களுத்துறையில் பணத்தை திருடும் காகம்!! நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் முறைப்பாடு!!

0

களுத்துறை பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. இந்தக் காகம் யாரோ ஒரு வீட்டில் வளர்க்கப்படுவதாக அந்தப் பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காகம் வங்கிகளுக்கு அருகிலுள்ள கடைகள் மற்றும் பகுதிகளுக்குள் பறந்து பணத்தை எடுக்கிறது. கடை ஒன்றுக்குள் நுழைந்த காகம் அங்கிருந்து பணத்தை திருடிச் செல்லும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தப் பகுதியிலுள்ள அலுவலகம் ஒன்றுக்கு சென்ற பெண் ஒருவரின் உடலில் காகம் ஒளிந்து கொண்டிருக்கும்...

மாங்குளத்தில் மோட்டார் சைக்கிளுடன் மோதிய பவுசர்; இளைஞர் உயிரிழப்பு.. பெண் காயம்.!

0

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியின் மாங்குளம் நகருக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு குறித்த பகுதியில் திரவப் பால் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம், மற்றுமோர் பெண் படுகாயமடைந்துள்ளார். தற்சமயம் அவர் சிகிச்சைக்காக மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல் தாக்கியதில் சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த 4 பேர் பலி!! Video

0

இந்தியா கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சோளம் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த துயர சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை தொடங்கிய முதல் நாளே பல்வேறு இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இந்தாண்டு இயல்பை விட அதிக மழை இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இந்நிலையில், கடலூர் அருகே மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் உயிரிழந்த...

சட்டவிரோதமான முறையில் ஆமை இறைச்சியை வைத்திருந்தவர் கைது!

0

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் இன்றைய தினம் (16) 35 கிலோ 400 கிராம் எடையுடைய ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் இடமாற்றக் குழப்ப நிலை!! வடக்கு ஆளுநரால் வெளியிடப்பட்ட விசேட ஊடக அறிக்கை!!

0

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றச் சபை மற்றும் மேன்முறையீட்டுச் சபை ஆகியனவற்றில் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் குழப்பகரமான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில், இரு சபைகளிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் அவர்களிடம் அறிக்கை கோரப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அவரால் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கை, தெளிவுபடுத்தல்களுக்காக ஊடகங்களுக்கு வழங்கப்படுகின்றது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வடக்கு மாகாண வருடாந்த ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக 2025/2026 ஆம் ஆண்டுக்குரிய வலயங்களுக்கு இடையிலான இடமாற்ற...

யாழில் திருமணம் முடித்து சில மாதங்களேயான நிலையில் திவ்யா வாகன விபத்தில் பலி!!

0

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையதனதிற்கு செல்லும் போது ஏற்பட்ட வாகன விபத்தில் இளம் குடும்பப் பெண் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3:00 மணியவில் அனுரதபுரதிற்கு அண்மையில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது இச் விபத்து சம்பவத்தில் ஏழாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அகிலன் திவியா வயது 31என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் திருமணம் செய்து ஒரு வருடமான நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கணவர் ஏழாலைப் பகுதியில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார்.இவ் விபத்து சம்பவத்தில் மேலும் ஒரு வயோதிபப்...

செவ்வந்தியை விட முக்கியமானவராக மாறிய யாழ்ப்பாண ஜே.கே.பாய்: வெளிநாட்டு ஆசையில் சிக்கினாரா சாவகச்சேரி தர்க்ஷி?

0

குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையில், இஷாரா செவ்வந்தியை மொரீஷியஸ் பெண் போல ஆள்மாறாட்டம் செய்து மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல கெஹல்பத்தர பத்மே திட்டமிட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட மொரீஷியஸ் பாஸ்போர்ட் நேபாளத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பாஸ்போர்ட்டை இஷாராவுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபர் தயாரித்தார். போலி பாஸ்போர்ட்டில் மொரீஷியஸ் குடிவரவு மற்றும் குடியேற்ற அலுவலகத்தின் சில அதிகாரப்பூர்வ முத்திரைகளை மட்டும் ஒட்டிய பிறகு, அவர் மொரீஷியஸுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த...

நான் பிடிபடுவேன் என எனக்கு முன்பே தெரியும்; எனக்கு தற்போது நிம்மதியாக உள்ளது!பொலிஸாரிடம் கூறிய செவ்வந்தி

0

நான் ஒரு நாள் கைதுசெய்யப்படுவேன் என்று எனக்கு தெரியும் என இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் கூறியுள்ளார். நேபாளத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட போதே இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம் இவ்வாறு கூறியுள்ளார். நேபாளத்தில் நான் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தேன். இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதில் எனக்கு விருப்பமில்லை. இங்கு இருப்பதைவிட எனது நாட்டிற்கு செல்வது சுகம் என நினைத்தேன். எப்போது எனது நாட்டிற்கு செல்வேன் என்று இருந்தேன். விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன் ஆனால் நான் எனது நாட்டிற்கு சென்றால் பொலிஸார் என்னை கைதுசெய்வார்கள் என்பதால் விருப்பமின்றி நேபாளத்தில் இருந்தேன் எனவும் இஷாரா செவ்வந்தி பொலிஸாரிடம்...

இஷாரா செவ்வந்தி வெளிநாடு தப்பிச் செல்ல யாழைச் சேர்ந்த ஜே.கே.பாய் உதவி!

0

நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 05 சந்தேகநபர்களை விரைவில் இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு புதுக்கடை நீதிமன்றுக்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த இசாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில் கெஹேல்பத்ர பத்மேவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் நேபாள காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட...

புலம்பெயர் தமிழர்களுக்கு முக்கிய ஆலோசனை!

0

அகதிகளாக பொருளாதார ஏதிலிகளாக ஐரோப்பாவிற்கு படையெடுத்து வந்த புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கை 2030 ம் ஆண்டிறகு பின்னர் மிகவும் கடினமாக இருக்கப் போகின்றது. எப்படி கடினமாக இருக்க போகின்றது என விளக்குகிறேன்… தொடர்ந்து வாசியுங்கள். உலகப் பொருளாதாரம் இப்போது வரலாறு காணாத கடன் சுமையில் தத்தளிக்கிறது, இது ஒரு பெரிய பொருளாதாரச் சரிவுக்கு, அதாவது Great Depression போன்ற ஒரு நிகழ்வுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்ற அச்சத்தை எழுப்புகிறது. 2025-இல் உலகளாவிய கடன் அளவு $315 trillion ஐ தாண்டியுள்ளது. அதேசமயம், physical money (cash +...