யாழில் பாடசாலை மாணவி ஏழரை மாத கர்ப்பம்: சகோதரன் உள்ளிட்ட இரு இளைஞர்கள் கைது!
யாழில் 15 வயதான பாடசாலை மாணவியொருவர் ஏழரை மாத கர்ப்பிணியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை வல்லுறவுக்குள்ளாக்கியதாக சகோதரன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு, பனிப்புலம் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. பாடசாலை மாணவியான 15 வயது சிறுமி, வயிற்று வலி இருப்பதாக தாயாரிடம் கூறியதையடுத்து, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். வைத்திய பரிசோதனையில், மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதுவரை மாணவி பாடசாலை சென்று வந்தார். மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும், தாயார் உடனடியாக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து...
பருத்தி்துறையில் தொழிலுக்குச் சென்ற 4 மீனவர்களைக் காணவில்லை!
பருத்தித்துறை முனை, மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற 4 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தொிவிக்கின்றனர். நேற்று (27) இரவு 11 மணியளவில் குறித்த மீனவர்கள் 2 படகுகளில் கடலுக்கு சென்ற நிலையில், இதுவரையில் அவர்கள் கரைக்கு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அந்த பகுதியில் நேற்று முதல் கடுமையான காற்று வீசிவருவதனால் அவர்கள் பயணித்த படகுகளுக்கு கரைக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணிகளில் பிரதேச மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
யாழ் நயினாதீவுக் கடலில் பாடசாலை அதிபர் வீழ்ந்து பலியான பின்னணி! நடந்தது என்ன?
'கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்' என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். இன்றைய தினம் நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபர் பயணிகள் படகை தவறவிட்டமையால் , கடற்தொழிலாளர்களின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி வரும் போது கடற்சீற்றம் காரணமாக படகு கடலில் அடிபட்டதில் படகில் இருந்து தவறி கடலினுள் விழுந்ததில் உயிரிழந்துள்ளார். அதிபர் நயினாதீவை...
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி இளம் குடும்பப் பெண் பலி!
காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். சாலியபுர பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது. சுயதொழிலில் ஈடுபட்டு வந்த அவர், அநுராதபுரத்திலுள்ள கடை ஒன்றுக்குச் சென்று 'ஐஸ் பக்கெட்டுகளை' விற்பனை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார். இந்நிலையில் குறித்த ரயில் கடவையில் பாதுகாப்பு கதவுகள் இல்லை எனவும், அங்கு எந்தவொரு...
யாழில் படகு விபத்து!! பாடசாலை அதிபர் பலி! வீடியோ
நயினாதீவு படகு கவிழ்ந்ததில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபர் நடராசா மயூரன் நீரில் மூழ்கி இன்று மாலை அகால மரணம் அடைந்துள்ளார். குறித்த அதிபர் புங்குடுதீவு பாடசாலையிலிருந்து அண்மையில் நயினாதீவு மகா வித்தியாலய அதிபராக பொறுப்பேற்றுமை குறிப்பிடத்தக்கது. .
யாழில் ரவுடிக் குடும்பலைச் சேர்ந்த 17 வயது இளைஞனை கைது செய்யச் சென்ற பொலிசார்!! மகனை கைது செய்தால் தனது கழுத்தை அறுப்பேன் என கூறி பிளேட்டால் கழுத்தை அறுத்த தாயார்!! நடந்தது என்ன? வீடியோ
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தாவடி பகுதியில் வன்முறை கும்பல்களுடன் தொடர்புபட்டு வீடுகளை அடித்து உடைத்தும் செயல்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் 17 வயது இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிய வருவது, கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட நிலையில் அங்கே வருகை தந்த இளைஞனின் தாயார் பொலிஸாரை மிரட்டி தனது கழுத்தை தானே பிளேட் மூலம் அறுத்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பொலிஸாரை மிரட்டுவதால்...
மிளகாய்த்தூள், கோழி முதல் பணம், நகை வரை திருட்டு; யாழில் வீட்டை சூறையாடிய நபர்கள்!
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை சின்னம்மா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நேற்றுமுன்தினம் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் உள்ளவர்கள் மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக நேற்று காலை கொழும்பிற்கு சென்றுள்ளனர். இதன்போது வீட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள் மிளகாய் தூள், சரக்குத்தூள், பயிற்றம் உருண்டைகள், மூன்று கோழிகள், கால் பவுண் தோடு, ஒரு மூக்குத்தி, ஒரு தொகை பணம் மற்றும் பித்தளை அட்டியல் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் கொழும்பு சென்றவர்கள் நேற்று மாலை வீட்டிற்கு...
கொரியர் சேவை ஊடாக போதை மாத்திரைகளை பெற்று யாழில். வியாபாரம் செய்த குற்றத்தில் ஒருவன் கைது!
கொரியர் சேவை ஊடாக கொழும்பில் இருந்து போதை மாத்திரைகளை யாழ்ப்பாணத்திற்கு வருவித்து விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதியில் உள்ள தபால் நிலையம் ஒன்றிற்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த பொதி தொடர்பில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதனை பொலிஸார் பெற்று சோதனையிட்ட போது, அதனுள் 1800 போதை மாத்திரைகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து குறித்த பொதி சேர்ப்பிக்கப்பட வேண்டிய விலாசத்திற்கு உரிய பெயர் உடைய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை...
யாழிலிருந்து கள்ளக்காதலியுடன் கொழும்பு சென்ற அரச உத்தியோக்தர்! இடையில் பஸ்சை மறித்து மனைவி தாக்குதல்!!
நேற்றிரவு சொகுசு பஸ் மூலம் கொழும்பு சென்ற அரச உத்தியோகத்தர் மீதும் இன்னொரு பெண் மீதும் பஸ்சை மறித்து உள்ளே புகுந்த பெண்ணும் 20 வயதான யுவதியும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அரியாலை நெடுங்குளம் சந்திக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கச்சேரிடியப்பகுதியிலிருந்து பஸ்சை தமது மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த தாயும் மகளுமே நெடுங்குளம் சந்திப்பகுதிக்கு அருகில் வைத்து பஸ்சை மறித்து அரச உத்தியோகத்தரையும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் தாக்கியுள்ளார்கள். பஸ்சில் தாக்குதலுக்கு உள்ளான அரசஉத்தியோகத்தரையும் பெண்ணையும் நடுவீதியில் இறக்கிவிட்டுவிட்டு சொகுசு...
இங்கிலாந்தில் 55 வயது பெண் மருத்துவ நிபுணர் அச்சம்பாள் மீது கணவன் சந்தேகப்பட்டு நடந்த கொலை! கணவர் பிடிபட்டது எப்படி?
இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, பிரபல மலையாள மருத்துவர் அச்சம்மா ஜானின் 58 வயதான கணவரை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியின் திறமையான முன்னாள் மாணவியாகவும், இங்கிலாந்தின் முன்னணி மருத்துவராகவும் இருந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை, மில்டன் கெய்ன்ஸில் உள்ள வூல்வர்டன் மற்றும் ஈஸ்ட் மூர் டிரைவில் அமைந்துள்ள தம்பதியரின் வீட்டில் வைத்து கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். வீட்டிலிருந்து அவசர உதவி கோரி செய்தி வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்றபோது, அச்சம்மா ஜான்...










