அநுராதபுரத்தில் இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

0

அநுராதபுரத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மல்வத்து ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  காலை இடம்பெற்றுள்ளது. 40 வயதுடைய தாய் ஒருவர், தனது 04 வயதுடைய மகள் மற்றும் 08 வயதுடைய மகனுடன் மல்வத்து ஓயாவில் குதித்துள்ளார். இதனை கண்ட பிரதேசவாசிகள் உடனடியாக தாயை காப்பாற்றியுள்ள நிலையில், இரண்டு பிள்ளைகளும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீரில் அடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளை தேடும் பணிகளில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாயின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும்,  குடும்பத் தகராறு...

யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம் ; வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்.

0

யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இளைஞன் ஒருவனை வீதியில் துரத்தி துரத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 06 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.   கைதானவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கொலை சம்பவம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விளக்கமறியல் கைதி ஒருவரின் திட்டமிடலுடன் , அவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் , கொலை சம்பவம் நடைபெறுவதற்கு முதல் நாள் தெல்லிப்பழை பகுதியில் உள்ள வீடொன்றில் கொலைக்கான ஒத்திகையும் நடைபெற்றுள்ளது. வீதியில் துரத்தி துரத்தி வெட்டப்பட்ட இளைஞன்.  யாழ்ப்பாணம் திருநெல்வேலி...

தாயின் காதலனால் கர்ப்பமான பாடசாலை மாணவி ; தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!

0

அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் கனிஷ்ட பிரிவில் கல்வி கற்று வந்த மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டு கர்ப்பமான சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையாரால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய இச்சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாயும் உடந்தை பாடசாலைக்கு இரண்டு மாதங்களாக செல்லாத குறித்த மாணவி தொடர்பாக பாடசாலை நிர்வாகம் அவரது தாயாரிடம் வினவியதாகவும் உரிய பதில் இன்மை காரணமாக தாயார் கூறிய...

சேதமடைந்த வீடுகளைச் சுத்தப்படுத்த ரூ.25,000/- நிதியுதவி உயர்வு

0

சமீபத்தில் நாட்டில் நிலவிய கடுமையான அனர்த்த நிலைமை (வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள்) காரணமாகச் சேதமடைந்த வீடுகளைச் சுத்தம் செய்து, மீண்டும் குடியிருப்புக்குத் தகுந்தவாறு சீரமைக்க வழங்கப்படும் நிதியுதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய அறிவிப்பு விவரங்கள்: பழைய தொகை: வீடுகளைச் சுத்தம் செய்வதற்கு முன்னர் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை ரூ. 10,000/- ஆக இருந்தது. புதிய தொகை: நிதி அமைச்சின் செயலாளர் அறிவிப்பின்படி, இந்த உதவித்தொகை தற்போது ரூ. 25,000/- (இருபத்தைந்தாயிரம் ரூபா) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வின் நோக்கம்: இந்த அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து...

இன்றைய தங்கம் விலை நிலவரம் ! – தங்கம் விலை பவுணுக்கு ரூ.2000 குறைவு!

0

நேற்று (01) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 342,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 340,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 312,800 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின்...

உயர்தரப் பரீட்சை மற்றும் பாடசாலைகள் திறப்பு குறித்த அறிவிப்பு

0

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் 2026 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். எனினும், திகதிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்...

பதுளையை மீண்டும் கட்டியெழுப்ப மாத்தறையிலிருந்து படையடுத்து வந்த பொதுமக்கள்!

0

பதுளை மாவட்டத்தை பாதித்த பேரழிவைத் தொடர்ந்து, மாத்தறை மாவட்டத்திலிருந்து மிகவும் வலுவான சகோதர உறவுகளின் பங்களிப்பு கிடைத்தது. ​சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் 826 பேர் கொண்ட ஒரு பெரிய குழு மாத்தறையிலிருந்து பதுளைக்கு வந்தது. ​இந்த குழு தங்கள் உழைப்பை மட்டுமல்ல, புனரமைப்பு பணிகளுக்கு தேவையான இயந்திரங்களையும் கொண்டு வந்தது சிறப்பு. *பேக்கோ லோடர்கள் *அகழ்வாராய்ச்சியாளர்கள் *செயின்சாக்கள் *தண்ணீர் பவுசர்கள் *சுத்தப்படுத்தும் உபகரணங்கள் ​இந்த நிவாரணக் குழுவில் ரெட் ஸ்டார் அமைப்பு, பல்வேறு தன்னார்வக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகக் குழுக்கள் உட்பட ஒரு பெரிய குழுவும் உள்ள பல்வேறு சிரமங்கள்...

யாழில் எலிக்காய்ச்சலால் பறிபோன உயிர்கள்; வெள்ளநீரில் விளையாடுவதைத் தவிர்க்கவும் – அவசர எச்சரிக்கை

0

யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சலினால் இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் வெள்ளநீருடன் தொடுகையுறுபவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் கடந்த வாரம் எலிக்காய்ச்சல் நோயினால் இரண்டு இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த வருடமும் யாழ் மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர் காலப்பகுதியில் தீவிரமாகப் பரவிய எலிக்காய்ச்சல் நோயினால் 8...

இலங்கைக்கு பிரித்தானியா அவசர உதவி – 890,000 டொலர் நிதி ஒதுக்கீடு

0

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, அவசர உதவி மற்றும் உயிர்காக்கும் ஆதரவை வழங்குவதற்காக, பிரித்தானியா 890,000 அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்கவுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று அறிவித்தது. சூறாவளியின் பேரழிவிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவுவதற்காக, செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross), ஐ.நா. இலங்கை (UN Sri Lanka) மற்றும் உள்ளூர் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த நிதிப் பங்களிப்பு மூலம் பிரித்தானியா பணியாற்றும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நேபாளத்திடமிருந்து இலங்கைக்கு 200,000 டொலர் நிதியுதவி

0

இலங்கையில் ஏற்பட்ட சமீபத்திய மோசமான வானிலை  காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பலத்த சேதங்களில் இருந்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக, நேபாள அரசாங்கம் இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர்கள் (USD 200,000) நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. நேபாளத்தின் வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டு, இந்த கடினமான நேரத்தில் நேபாளம் இலங்கையுடன் உறுதியாக நிற்கிறது என்று தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேபாள அரசு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வாழ்த்தியுள்ளது.