பாட்டனாருடன் வயலுக்கு சென்ற சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழப்பு..!

0

வயல் வேலைக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (14) இரவு 7.00 மணியளவில் பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர கிராமத்தில் தனது பாட்டனாருடன் வயல் வேலைக்குச் சென்று வீடுநோக்கி திரும்பி வரும்போது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மன்னம்பிட்டி, சிங்ஹஉதாகமயைச் சேர்ந்த ஆர்.ஜே.எம். அஷேன் யோமார என்ற 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னம்பிடிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறை கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த 19 வயது இளைஞன் கடலலையில் சிக்கி மாயம்!

0

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கடற்பரப்பில் இன்று (2025.11.15) நீராடச் சென்ற 18 வயது இளைஞர் ஆசிப் அப்துல் ஹமீட் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞரைத் தேடும் பணியை உடனடியாகத் தீவிரப்படுத்தக் கோரி, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கடற்படையிடம் அவசர உதவியை நாடியுள்ளது. ​ ​இன்று மாலை சுமார் 4:00 மணியளவில், அக்கரைப்பற்று கடற்கரையில் சில இளைஞர்கள் குழு நீராடிக் கொண்டிருந்த வேளையில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென ஏற்பட்ட அலையின் இழுவையால், இளைஞர்களில் ஒருவர் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டார். ​அவருடன் இருந்த...

யாழில் சிறுமியை பலருடன் சேர்ந்த துஸ்பிரயோகம் செய்த சின்னத்தம்பியின் மரக்குற்றிகளுடன் மருமகன் கைது!!

0

யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் 13 வயதுச் சிறுமியை பலருடன் சேர்ந்து துஸ்பிரயோகம் செய்து சிறைக்குச் சென்று பிணையில் வந்து நிற்கும் பொடிமல்லி என அழைக்கப்படும் சின்னத்தம்பி என்பவனுக்காக கொண்டு வரப்பட்ட 25 கடத்தல் முதிரை மரக்குற்றிகளுடன் அவனது மருமகன் கிருஷ்ணகுமார் வட்டுக்கோட்டைப் பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளான். குறித்த மரக்குற்றிகள் 50  லட்சம் ரூபாக்களுக்கு மேல் பெறுமதியானது என தெரியவருகின்றது. இம் மரக்குற்றிக் கடத்தல் தொடர்பாக சின்னத்தம்பி தலைமறைவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

தனது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தாயை படுக்கையில் வைத்தே பெற்றோல் ஊற்றித் தீ வைத்த 13 வயது மகள்!!

0

பதுளையில் தனது காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த 13 வயது சிறுமி ஒருவர், தனது தாயின் உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த அனர்த்தம் காரணமாக பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய் தற்போது பதுளை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 11 ஆம் திகதி மாலை சந்தேக நபரான சிறுமியை கைது செய்தனர். பதுளை பகுதியில் உள்ள பாடசாலையில் படிக்கும் சிறுமி, ஒரு இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதை அறிந்ததும்,...

இலங்கை முழுவதும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 50 பேர் கைது!

0

இலங்கை முழுவதும் பல இடங்களில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அக்டோபர் 27 முதல் நவம்பர் 10 வரை மொத்தம் 50 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நடத்தப்பட்ட தனித்தனி நடவடிக்கைகளின் போது 13 டிங்கிகள், 01 பாரம்பரிய படகு மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. திருகோணமலை, நீர்கொழும்பு, காலி, பலப்பிட்டி, அம்பலாங்கொடை, அம்பாறை, அட்டாளைச்சேனை, மன்னார், வடகிழக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, தெற்கு, கிழக்கு, பல்லேமுனை, இறக்கக்கண்டி, லங்காபடுன, கொக்கிளாய், போல்டர்...

நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரிப்பு!

0

யாழ்.மாவட்டத்தின் தீவக பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயுமாறு மாவட்ட விவசாய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்ட விவசாய குழு கூட்டம்  மாவட்டச் செயலர் ம.பிரதீபன் தலைமையில்  வியாழக்கிழமை (13) இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கடல் கடந்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஆபிரிக்க நத்தைகளின் ஊடுருவல் அதிகரித்திருக்கிறது. குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரபாகரன் மக்கள் தமது அன்றாட வாழ்க்கைக்கு...

ஆனையிறவு பகுதியில் இளம் பெண்ணின் சடலம்! கொலையா?? Video

0

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இனங்காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ9 வீதியின் தட்டுவன் கொட்டி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று (14) காலை காவல்துறையினர் குறித்த சடலத்தை மீட்டுள்ளனர். 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

யாழில் துயரச் சம்பவம்!! தோட்ட கிணற்றில் நீராட சென்ற சிறுவன் நிரக்சன் சடலமாக மீட்பு!

0

வடமராட்சி கம்பர்மலையில் நண்பர்களுடன் கிணற்றில் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பலி ! கிணற்றில் நண்பர்களுடன் நீராடிய சிறுவன் நீரில் முழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . நெற்கொழு கழுகு மைதானத்திற்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை 2:00 மணியளவில் கிணற்றில் ஏழு நண்பர்களுடன் நீராடிய போது குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது , கம்பர்மலையை சேர்ந்த நிரஞ்சன் நிரக்சன் வயது 17 என்ற சிறுவன் இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைககப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை...

யாழ் யுவதி ஒருவர் தாய்லாந்து விடுதியிலிருந்து மீட்பு! காதலன் ஏமாற்றினானா?

0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான யுவதி ஒருவர் தாய்லாந்தில் உள்ள இரவு விடுதி ஒன்றிலிருந்து அந் நாட்டுப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார். தீவகப்பகுதியை சொந்த இடமாகக் கொண்ட குறித்த யுவதி தென்பகுதி இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் அவனுடன் செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந் நிலையில் யுவதி பற்றிய தகவல்கள் உறவினர்களுக்கு கிடைக்காத நிலையில் யுவதி வெளிநாடு ஒன்றுக்கு சென்றுள்ளதாக மட்டுமே அவர்கள் அறிந்திருந்தனர். கடந்த மாதம் யுவதியின் உறவினர் ஒருவருக்கு யுவதி தொலைபேசியில் தொடர்பு...

முல்லைத்தீவு உணவகத்தில் சாப்பாட்டு பார்சலுக்குள் இருந்த மீன் பொரியலுக்குள் புழு!

0

முல்லைத்தீவு, உடையார்கட்டு பகுதியில்உணவகமொன்றில்  நபரொருவர் மதிய உணவுக்காக  5 பார்சல் உணவுகளை வாங்கி சென்றுள்ளார். பின்னர் உணவை அவிழ்த்து சாப்பிடும் போது, மீன் பொரியலுக்குள் புழுக்கள் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் தொடர்பாக உடனடியாக சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்துக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் உணவகத்தை பரிசோதித்து, சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குறித்த உணவகம் மீது சுகாதார பிரிவினரால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.