கிளிநொச்சியில் மருமகனால் மாமனார் அடித்துக் கொலை!
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில், மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், அங்கு வந்த மருமகன் மகளைத் தாக்க முற்பட்டபோது, அதனைத் தடுக்கச் சென்ற மாமனாரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கதிரவேலு சிவராசசிங்கம் (வயது-59) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் 25 வயதுடைய மருமகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரது...
யாழ் போதனாவைத்தியசாலையில் பிரதாபனின் நிறைமாத கர்ப்பிணி மனைவி காப்பாற்றப்பட்டது எப்படி?
சாவகச்சேரி - மட்டுவிலைச் சேர்ந்த பிரதாபன் என்பவரது மனைவி ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் 25.09.2025 அன்று அவருக்கு பிறசருடன் (உயர்குருதி அமுக்கம்) கூடிய வலிப்பு திடீரென ஏற்பட்டது. ஆகையால் அவர் நோயாளர் காவுவண்டி முலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். பின்னர் அவரை மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியாலைக்கு கொண்டு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் மூலம் வைத்தியர் கஜேந்திரனுக்கு தகவல் வழங்கப்பட்டது. தனது பணி முடிந்து...
சிறுவர் பாடசாலை ஆசிரியர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது!
சிறுவர் பாடசாலை (மொன்டிசோரி) ஆசிரியர் ஒருவர் ஐஸ் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 'மியிஜய செவன' தொடர்மாடி குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மாதம்பிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகலின் அடிப்படையில் தோடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறித்த வீட்டில் சோதனை செய்த போது, ஆசிரியரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தில் ஆசிரியிடம், தனது கணவர் தொடர்பில் விசாரித்த போது அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். பின்னர் அவர் வீட்டுக்கு வருதாக கிடைத்த தகவலின் பேரில் காத்திருந்த பொலிஸார். வீட்டுக்கு...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் ரவுடித்தனம் புரிந்தவருக்கு நடந்த கதி!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குள் கத்தியுடன் அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அம்புலன்ஸ் சாரதி மற்றும் வைத்தியசாலையில் பாதுகாப்புக் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிர்மாய்ப்பதற்கு முயற்சித்த இளைஞர் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு வைத்தியசாலைக்குள் சென்ற வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரின் விவரத்தைக் கூறி அந்த இளைஞரைப் பார்வையிடுவதற்கு வழிகாட்டுமாறு அம்புலன்ஸ் சாரதி ஒருவரைக் கேட்டுள்ளார். இந்நிலையில் அவரின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த...
விபத்தில் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் பலி!
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் இடம்பெற் விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் மரணம் பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். அவர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று ஓட்டமாவடி நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது சடலம் தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,...
யாழில் தனது பெறாமகளின் நகையை திருடிய போதைக்கு அடிமையான சித்தப்பா!
தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் போதைப்பாவனைக்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார்...
கடுகன்னாவ மண்சரிவின் உயிரிழப்பு அதிகரிப்பு ; பல்கலை விரிவுரையாளரும் சடலமாக மீட்பு!
கண்டி, பஹல கடுகண்ணாவ பகுதியில் பிரதான வீதியோரத்தில் இருந்த வியாபார நிலையமொன்று மீது பாரிய கற்பாறையுடன் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த விபத்தில், ஒருவர் முன்னதாகவே சடலமாக மீட்கப்பட்ட நிலையில் , மண்ணுக்குள் சிலர் புதையுண்டு இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில் 10 மணி நேர மீட்புப் பணியின்போது மேலும் ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இராணுவம், தீயணைப்புப் படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். உயிரிழந்தவர்களில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவரும்...
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் லீக் ஆகியதா? விசாரணைக்கு உத்தரவு!
இம்முறை இடம்பெறும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பல்வேறு செய்திகள் பரவியிருந்தன. இது குறித்து பரீட்சைகள் திணைக்களம் மேற்கொண்ட உள்ளக விசாரணையில், வினாத்தாள் கசிந்தமைக்கான எந்தவொரு உறுதியான தகவலும் கிடைக்கவில்லை என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது குறித்து முறையான மற்றும்...
2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – முழு விபரம் இதோ!
ஆண்கள் பாடசாலைகள் (Boys Schools) இ.ல பாடசாலை பெயர் (தமிழ்) இடம் வெட்டுப்புள்ளி 1 ரோயல் கல்லூரி கொழும்பு - 07 171 2 டி.எஸ். சேனநாயக்க கல்லூரி கொழும்பு - 07 152 3 புனித அந்தோனியார் கல்லூரி கண்டி 146 4 இசிபத்தான கல்லூரி கொழும்பு - 05 146 5 ஹாட்லி கல்லூரி பருத்தித்துறை 145 6 புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி ஹட்டன் 143 7 யாழ். இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் 139 8 கா/ ஸாஹிரா கல்லூரி சாய்ந்தமருது 138 9 கொழும்பு இந்து கல்லூரி கொழும்பு - 04 134 10 சரஸ்வதி மத்திய கல்லூரி பதுளை 132 11 ஓட்டமாவடி மத்திய கல்லூரி ஓட்டமாவடி 132 12 மட்/ புனித மிக்கேல் கல்லூரி மட்டக்களப்பு 132 13 யாழ். மத்திய கல்லூரி யாழ்ப்பாணம் 132 14 மெதடிஸ்ட் மத்திய கல்லூரி மட்டக்களப்பு 132 15 காத்தான்குடி மத்திய கல்லூரி காத்தான்குடி 132 16 ஸாஹிரா தேசிய பாடசாலை புத்தளம் 131 17 கிண்ணியா மத்திய கல்லூரி கிண்ணியா 131 பெண்கள் பாடசாலைகள் (Girls Schools) இ.ல பாடசாலை பெயர் (தமிழ்) இடம் வெட்டுப்புள்ளி 1 முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு - 04 156 2 மஹ்மூத் மகளிர் கல்லூரி கல்முனை 149 3 பாத்திமா பாலிகா ம.வி புத்தளம் 149 4 வேம்படி...
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்!
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மற்றைய ஆண் குழந்தையும் இன்றையதினம் உயிரிழந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த தர்ஷன் அஸ்வின் (9 மாதங்கள்) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் குறித்த இரண்டு குழந்தைகளும் பிறந்த நிலையில் ஏப்ரல் மாதம் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் குழந்தை மயக்கமுற்றுள்ளது. இந்நிலையில் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்....










