யாழில் கடற்றொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்!
பொன்னாலைக் கடலில் தொழிலுக்கு சென்ற.குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையை சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி {வயது 62} என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். டித்வா புயல் மற்றும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக எவரையும் கடற்றொழிலுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றுக் காலை கடற்றொழிலுக்கு சென்று திரும்பிய இவர் மீ்ண்டும் பிற்பகல் 3.00 மணியளவில் தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமற் போயிருந்தார். 6 மணியாகியும் அவர் கரை திரும்பாத நிலையில் உறவினர்களும் சக தொழிலாளர்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்டனர். இதன்போது இன்று காலை 10.00 மணியளவில்...
வென்னப்புவவில் ஹெலி விபத்து – அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர்
வென்னப்புவ, லுனுவில பகுதியில் சற்று முன்னர் (நவம்பர் 30) அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது (Crash Landing). சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போதே, குறித்த ஹெலிகொப்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வென்னப்புவ மற்றும் லுனுவில பகுதிகளுக்கு இடையில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இது ஒரு 'கடுமையான தரையிறக்கம்' (Crash Landing) என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலதிக விபரங்கள் வெளியாகி வருகின்றன.
மூன்று நாட்களில் நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் – தேசிய நீர் வழங்கல் சபை
நாட்டைப் பாதித்த சீரற்ற காலநிலை காரணமாகப் பல மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகத்தை மூன்று நாட்களுக்குள் வழமைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர், பொறியியாளர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார். முப்படைப் பாதுகாப்புத் தலைமையகத்தில் இன்று (30) இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, நீர் விநியோகத்தை உடனடியாக வழங்குவதற்காக முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபையிடமிருந்து உதவி பெறப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் உள்ள சுத்திகரிப்பு மற்றும்...
ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை!
நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது. இதை எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.என்ன நடந்தது? இந்தக் கிராமத்தின் மக்கள் உறக்கத்தில் உறைந்து போயிருந்த கணம் சுற்றுமுற்றும் இருந்த பாறைகளும் மண்மேடுகளும் அவர்கள் மீது சரிந்து விழும் என அவர்கள் தமது கனவில் கூட கண்டிருக்கமாட்டார்கள். கடும் மழையால் பிடிமானம் இழந்திருந்த மண்மேடுகள் சரிந்து வந்து அவர்களது...
ராக்கிங்!! யாழ் பல்கலைக்கழக சிங்களமாணவர்கள் 19 பேர் சிறைக்குள் அடைப்பு!!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19 பேர் பகிடிவதை புரிந்தனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 21ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன சிரேஷ்ட மாணவர்கள், அதே பீடத்தில் கல்வி பயிலும் பெரும்பான்மை இன கனிஷ்ட மாணவர்கள் 15 பேரை பல்கலைக்கழகத்திற்குள் வெளியே உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தி பகிடிவதையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட...
யாழ் திருநெல்வேலி சந்தியில் ஒருவர் பட்டப்பகலில் வெட்டுக்கொலை !
யாழ்ப்பாணத்தில் ஒருவர் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம், திருநெல்வேலி சந்தி பகுதியில் இன்று (30) காலை இந்த பயங்கர சம்பவம் நடந்தது. வர்த்தக நிலையம் ஒன்றுக்கு முன்பாக ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்தது. தனது மைத்துனருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் வாளால் வெட்டினர். பாதிக்கப்பட்டவர் இறங்கி தப்பியோடிய போது, விரட்டிச் சென்று வெட்டியுள்ளனர். அவரது ஒரு கால் துண்டாடப்பட்டது. இரண்டு கைகள், வயிற்றிலும் வெட்டப்பட்டார். நேசராசா...
SLT மொபிடெலுக்கு அடித்த ஜாக்பாட்! – டையலொக் மற்றும் ஏர்டெல் முடக்கம் – விரிவான செய்தி
இலங்கையின் முன்னணி இணைய சேவை வழங்குனர்களான டயலாக் (Dialog) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகியவற்றின் சேவைகள் பல பகுதிகளில் முடங்கியதால், பொதுமக்கள் பெருமளவில் SLT மொபிடெல் (SLT Mobitel) மற்றும் ஹட்ச் (Hutch) சேவைகளுக்கு மாறியுள்ளனர். இதனால் மொபிடெல் நிறுவனம் இந்த மாதம் எதிர்பாராத மாபெரும் லாபத்தை ஈட்டியுள்ளது. என்ன நடந்தது? (The Situation) கடந்த சில நாட்களாக, குறிப்பாக நவம்பர் மாத இறுதியில், டயலாக் மற்றும் ஏர்டெல் பயனர்கள் கடும் இணைய சேவை பாதிப்பை (Network Outage) சந்தித்தனர். காரணம்: டயலாக் நிறுவனம் தனது...
இலங்கையை அரவணைக்கும் சர்வதேச கரங்கள்: 3-வது போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் சுகன்யா’வை அனுப்பியது இந்தியா
இலங்கையை உலுக்கிய 'டித்வா' (Ditwah) புயல் ஏற்படுத்திய பெரும் அழிவைத் தொடர்ந்து, உலக நாடுகள் இலங்கைக்குத் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றன. குறிப்பாக அண்டை நாடான இந்தியா, 'ஆபரேஷன் சாகர் பந்து' (Operation Sagar Bandhu) என்ற பெயரில் பிரம்மாண்டமான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுத்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஏற்கனவே இரண்டு கப்பல்களைப் பயன்படுத்திய நிலையில், தற்போது இந்தியா தனது மூன்றாவது போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சுகன்யாவையும் (INS Sukanya) களமிறக்கியுள்ளது மீட்புப் பணிகளுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. இந்தியாவின் 'ஆபரேஷன் சாகர்...
முழுமையான அனர்த்த அறிக்கை -அவசர நிலை: களனி நதி அபாயம், 431 மி.மீ மழை, 153 பலி
செய்தித் தொகுப்பு - நவம்பர் 29, 2025 | மாலை 8.00pm மணி இலங்கையை உலுக்கிய 'டிட்வா' (Ditwah) சூறாவளிப் புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பெருவெள்ளம், மண்சரிவுகள் காரணமாக நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவு பேரழிவைச் சந்தித்துள்ளது. இன்றைய மாலை நிலவரப்படி கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ மற்றும் ஊடகத் தகவல்களின் அடிப்படையில் ஒரு விரிவான அலசல் இங்கே. 1. மரணங்கள் மற்றும் காணாமல் போனோர் விபரம் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி: மொத்த உயிரிழப்புகள்: சுமார்...
களனி நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், அம்பத்தலே வெள்ளக் கட்டுப்பாட்டு தடுப்பு நிரம்பும் ஆபத்து ஏற்பட்டுள்ளது..!
இந்த சூழ்நிலையில், பின்வரும் பகுதிகளில் வசிப்போருக்கு உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பணை (Embankment) அருகிலுள்ள குடியிருப்போர் மாலபே – கடுவலை பிரதான சாலையோர மக்கள் சுற்றியுள்ள தாழ்வுநிலப் பகுதிகளில் உள்ள குடும்பங்கள் அதிகாரிகள் எச்சரிப்பதாவது, களனி நதி இன்னும் உயர்ந்தால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் விரைவான நீர்மூழ்கல் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. மக்கள் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக நகர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.










