பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான் – நீதிபதி இளஞ்செழியன் கூறுவது என்ன?

0

பேஸ்புக் இல்லாத ஒரே நீதிபதி நான் மட்டும்தான். அதிகாரத்தை பாவிக்க வேண்டும், துஸ்பிரயோகம் தான் செய்ய கூடாது என்று முன்னாள் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். நான் பதவி அதிகாரத்தை 100வீதம் பாவித்துள்ளேன். அதனால்தான் அரசதரப்பிலிருந்தோ வேறு பலதரப்பிலிருந்தோ விரல்கள் நீட்டப்படவில்லை. சாக்கடை அரசியல் என்று கூறுகிறார்கள், அதனை பூக்கடை அரசியலாகவும் மாற்றலாம். அதற்கு காலம் சரியான பதில் சொல்லும். நெல்சன் மண்டேலா, தந்தை செல்வா ஆகியோர் சாக்கடை அரசியல் செய்யவில்லை. நான் நீதித்துறையை நேசிக்கின்றேன், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதா வைக்கப்படவில்லையா என்று தெரியவில்லை என்று...

வவுனியா மக்களுக்கான அவசர எச்சரிக்கை – தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர்…!

0

வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் இன்று மாலை (12.11.2025) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களை மீன்பிடியினை தற்போதைக்கு தவிர்க்குமாறும் பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார். விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் ஆவா குழு காவாலித் தலைவன் வினோ உட்பட 2 பேர் போதைப்பொருளுடன் கைது!!

0

ஆவா குழு தலைவன் வினோத் உட்பட இருவர் நேற்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 24 வயதுடைய யுவதி பச்சைப் பனை மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டாரா?

0

யாழ். போதனா வைத்தியசாலையில் பணி புரியும் தாய் மாமன் பொலிஸாரால் கைது! யாழில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது தாய்மாமன் இன்றையதினம் (11) கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இருபாலை, கோப்பாய் கிழக்கு என்ற முகவரியை சேர்ந்த கிடைப் பிரதீப் நிவேதா (வயது 24) என்ற யுவதியே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் குறித்த யுவதி மூச்செடுப்பதற்கு சிரமப்பட்டுள்ளார். இந்நிலையில் நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கிய...

கொழும்பில் சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்தவர் கைது!

0

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் நுகர்ந்த, நாட்டின் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை, செட்டியார் தெருவில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி கடையில் இருந்து ரூ.6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை இவர் திருடியுள்ளார். தொடர்பாக, கிட்டத்தட்ட 70 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர், இவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் உட்கொண்ட தீவில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளி என புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் 60 வயதுடையவர் என்றும், அவர் 1993 ஆம்...

இலங்கையின் சாபமாக மாறியுள்ள பிரயாணங்கள்! 16 வயது மாணவனை கனவுடன் பலியெடுத்த பஸ் விபத்து! நடப்பது என்ன?

0

தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜய கங்க வீதியில் பயணித்த தனியார் பேருந்து கவிழ்ந்ததில் ஏற்பட்ட துயரமான விபத்தில், இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்க இருந்த ஒரு பாடசாலை மாணவன் உயிரிழந்ததுடன் மேலும் 47 பேர் காயமடைந்தனர்.உயிரிழந்தவர் ஹங்குரங்கெத பகுதியில் 411/4 என்ற முகவரியில் வசித்த,தலாவ தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற 16 வயதுடைய பசிந்து தில்ஷான் நந்தசேன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவ்விபத்து நேற்று (10) மதியம் 12.15 மணியளவில் தலாவ பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்பட்டு, 15 நிமிடங்களுக்கு பின்னர்...

யாழில் நாயால் மரணமான நிசாந்தன்!

0

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு

0

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால்  6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.  கண்களில் கல் போன்ற பிறபொருட்கள் உட்புகும்போது அதற்கு முலைப்பாலையோ, சேவலின் குருதியையோ கண்களில் விடவேண்டாம். இதை செய்வதால் கிருமித் தொற்று காரணமாக நிரந்தரமாக பார்வை இல்லாமல் போகும் அபாயம் உள்ளது....

16 வயது மாணவனை வல்லுறவுக்குள்ளாக்கிய 39 வயது லலிதாவுக்கு 54 வருட சிறை!

0

சிறுவனை கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. திருவாரூர் மாவட்டம் தேதியூரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி லலிதா(39). இவர், எரவாஞ்சேரி வடுகர்பாளையம் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடனம் ஆட கற்றுத்தருவதாக கூறி அந்த சிறுவனை லலிதா கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம்...

சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமானது உயிர்கொல்லி போதைப்பொருள்பொருட்களே!

0

சமூகத்தை உலுக்குகின்ற – பிறழ்வுக்கு காரணமான உயிர்கொல்லி போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. இன்றைய பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை காலத்துக்கேற்ற ஒன்றாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.   கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தினமும் பரிசளிப்பு விழாவும் பாடசாலையின் அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு திருவுருவச் சிலைகளுக்கான மலர்மாலை அணிவிக்கப்பட் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து ஆளுநர் உரையாற்றும் போது, மாணவர்களிடம் தலைமைத்துவ...