பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் திருட்டு குற்றச்சாட்டில் இடைநீக்கம்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், கருத்துத் திருட்டு குற்றச்சாட்டில் பூர்வாங்க விசாரணைக்குப் பிறகு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மறைந்த பேராசிரியர் லெஸ்லி குணவர்தன எழுதிய ஆங்கில ஆய்வுக் கட்டுரையை முழுமையாக நகலெடுத்து, தனக்குச் சொந்தமான படைப்பாக வெளியிட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் லெஸ்லி குணவர்தன, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், இலங்கையின் மதிப்பிற்குரிய வரலாற்றாய்வாளர்களில் ஒருவருமாவார். இந்த விவகாரம், பேராசிரியர் குணவர்தனாவின் உறவினர் அளித்த புகாரின் பின்னர் விசாரணைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி...
மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று (29) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து...
புலம்பெயர் நாடுகளில் சினிமா பாணியில் இலக்கு வைக்கப்படும் தமிழர்கள்! லண்டனில் ஈழத் தமிழ் குடும்பஸ்தருக்கு நடந்த சம்பவம்!
புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் உட்பட ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து, புதிய வகை தங்க மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆசிய நாட்டவர்கள் அதிகளவிலான தங்க நகைகளைத் தவசம் (வசம்) வைத்திருக்கும் நிலையில், அவர்கள் குறிவைக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், பிரித்தானியாவின் லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவர் இந்த மோசடிக்கு உள்ளான நிலையில், அது குறித்த தகவல்கள் அம்பலமாகி உள்ளன. லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழர் ஒருவருக்கு போலீஸ் நிலையத்திலிருந்து அழைப்பது போன்று மோசடியாளர்கள் உரையாடி உள்ளனர். சுற்றிவளைப்பின் போது திருடன் ஒருவரைத் தங்க...
மட்டு’வில் குளியலறையிலிருந்து 11 வயது சதிஷா சடலமாக மீட்பு!
ஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஏறாவூர் - 05, நீதிமன்ற விதியைச் சேர்ந்த சதியானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.மேலதிக விசாரணைகளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
கோர விபத்து!! நிறை மாத கர்ப்பிணியான பெண் விதானையும் வயிற்றில் இருந்த குழந்தையும் மரணம்!
அனுராதபுரம் - விமான நிலைய வீதியில் சம்பவித்த கோர விபத்தில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அனுராதபுரத்தை சேர்ந்த ஆர். எம். பாக்யா நிலுபுலி வடுகொடபிட்டிய என்ற 32 வயதுடைய கர்ப்பிணிப் பெண் என தெரியவந்துள்ளது. இவர் அநுராதபுரம் மத்திய நுவரகம்பலாத பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராம உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்தார்.கர்ப்பிணி பெண் பலி கடந்த 18ஆம் திகதி கவரக்குளம பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, பெண் மற்றொரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.எதிர் திசையில் வந்த சிறிய...
கனடா டொராண்டோவில் 145 பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் அந்தரங்க தொடர்பில் இருந்த இலங்கை தமிழன் ரமணனுக்கு 33 வருட கடூழிய சிறை!
நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 40 வயதான ரமணன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை கொலம்பியா மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது. முக்கிய விவரங்கள்: குற்றத்தின் பின்னணி: கடந்த 8 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழி (Online) பாலியல் சுரண்டல் குற்றங்களில் ஈடுபட்டதை இவர்...
மட்டு’வில் சம்பவம்! பாடசாலையில் துாசணம் கதைத்ததற்காக தரம் 3 மாணவனின் வாயில் இரும்பு கம்பியால் சூடு வைத்த தந்தை கைது
பெற்றோர்களே எச்சரிக்கை! பிள்ளைகளை நல்வழிப்படுத்துகிறேன் என்ற பெயரில் மனிதாபிமானமற்ற முறையில் தண்டனை வழங்கிய தந்தைக்கு நேர்ந்த கதி! வகுப்பறையில் தகாத வார்த்தை... ஆசிரியரின் புகார்! மட்டக்களப்பு, முறக்கொட்டான்சேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 3 இல் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் ஒருவன், வகுப்பறையில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அதிர்ச்சியடைந்த பாடசாலை ஆசிரியர், சிறுவனின் பெற்றோரை அழைத்து முறைப்பாடு செய்துள்ளார். ஆத்திரமடைந்த தந்தை... அரங்கேறிய கொடூரம்! ஆசிரியரின் புகாரைக் கேட்டு கடும் கோபமடைந்த தந்தை, மகனை நல்வழிப்படுத்த நினைத்து மனிதாபிமானமற்ற...
அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள்! வீடியோ
அதி வேகத்தில் சென்று தொலைத்தொடர்பு கம்பத்தில் மோதிச் சிதறிய இளைஞர்கள் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. மோட்டார் சைக்கிள்களைச் கண் மூடித்தனமாகச் செலுத்துபவர்கள் இந்தக் காட்சியைக் கண்ட பின்னராவது அவதானமாக இருக்கவும்.
வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த குழந்தை – யாழில் சோகம்!
யாழில் பிறந்து 24 நாட்களேயான ஆண் குழந்தை நேற்றையதினம் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்பற்று - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த லோகிதன் ரிராஜ் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த குழந்தைக்கு நேற்றிரவு காய்ச்சலுடன் வலிப்பு ஏற்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை அங்கேயே உயிரிழந்துள்ளது. குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இன்றைய (29.05.2026) இராசி பலன்கள்
மேஷம் இன்று வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6 ரிஷபம் இன்று திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை...









