யாழ் வல்லை வெளி மதவுக்குள் தலை கீழாகக் கவிழந்த கார்!! 3 பேர் படுகாயம்!! வீடியோ

0

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் தடம்புரண்டதில் மூவர் படுகாயமடைந்தனர். அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டது. இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர். திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும், மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாகபொலிசார் தெரிவித்தனர். காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

கிரீன்லாந்துக்காக நேட்டோ நாடுகள் மீது ட்ரம்ப் விதித்த அதிரடி வரி! – ஒரே ஒரு தீவு…”நாங்கள் விற்பனைக்கு அல்ல!”

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நாடுகள் மற்றும் தனது நெருங்கிய நட்பு நாடான பிரிட்டன் மீது அதிரடியாக வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது உலக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஆர்க்டிக் பகுதியில் அமைந்துள்ள தீவான 'கிரீன்லாந்தை' (Greenland) அமெரிக்காவுக்கு விற்க மறுத்ததற்காக, இந்த பொருளாதாரத் தாக்குதலை ட்ரம்ப் தொடுத்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்ப்போம். 1. என்ன நடக்கிறது? (The Current Crisis) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க் நாட்டிற்குச் சொந்தமான தன்னாட்சிப் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா விலைக்கு வாங்க விரும்புவதாக...

இரத்தத்தைச் சுத்திகரித்து சிறுநீரை உற்பத்தி செய்யும் முழுமையான மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் உருவாக்கிய விஞ்ஞானிகள் !

0

இரத்தத்தைச் சுத்திகரித்து சிறுநீரை உற்பத்தி செய்யும் முழுமையான மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் உருவாக்கிய விஞ்ஞானிகள் விஞ்ஞானிகள் இரத்தத்தைச் சுத்திகரித்து, சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, முழுமையாகச் செயல்படக்கூடிய மனிதச் சிறுநீரகத்தை ஆய்வகத்தில் வளர்த்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். சிறுநீரக நோயுடன் போராடும் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்த முன்னேற்றம் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. மனிதச் செல்களைப் பயன்படுத்தி உறுப்புகளை உயிரியல் முறையில் உருவாக்குவதன் மூலம், உறுப்பு தானம் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டைக் குறைக்கவும், உடல் புதிய...

மன அழுத்தத்தை விரட்ட வெறும் 20 விநாடி கட்டிப்பிடித்தால் போதும் – ஆய்வில் தகவல்.!

0

கட்டிப்பிடித்தல் அல்லது அரவணைப்பதன் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகள் மிகவும் வியக்கத்தக்கவை. நீங்கள் ஒருவரை குறைந்தது 20 விநாடிகள் கட்டிப்பிடிக்கும்போது, உங்கள் உடல் 'ஆக்சிடோசின்' (Oxytocin) என்ற ஹார்மோனை வெளியிடுகிறது. இது பெரும்பாலும் "காதல் ஹார்மோன்" அல்லது "பிணைப்பு ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது. இது வெறும் உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை மட்டுமல்ல; உங்கள் உடல் முழுவதும் நேர்மறையான மாற்றங்களை உண்டாக்கும் ஒரு உயிரியல் சங்கிலித் தொடராகும். ஆக்சிடோசின் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதிலும், மன அழுத்தத்தை உண்டாக்கும் 'கார்டிசோல்' (Cortisol) ஹார்மோனைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சில ஆய்வுகளின்படி, நீண்ட...

வெளிநாட்டு ரிவோல்வர் மற்றும் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் இருவர் கைது!

0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் இரண்டு சந்தேகநபர்கள் தெற்கு கொழும்பு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (17) மதிய வேளையில் மருதானை, பட்டியாவத்தை பகுதியில் குறித்த பணியகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, 2 கிராம் 500 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரகத் துப்பாக்கியுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். இவர் கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் மற்றுமொரு நபரிடம் தோட்டாக்களை வழங்கியுள்ளமை...

அலவ்வவில் துப்பாக்கிச் சூடு: 28 வயது இளைஞர் படுகொலை!

0

அலவ்வ, வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர் கவிந்து நிமேஷ எனும் 28 வயதுடைய இளைஞர் ஆவார். இவர் வீரே, மெட்டியகனே, நாரம்மல எனும் முகவரியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு! Video

0

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. "Star of Pure Land" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக்...

பல வருடங்களாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மடக்கி பிடிப்பு! நெல்லியடி பொலிஸார் அதிரடி!

0

யாழ்ப்பாணம் - துன்னாலை காட்டுப் பகுதியில் பல வருடங்களாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த சந்தேகநபரொருவரை நெல்லியடி பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். நெல்லியடி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் துன்னாலை காட்டுப் பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். தப்பி ஓடிய மற்றைய சந்தேக நபர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் நெல்லியடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். இச் சுற்றிவளைப்பில் 50000 ml கசிப்பு, 780,000 கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும், தடைய பொருட்களும் பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு...

இறால் பண்ணையில் உயிரைமாய்த்த குடும்பஸ்தர்; புத்தளத்தில் துயர சம்பவம்

0

புத்தளம் - உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டிமுனை கிராமத்தில் உள்ள களப்பு பகுதியில் நேற்று இரவு குடும்பஸ்தர் ஒருவர் விஷம் அருந்தி உயிர்மாய்த்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை ஒன்றில் குத்தகை முறையில் தொழில் செய்துவந்த புளிச்சாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த எம்.எம்.ரிஸ்கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்று இரவு  தமது இறால் பண்ணைக்குச் சென்று மின்சார விளக்குகளை ஒளிர விட்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார். அங்கு அவர் விஷத்தை அருந்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இவரின்...

யாழில் மனைவியின் கடைசித் தங்கையை கர்ப்பமாக்கிவிட்டு அப்பாவி மாணவனை சாட்டிய அரச ஊழியரான அத்தான்!!

0

யாழில் 17 வயதான மனைவியின் கடைசி தங்கையை கர்ப்பமாக்கிய பின் அயல் வீட்டில் வசித்து வந்த அதே வயதான மாணவனை கர்ப்பத்திற்கு காரணம் என மாட்ட நினைத்த 36 வயதான அரச ஊழியர் தொடர்பாக பொலிசாரிடம் மாணவனின் பெற்றோரால் முறையிடப்படவுள்ளது. யாழ் வலிகாமம் பகுதியில் மனைவி பிள்ளைகளுடன் வசித்து வரும் அரச ஊழியர் மனைவியின் சொந்த இடமான தென்மராட்சிப் பகுதிக்கு சனி, ஞாயிறு தினங்களில் சென்று தங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். தென்மராட்சியில் மனைவியின் சீதன வீட்டிலேயே மனைவியின் கடைசி தங்கையும் தாயும் வசித்து...