி முழு இருட்டிலும், ஏன்... கண்களை மூடிய நிலையிலும் கூட உங்களால் பார்க்க முடியும்! இப்படியொரு ஆச்சரியமான 'இன்ஃப்ரா ரெட் காண்டாக்ட் லென்ஸை' (Infrared Contact Lenses) சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக நாம் அணியும் சாதாரண காண்டாக்ட் லென்ஸ்களில் பயன்படுத்தப்படும் பாலிமர்களுடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'நானோ துகள்களை' (Nanoparticles)...

சினிமா பாணியில் போதைப்பொருள் வேட்டை – ஆண் வேடத்தில் திரிந்த ‘களுபாலம் டிலு’ சிக்கியது எப்படி?

0

சினிமாவில் வரும் 'லேடி கெட்டப்' பாணியை அப்படியே தலைகீழாக மாற்றி, ஆண் வேடமணிந்து மிரட்டி வந்த ஒரு பெண் கிரிமினல் தற்போது பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். ​🎭 யார் இந்த "களுபாலம் டிலு"? ​பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இந்தப் பெண், ஒரு சாதாரண போதைப்பொருள் கடத்தல்காரர் அல்ல. பொலிஸாரின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக இவர் கையாண்ட விதம் அதிரடியானது. ✓​ஆண் வேடம் - தனது நீண்ட கூந்தலை ஒட்ட வெட்டி, கச்சிதமான ஆண் தோற்றத்திற்கு மாறினார். ✓​மாற்றுப் பெயர் - 'டிலு' என்ற பெண் பெயருக்கு...

யாழில் அதிவேகமாகச் சென்று பனை மரத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்!! ஒருவர் பலி! மற்றொருவர் படுகாயம்!

0

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் நின்ற பனை மரத்துடன் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.உயிரிழந்தவரது சடலம் தற்போது காரைநகர் பிரதேச வைத்தியசாலையில்...

கனடாவில் இலங்கை தமிழ் யூரியூப்பரை கைது செய்தது கனேடியன் பொலிஸ்!! நடந்தது என்ன?

0

கனடாவின் டொராண்டோ நகரில் தவறான நடத்தையில் ஈடுபட்ட யூடியூபரான 45 வயதுடைய இலங்கை தமிழர் ஒருவர் டொராண்டோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழ் முஸ்லீமான முகமத் அஸ்கார் மீது அனுமதியின்றி தனிநபர்களை அணுகி, படம் பிடித்தமை, அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பொலிஸார் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025 டிசம்பர் 10 திகதிஅன்று பொலிஸ் காவலில் எடுக்கப்பட்ட நிலையில், பெப்ரவரி 4, 2026 அன்று ஒன்ராறியோ நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 8,...

அறிவியல் உலகை ஆளும் ஈழத்துத் தமிழ் பெண் – அவுஸ்திரேலியாவில் கலாநிதி மேகலா பாலமுரளி சாதனை!

0

ஈழ மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், அவுஸ்திரேலியாவின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் கலாநிதி மேகலா பாலமுரளி (Dr. Mehala Balamurali) அவர்கள் ஒரு மைல்கல் சாதனையைப் படைத்துள்ளார். சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ரோபாட்டிக்ஸ் மையத்தில் சிரேஷ்ட ஆராய்ச்சி உறுப்பினராகப் பணியாற்றும் இவர், நவீன தொழில்நுட்ப உலகில் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார்.கலாநிதி மேகலாவின் ஆராய்ச்சிகள் இன்றைய காலத்திற்கு மிகவும் அவசியமான தரவு பகுப்பாய்வு மற்றும் அதன் அடிப்படையிலான முடிவெடுத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, சிக்கலான கணினி மாதிரிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு...

இன்றைய (09.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும். பயணம் மூலம் சாதகம் கிடைக்கும். கடித போக்குவரத்து நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் தெம்பு வரும். புதுவியாபாரம் தொடர்பான...

பிருத்தானியா வாழ் தமிழர்களே எச்சரிக்கை! புதிய வகை மோசடி!

0

பிரித்தானியாவில் தொலைபேசி மோசடிக்காரர்கள் தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் ஒருவரது குரலை அப்படியே நகலெடுத்து, அவர்களது உறவினர்களை ஏமாற்றும் புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் உள்ள சிறிய வீடியோக்கள் அல்லது வாய்ஸ் மெசேஜ்களைப் பயன்படுத்தி, சில நொடிகளிலேயே இந்தக் குரல்கள் உருவாக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் குரலில் பேசி, "நான் விபத்தில் சிக்கியுள்ளேன்" அல்லது "அவசரமாக பணம் தேவை" எனக் கூறி உறவினர்களிடம் பணம் பறிப்பதே இவர்களின் நோக்கமாகும். மோசடி எவ்வாறு நடைபெறுகிறது? குரல் சேகரிப்பு: நீங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வீடியோக்கள் அல்லது நீங்கள் அனுப்பும்...

பூமியின் அதிவேகக் கண்டம் – ஆண்டுக்கு 7 செ.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகரும் அவுஸ்திரேலியா!

0

ஆஸ்திரேலியா ஒரே இடத்தில் நிலையாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒட்டுமொத்த ஆஸ்திரேலியக் கண்டமும் ஆண்டுக்கு சராசரியாக 7 சென்டிமீட்டர் வேகத்தில் மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பூமியின் அரை-திரவ நிலையில் உள்ள மேலடுக்கின் (Mantle) மீது, ஆஸ்திரேலியா அமைந்துள்ள பிரம்மாண்டமான டெக்டோனிக் தட்டு (Tectonic plate) தொடர்ந்து சறுக்கிச் செல்வதே இந்த நகர்வுக்குக் காரணமாகும். ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய புவியியல் ஆய்வு மையங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஜிபிஎஸ் (GPS) நிலையங்கள் மற்றும் செயற்கைக்கோள் அளவீடுகளைப் பயன்படுத்தி இந்த நகர்வைத் துல்லியமாகக்...

பல ஆயிரம் கோடி ரூபாய்களை வங்கியில் வைப்புச் செய்திருந்த நபர் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

0

இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த மர்ம நபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் ஒரு வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன், மேலும் நான்கு கணக்குகளில் தலா ரூபாய் 500 கோடி, 600 கோடி மற்றும் 800 கோடி வரையிலான பெரும் தொகைகள் வைப்பு செய்யப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறான அளவிலான பெரும் நிதி மோசடி சம்பவம் இலங்கையில் முதல் முறையாக வெளிச்சத்துக்கு...