2பிள்ளைகளின் தாயாரான ரஞ்ஜனியை காணவில்லை!
பதுளை , தெல்பெத்த தோட்ட மேல் பிரிவை சேர்ந்த நல்லமுத்து ரஞ்ஜனி வயது 46 இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போய்யுள்ளதாக பதுளை பொலிஸ் நிலையத்தில் அவரது கணவர் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். குறித்த படத்தில் உள்ளவரை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி 0552222222 என்ற தொலை பேசிக்கோ அல்லது 0775216725,0762315106 என்ற தொலைபேசிக்கு அறிய தரவும். தகவல் -ராசலிங்கம் கருனன்.
சுவிஸ்லாந் வாகன விபத்தில் திருகோணமலையைச் சேர்ந்த ஆனந்தஜோதி பலி!
2025 நவம்பர் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை, சூரிக் மாநிலத்தின் Pfäffikon பகுதியில் வாகன விபத்தில் 53 வயதான விநியோக வாகன ஓட்டுநர் உயிரிழந்தார்.Kempttalstrasse எனும் பகுதியில் சாலையில் இருந்து விலத்திய வாகனம் ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளானார். விபத்து நடந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார பரிசோதகர் ஆனந்தஜோதி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது!
பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட 'ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை, பொரலஸ்கமுவ, காலி, பசறை மற்றும் பதுளைப் பகுதிகளை சேர்ந்த 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய நபரும் அடங்குவதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தனர் என்பதுடன், அவர்களிடம் சிறிய அளவில் கொக்கெய்ன் மற்றும் ஐஸ் போதைப்பொருள்...
கற்பிட்டியில் 8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள கேரள கஞ்சா கைப்பற்றல் !
கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை செவ்வாய்க்கிழமை (04)நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன. 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்பாடு மற்றும் 'போதையில்லா நாடு - ஆரோக்கியமானபிரஜைகள் வாழ்க்கை' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து விடுவிக்கும் தேசிய பணிக்கு பங்களிக்கும் கடற்படை, தீவைச் சுற்றியுள்ள கடற்கரை மற்றும் உள்ளூர் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (04)...
புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிசார் தேவிபுரம் பகுதியில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனன். இதன்போது, கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த 11 இலட்சத்து 69 ஆயிரத்து 500 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் , 7 பீப்பாய்கள் என்பன புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி 4 ஆண்டுகளாக பா லி ய ல் வன்புணர்வு! அம்பாறையில் அதிர்ச்சி சம்பவம்!
உடன் பிறந்த சகோதரனை அச்சுறுத்தி தொடர்ச்சியாக பாலியல் உறவில் ஈடுபட்ட 22 வயதான சகோதரி கர்ப்பமான நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லரைச்சல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிஷாந்த பிரதிப் குமாரவின் வழிகாட்டுதலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பெண்ணின் தந்தை கல் வாடியில் வேலை செய்வதுடன், தாய் இல்லத்தரசியாக இருக்கின்றதாகத் தெரியவந்துள்ளது. சகோதரனுக்கு சுமார் 11...
மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இராணுவ சிப்பாயை கொ லை சிப்பாய்
தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று மகாஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார். மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில்...
வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை!! கணவனும் குழந்தையும் மாயம்!!
வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால்...
இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமானது எப்படி..? ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை
கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு, அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு மற்றும்...
அவுஸ்ரேலியாவிலிருந்து வந்து கேகாலையில் ஒன்றாக உயிர் நீத்த காதல் தப்பதிகள்!! நடந்தது என்ன?
கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது, கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர். மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் திரும்பினர். எனினும் கடந்த 31ஆம் திகதி மனைவி உயிரிழந்தார்....










