களவாடிய பணத்தில் களைகட்டிய காதலர் தினம்..! வசமாக பிடிபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!

0

வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடி காதலர் தினம் கொண்டாடிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அடகு நிலையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட குறித்த நபர் நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த பெரும் தொகை ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி...

இன்று காலை ரயில் மோதி இழுத்துச் செல்லப்பட்ட கெப் வாகனம்!! இரு இளைஞர்கள் பலி!! வீடியோ

0

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி' விரைவு ரயிலுடன் மோதிய கெப் வானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மூவர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 22 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.ரயிலில் மோதியதையடுத்து, குறித்த கெப் வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் கடவையில் வர்ண...

இன்றைய (22.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வீண் செலவு குறையும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வர வேண்டிய பணம் வந்து சேரும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9 ரிஷபம் இன்று அலைச்சல் ஏற்படலாம். அடிக்கடி கனவுகள் வரக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள்...

பிருத்தானியாவில் ஈழத்தமிழரான கண்ணனின் பூபதி உணவகத்தில் நடந்தது என்ன? கண்ணன் கூறும் விளக்கம் இதுதான்!!

0

பிரித்தானியாவில் ஈழத் தமிழர் ஒருவருக்குச் சொந்தமான பிரபல உணவகம் ஒன்றில், விசா இன்றி பணியாற்றிய நிலையில் முருகன் மற்றும் ஜெயக்குமார் என்பவர்கள் கைது செய்யப்பட்டதோடு, அது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பர்மிங்காம் பகுதியில் அமைந்துள்ள பூபதி உணவகத்தில் பணியாற்றிய இரண்டு தமிழ் சமையல்காரர்கள், மிகவும் குறைந்த சம்பளத்தில் அதிக நேரம் வேலை செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த சர்ச்சைகள் தொடர்பான உண்மைத் தன்மையினை உணவகத்தின் உரிமையாளரான பூபதி கண்ணன் என அழைக்கப்படும் குணசிங்கம் ராசிதரன், "உயற்சி" வலையொளிக்கு (YouTube)...

புங்குடுதீவில் அகிலனை வெட்டிக் கொன்றவர்களில் மற்றுமொருவன் பிடிபட்டான்!! ஒருவன் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!!

0

புங்குடுதீவில் கடந்த 2025 ஓகஸ்ட் மாதம் தனியார் பேருந்து உரிமையாளர் அகிலன் என்பவரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது சந்தேகநபர் இன்று  ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இந்தக் கொலைக் கும்பலின் பிரதான சந்தேகநபரான அனலைதீவைச் சேர்ந்த நபர் கடந்த செப்ரெம்பர் 14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியொன்றில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், சுமார் 5 மாதங்களின் பின்னர் புங்குடுதீவைச் சேர்ந்த மற்றுமொரு நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

கறுப்புஅங்கியும், கையில சுருட்டின பேப்பரும். யாழ்ப்பாணத்தின் புதிய ‘கௌரவ’ பிச்சைக்காரர்கள்!

0

இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்...  இந்த வருசமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாசலில கறுப்பு அங்கியும் கையில ஒரு சுருட்டி வைச்ச பேப்பருமா நிக்கிற இளவட்டங்களைப் பாக்க வடிவாத்தான் கிடக்கு. கேமராவுக்கு முன்னால அந்தப் புன்னகையும், பெத்தவங்கள் முகத்தில பெருமிதமும்... ஆனா, இந்த ஓலப்பேயத்தனத்திற்கு பின்னால ஒளிஞ்சிருக்கிற "எதிர்கால சூனியம்" இவங்களுக்குத் தெரியுதோ இல்லையோ, சமூகத்துக்கு நல்லாவே தெரியும்! கண்டியளே... இந்த வருசம் மட்டும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 3252 'வேலையில்லாப் பட்டதாரிகளை' உற்பத்தி செய்து, ரோட்டுக்கு அனுப்பியிருக்கு. பலத்த கரகோசங்கள்! கேட்கக் கொஞ்சம் கசப்பாத்தான் இருக்கும், ஆனா உண்மையை உரக்கச்...

மட்டு’வில் இளம் பெண் வைத்தியர் பிரணவசோதி பரிதாபகரமாக மரணம்!

0

காரைதீவைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி அவர்கள் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்தார் அம்பாறை காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்தவரும் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவரின்   திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்  பலரும் இஅரங்கல்களை...

பிருத்தானியாவில் மனைவி நிரோ வேறொருவருடன் உல்லாசமாக இருந்ததால் அவளைக் கொலை செய்த இலங்கை கணவனுக்கு ஆயுள் தண்டனை! நடந்தது என்ன?

0

பிரித்தானியாவில் பிரிந்து வாழ்ந்த தனது மனைவி வேறொருவருடன் பழகியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், அவரை வாகன நிறுத்துமிடத்தில் கத்தியால் குத்திக்கொலை செய்த 37 வயதுடைய இலங்கை நபர் ஒருவருக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. 32 வயதுடைய jதா என அழைக்கபிப்படும் நிவுன்ஹெல்லகே தோனா நிரோதா கல்பனி நிவுன்ஹெல்லா, 2025 ஆகஸ்ட் 21 அன்று கார்டிப்பின் (Cardiff) ரிவர்சைட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். பல மாதங்களாக நிரோதாவைப் பிரிந்து வாழ்ந்த திசர வேரகலகே என்ற நபர், ஆரம்பத்தில் இக்குற்றச்சாட்டை...

இன்றைய (18.02.2026) ராசி பலன்கள்

0

மேஷம் இன்று தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். பார்ட்னர்களிடம் இருந்து வந்த மனக்கிலேசல்கள் மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தக்க பலன் கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9 ரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர்...

கனடாவில் குற்றச்செயலில் ஈடுபட்ட தமிழர்கள் உட்பட 296 பேர் நாடுகடத்தல்!! நடந்தது என்ன?

0

கனடாவில் மிரட்டி பணம் பறிக்கும் குழுக்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ், தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டினரை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விசாரணையில் உள்ளவர்கள்: பிரிட்டிஷ் கொலம்பியாவில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய 296 வெளிநாட்டினரிடம் கனடா குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நடவடிக்கைகள்: ஏற்கனவே 10 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 32 பேரை வெளியேற்றுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 9 பேர் நாடு கடத்தப்படுவதற்கான விசாரணைக்காகக் காத்திருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகள்: இக்குற்றங்கள் பிரிட்டிஷ் கொலம்பியா, ஒண்டாரியோ, ஆல்பர்ட்டா மற்றும் மனிடோபா ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளதாகப்...