மனைவியை பார்க்க அடங்காத ஆசை! யாழிலிருந்து களவாக இந்தியா சென்ற சுரேசுக்கு நடந்தது என்ன?
யாழ்ப்பாணத்திலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக படகில் புறப்பட்டு வேதாரண்யம் கடற்கரையில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலம் இராமேஸ்வரம் சென்ற இலங்கையை சேர்ந்த நபர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து பரமக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுறுவிய இலங்கை நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகிக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று (08) அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு பொலிஸார் திடீர்...
பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (07) நண்பகல் பேராதனை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழைச் சேர்ந்த பாதள உலக ஜே. கே. பாய் வெளிப்படுத்திய கள்ள பாஸ்போர்ட் பற்றிய விபரம் இதோ…
இலங்கையில் இருந்து தப்பிச் சென்ற குற்றவாளிகளுக்கு மோசடியாக மொரீசியஸ் நாட்டுக்கான கள்ள கடவுச்சீட்டுக்களை தயாரித்த விடயத்தை கே.ஜே. பாய் வெளிப்படுத்தியுள்ளார். ஜே.கே. பாய் என அழைக்கப்படும் கெனடி செபஸ்தியன் பிள்ளை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் சேர்ந்தவராவார். கெஹல்பத்தர பத்மே, இஷாரா செவ்வந்தி, பெக்கோ சமன், அவரது மனைவி, பத்து வயது சிறுமி உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புடைய பலருக்கு மொரீசியஸ் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதில் ஜே.கே. பாய் முக்கிய மூளையாக செயற்பட்டுள்ளார். மொரீசியஸ் கடவுச்சீட்டு துருக்கியில் உள்ள ஒரு கடத்தல்காரரால் தயாரிக்கப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. துருக்கி கடத்தல்காரரின் பணி டுபாயில் வசிக்கும்...
யாழில் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்த தங்கராசா யாழ் பஸ் நிலையத்தில் சடலமாக மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் பேருந்து தரப்பிடமொன்றில் இருந்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கொல்லங்கலட்டி பகுதியை சேர்ந்த சின்னன் தங்கராசா (வயது 74) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடமொன்றில் , முதியவரின் சடலம் காணப்படுவதாக சுன்னாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். குறித்த முதியவர் கடந்த 03 ஆண்டு காலமாக குடும்பத்தை பிரிந்து யாசகம் பெற்று , பொது இடங்களில் தங்கி வாழ்ந்து...
கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை – இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை!
கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் தாய், அவரது நான்கு குழந்தைகள் , மற்றும் அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் உட்பட 06 பேரை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையரான 20 வயது இளைஞனான பெப்ரியோ டி சொய்சா , என்பவருக்கு கனேடிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலையாளியான பெப்ரியோ டி சொய்சா ஒட்டாவாவின் பர்ஹேவன் புறநகர்ப் பகுதியில் வசித்த விக்ரமசிங்க குடும்பத்தினருடன் அவர்களின் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வந்துள்ளார் நண்பர் என்ற ரீதியில் கற்றல் செயற்பாடுகளுக்காக,...
யாழில் பெரும் துயரம்; ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு |
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் வடமராட்சி வதிரி பகுதியை சேர்ந்த 46 வயதான தாயாரே உயிரிழந்துள்ளார். தவிக்கும் பச்சிளம் குழந்தைகள் குறித்த பெண் யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருமணமாகி நீண்ட வருடங்களின் பின் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை...
யாழில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சட்டவிரோத நிதி சேகரிப்பு கும்பல்..!
யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த கும்பல் ஒன்று காவல்துறையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (06.11.2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழுவில் உள்ளவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு உடலில் பாதிப்புகள் உள்ளதாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு, அவற்றுக்கு சிகிச்சை செய்வதற்கு பாரியளவு நிதி தேவை எனவும் பொய்கூறி வெவ்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில், குறித்த கும்பல் நேற்று (06.11.2025) யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளது. இது குறித்து காவல்துறையினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, குறித்த குழுவில் இருந்த மூவரையும் அழைத்துச்...
முல்லைத்தீவில் 26 வயதில் 4 திருமணங்கள் செய்த யுவதி!
அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து...
2பிள்ளைகளின் தாயாரான ரஞ்ஜனியை காணவில்லை!
பதுளை , தெல்பெத்த தோட்ட மேல் பிரிவை சேர்ந்த நல்லமுத்து ரஞ்ஜனி வயது 46 இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போய்யுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0552222222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0775216725,0762315106 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும். தகவல் -ராசலிங்கம் கருனன்.
சுவிஸ்லாந் வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆனந்தஜோதி பலி!
2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலத்திய வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார பரிசோதகர் ஆனந்தஜோதி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.










