மட்டக்களப்பில் வாகன விபத்துப் போல் திட்டமிட்டு நடந்த கொலை! 24 வயது வாகனச் சாரதி பிடிபட்டது எப்படி?

0

துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது கெப் ரக வாகனம் துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில், இந்த விபத்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொறக்கொட்டாஞ்சேனை - களுவன்கேணி வீதியில் நேற்று (22) காலை துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் மீது கெப் ரக வாகனம் மோதி இந்த விபத்து நிகழ்ந்திருந்ததுடன், விபத்தில் படுகாயமடைந்த துவிச்சக்கர வண்டி ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்திருந்தார். உயிரிழந்தவர் பானகமுவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் என...

ஒருவனின் தலையை வெட்டி புத்தர் சிலையின் கையில் வைத்த கருணே லொக்கா பிடிபட்டது எப்படி? வீடியோ

0

அம்பலாந்தோட்டை, மாமடல, பொகுட்டயாய பிரதேசத்தில் நபரொருவரின் கழுத்தை துண்டித்து கொலை செய்து, அவரது தலையை மாமடல சந்தியிலுள்ள சிலையொன்றில் தொங்கவிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 'கருணே லொக்கா' எனப்படுபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பல குற்றவியல் வழக்குகள் இவருக்கு எதிராகப் பல குற்றவியல் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் குறிப்பிட்டனர். இந்த கொலை சம்பவம் கடந்த 11ஆம் திகதி இரவு நடைபெற்றிருந்தது.அவர் கொலை செய்யப்பட்டதன் பின்னர், அவரது தலை அம்பலாந்தோட்டை மாமடல சந்தியில்...

யாழில் பிரபல வர்த்தகரின் மகள் ஜேர்மனியில் தவறான முடிவால் மரணம்!!

0

யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரின் மகளான 32 வயதான ரவீந்திரன் நிஷானா ஜேர்மனியில் தவறான முடிவெடுத்து மரணமடைந்துள்ளார். இவரது இம் முடிவுக்கான காரணம் தெரியவில்லை.

வவுனியா பாடசாலை காதல்!! லண்டனில் கணவன், பிள்ளைகளை விட்டு விட்டு கனடா சென்ற 42 வயது வைதேகிக்கு நடந்த கதி!

0

தனது கணவன் மற்றும் இரு வயதுககு வந்த மகள்களை விட்டுவிட்டு லண்டனிலிருந்து கனடா சென்ற 42 வயதான வைதேகி மனநலம் குன்றிய நிலையில் ரொறொன்ரே பகுதியில் உள்ள CMHA யில் தங்க வைக்கப்பட்டுள்ளார். வவுனியாப் பகுதியைச் சேர்ந்த 42 வயதான வைதேகிக்கு பாடசாலை பருவத்தில் காதல் இருந்துள்ளது. அந் நேரத்தில் தனது வயதான மாணவன் ஒருவனுடன் ஏ.எல் படிக்கும் போது வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பெற்றோரால் காதலனிடமிருந்து பிரிக்கப்பட்டு கொழும்பு சென்று அங்கு உயர் கல்வி கற்றுள்ளார். அதன் பின்னர் பரதநாட்டிய...

லண்டனில் கைக் காசுக்கு குறைந்த ஊதியத்தில் ஊழியரை வேலைக்க அமர்த்தியமை! இலங்கை புகையிலை விற்றமை! இலங்கைத் தமிழனான பாஸ்கரலிங்கத்தின் கடைக்கு தடை!!

0

பிரித்தானியாவில் லண்டனில் சட்டவிரோதமாக ஒருவரை வேலைக்கு அமர்த்தி குறைந்த சம்பளம் வழங்கிய குற்றச்சாட்டில், இலங்கை தமிழருக்கு சொந்தமான பிரபல அங்காடி ஒன்றின் உரிமம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, சோதனையின் போது அங்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் வரி செலுத்தப்படாத மதுபானங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 2025 நவம்பர் 29 அன்று, ஈலிங் கவுன்சில் அதிகாரிகள் மற்றும் குடிவரவு அதிகாரிகள் அதிரடி சோதனை ஒன்றை நடத்தியிருந்தனர். இந்த சோதனையின் போது பிரித்தானியாவில் தங்குவதற்கோ அல்லது வேலை செய்வதற்கோ சட்டப்பூர்வ உரிமை இல்லாத ஒரு நபர்...

கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைத் தமிழன் மரணம்!

0

கனடாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்க்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடுகடத்தப்பட்ட நபை தாயகத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு குறித்த நபர் mv sun sea கப்பலில் கனடா சென்று ஏதிலி கோரிக்கையை விடுத்திருந்தார். 2010 ஆகஸ்ட் 13 அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியை mv sun sea கப்பல் சென்றடைந்தது. mv sun sea கப்பலில் சென்ற 492 இலங்கை தமிழர்கள் கனடாவில் தஞ்சம் கோரி இருந்தனர். இந்நிலையில் குறித்த நபரின் தஞ்சகோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் கடந்த 17...

சுகாதாரச் சீர்கேடு! யாழ் திருநெல்வேலி அம்மாச்சி உணவகம் இழுத்து மூடப்பட்டது!

0

சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளது. அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக , பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் , அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை , ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால் , குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளார். அதேவேளை அம்மாச்சி உணவக உணவு கையாள்வோருக்கான விழிப்பணர்வு...

யாழில் சீதனம் தராவிட்டால் உன்னை விட்டு விட்டு வெளிநாடு போவேன் என கூறிய காதல் கணவன்! மனைவி ஜென்ஸி மரணம்!

0

யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் இரண்டு வருடங்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவரை காதலித்து, நான்கு மாதங்களுக்கு முன்னர்  திருமணம் செய்துள்ளார். இருப்பினும் குறித்த பெண்ணின் கணவரது தாயார் அவரை ஏற்கவில்லை. பின்னர் 25 பவுண் தங்க நகையும், வீடும் சீதனமாக கேட்டு நச்சரித்துள்ளார். குறித்த பெண்ணின் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பம் என்பதால் அதனை வழங்க முடியவில்லை. பின்னர் தனது மகனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு முயற்சித்தவேளை அந்த...

யாழில். உணவகத்திற்குள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றம் – உணவகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!

0

யாழ்ப்பாணத்தில் உணவகம் ஒன்றினுள் பூனை வளர்த்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவகத்திற்கு சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில், சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது, உணவகத்தில் இருந்து கழிவுநீரை வெளியில் விட்டு துர்நாற்றம் ஏற்படுத்தியமை, கடைக்குள் பூனை வளர்த்தமை, அழுகிய முட்டை இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருந்தமை மற்றும் திறந்த வெளியில் சமைத்தமை போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு எதிராக உணவாக உரிமையாளருக்கு எதிராக...

கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு அருகில் சைக்கிளில் சென்றவரை துரத்தித் துரத்தி தாக்கிய யானை!

0

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நபர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரணைமடுக்குளத்தில் தூண்டில் மீன் பிடிப்பதற்காக சென்ற 65வயதானவர் மீது யானை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றுள்ளது. தூண்டிலில் மீன் பிடிப்பதற்காக சைக்கிளில் சென்ற போது யானை தாக்கியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவரை உடனடியாக மீனவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.