மன்னாரில் இறைச்சி விற்பனைக்கு ஒரு வார கால தடை!

0

சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் மாடுகள் உட்பட பண்ணை விலங்குகள் அதிகளவில் உயிரிழந்துள்ள நிலையில், அவற்றின் மாமிசம் மனித நுகர்வுக்காக சந்தைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில், இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மன்னார் மாவட்டத்தில் மாமிசத்தை விற்பனைக்காக சேமித்து வைத்திருப்பதற்கும், மாமிசத்திற்காக விலங்குகளை வெட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் பொரலஸ்ஸ தெரிவித்துள்ளார். வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்த விலங்குகளின் உடலங்கள் மனித நுகர்வுக்காக விற்கப்படுகிறதா? அல்லது கொண்டு செல்லப்படுகிறதா? என்பதைக் கண்காணிக்கும் பணியில் நாடு...

அரச வெள்ள நிவாரண நிதி: பெறுவது எப்படி? – ரூ.10,000 – 50,000 பெறுவது எப்படி?

0

முழு வழிகாட்டி படிப்படியாக... வெள்ளத்தால் சேதமடைந்த குடும்பங்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை உள்ளது. இந்த பணம் நீங்கள் உரிமையுடன் பெறக்கூடிய உதவி!  யாருக்கு இந்த நிவாரணம் கிடைக்கும்? வெள்ளத்தால் வீடு சேதமடைந்தவர்கள் வீட்டுப் பொருட்கள் சேதமடைந்தவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகள் சிறு தொழில் பாதிக்கப்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் நீங்கள் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் வசிப்பது அவசியம். பிரதேச செயலாளர் அலுவலகம் வெளியிடும் பாதிப்பு பட்டியலில் உங்கள் பகுதி இருக்க வேண்டும். தேவையான ஆவணங்கள் தேசிய அடையாள அட்டை சேதம் ஏற்பட்ட...

இலங்கையில் பலருக்கும் அதிர்ச்சி தரும் ‘சிவப்பு’ வரி அறிவித்தல்! – அலட்சியம் வேண்டாம்! – முழு விபரம் உள்ளே!

0

கடந்த சில வாரங்களாக, இலங்கை முழுவதும் உள்ள பல குடிமக்கள், குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடமிருந்து (Inland Revenue Department - IRD) கடுமையான எச்சரிக்கை கடிதங்களைப் பெற்று வருகின்றனர். "வருமான விபரத்திரட்டை சமர்ப்பிக்கத் தவறியமை" (Failure to Furnish Return) என்ற தலைப்பில் வரும் இந்தக் கடிதங்கள், சாதாரண மக்களிடையேயும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவித்தல் என்றால் என்ன? இது ஏன் இப்போது அனுப்பப்படுகிறது? மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? என்பது...

செயற்கைக்கோள் மூலம் வெளிச்சத்துக்கு வந்த களனி கங்கை வெள்ளப் பாதிப்பு !

0

இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் 365 பேர் காணாமல் போயுள்ளனர்.இந்தநிலையில், ப்ளானட் லெப்ஸ் (Planet Labs) வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் படங்களில் களனி கங்கை பெருக்கெடுத்துப் பாய்ந்து கொழும்பு உள்ளிட்ட பெரும் பகுதிகளை மூழ்கடித்து, பாரிய அழிவை ஏற்படுத்தியிருப்பதை காட்டுகிறது. எவ்வாறாயினும், களனி ஆற்றில் நீர்மட்டம் குறைவடைந்து தாழ்நிலப் பகுதிகளில் நிலவிய வெள்ள எச்சரிக்கை நீங்கியுள்ளதுடன், நாகலகம் வீதியில் மாத்திரம் நீர்மட்டம் எச்சரிக்கை நிலையில் உள்ளதாக நீர்பாசனத்...

ஒரு மில்லியன் டொலரை வழங்கியது சீனா!

0

'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சீன அரசாங்கம் அவசரகால நிவாரண உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர், சி ஷென்ஹொங்கிடமிருந்து இந்த நன்கொடையை தாம் பெற்றுக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இலங்கையின் நண்பனாக இருக்கும் சீன அரசாங்கத்துக்கு, இந்தச் சவாலான நேரத்தில் வழங்கிய நிலையான ஆதரவுக்காக இலங்கை சார்பில் ஆழமான நன்றியைத் தெரிவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் 25,000 ரூபாய் நிவாரணம்

0

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து ஒரு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து தலா 25,000 ரூபாய் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை ஆரம்பம்

0

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை(04) ஆரம்பமாகவுள்ளது. இந்தநிலையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை தொடங்குவதற்கான சடங்குகள் இந்த முறையும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகளால் நாடு எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையிலிருந்து விரைவில் மீளப் பிரார்த்தனை செய்து, இந்த யாத்திரையின் அனைத்து சடங்குகளும் வழமை போல் செய்யப்படும் என்று இந்த நிகழ்வின் பொறுப்பாளரான நாயக்க தேரர் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பரவி வந்த போதிலும், சமீபத்திய இயற்கை பேரழிவுகளால் சிவனொளிபாத மலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும், தேரர்...

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களுக்கு பாதிப்பில்லை

0

2025ஆம் ஆண்டு நவம்பர் இறுதியில் (நவம்பர் 27, 28, 29 போன்ற தேதிகளில்) கடுமையான வானிலை காரணமாக பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டு, நாடு முழுவதும் "சைக்ளோன் திட்வா" (Cyclone Ditwah) போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்ட சூழலில், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த உறுதிமொழியை வழங்கினார். இதுவரை எழுதப்பட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் சேதமடையவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் அனைத்தும் தற்போது பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு அவசரகால நடவடிக்கையாக மட்டுமல்லாமல், பல ஆண்டுகளாகப்...

நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாக தொடர்புகொள்ள மக்களுக்கு வாய்ப்பு

0

இலங்கை நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் (www.parliament.lk), கடந்த 19 வருட சேவையில் மூன்றாவது தடவையாக, புதிய அம்சங்களுடன் நவீனமயமாக்கப்பட்டு அண்மையில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் நவீன தேவைகளைப் பூர்த்தி செய்யும் பல புதிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமாக, "எனது நாடாளுமன்றம்" ("My Parliament") என்ற புதிய பகுதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.(https://www.parliament.lk/ta/my-parliament/user-registration) இதன் மூலம் ஒவ்வொரு பிரஜையும் நாடாளுமன்றத்துடனும், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக தொடர்புகொள்ள முடியும். பொதுமக்கள் இந்த...

முக்கிய அறிவிப்பு: இன்று நாடு முழுவதும் 90 நிமிட மின்வெட்டு

0

தேதி: 02 டிசம்பர் 2025... சமூகவலைத்தளங்களில் வந்த தகவலை நாம் வெளியிட்டுள்ளோம். இதன் நம்பகத்தன்மையை இலங்கை மின்சாரசபையின் 1987 என்ற இலக்கத்திற்கு SMS செய்து அறிந்து கொள்ளவும். இலங்கை மின்சார சபையின் அறிவிப்பின்படி, தேசிய மின்னுற்பத்தி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை காரணமாக இன்று (02/12/2025) நாடு முழுவதும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 🕒 மின்வெட்டு நேர அட்டவணை (Schedule) இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுலில் இருக்கும். இது 4 பிரிவுகளாக (Groups) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவுக்கும் 90 நிமிடங்கள்...