முல்லைத்தீவு கைவேலி விபத்தில் கந்தசாமி மரணம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.06.2026) காலை வீதியால் பயணித்த வாகனமொன்று மோதித் தள்ளியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த புதுக்குடியிருப்பு- 01 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை கந்தசாமி சிகிச்சை பலனின்றி இன்று (22) உயிரிழந்துள்ளார்.
அவனா இவன்! அம்பாறை பெண் மருத்துவர் கொலை சூத்திரதாரி இவ்வளவு கொடியவனா?
கண்டி, தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காரொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்த பெண் வைத்தியரின் மரணம் தொடர்பாக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் தப்பி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் காதலன் என கூறப்படும் நபர், தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் கண்டி பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 இடங்களில் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.இருந்த போதிலும், அவர் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரின் மூத்த சகோதரர் பொலிஸாரிடம் தகவல் வெளியிடும்...
நகைக் கடையில் முதலாளியை உள்ளே செல்ல விட்டு தாயும் மகளுமாக லீலை ( வீடியோ)
தம்புள்ளையில் உள்ள நகை கடை ஒன்றில் நகைக்கடை முதலாளி மற்றும் ஊழியர்களை ஏமாற்றி தாயும் மகளுமாக நகையை களவெடுக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையுடன் கள்ளமண் கோஷ்டி மோதல்!! சிறுவர்கள், மாணவிகள் உட்பட 14 பேர் சிறையில் அடைப்பு!! பரபரப்பு வீடியோ
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் விசேட அதிரடிப்படையினருக்கும் (STF) பொதுமக்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதல் சம்பவத்தை அடுத்து, சிறுவர்கள், முதியவர்கள், பாடசாலை மாணவிகள் உட்பட 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நோக்கில் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு காட்டுப்பகுதிக்குள் உழவு இயந்திரத்துடன் (Tractor) இருந்த ஒருவரை அவர்கள் கைது செய்ய முற்பட்டபோது, பொதுமக்களுக்கும் அதிரடிப்படையினருக்கும் இடையே கடுமையான முறுகல் நிலை ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதன்போது, கைது செய்யப்படவிருந்த...
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி மரணம்!
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகவியலாளருமான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (61), சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (21) பிற்பகல் காலமாகியுள்ளார். 1965ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் திகதி பிறந்த அவர், ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், பல ஊடகங்களில் மட்டக்களப்பு மாவட்ட செய்தியாளராக ஊடகப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
யாழில் பக்கத்து வீட்டுக்கு சென்று திரும்பிய நவீன்ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் சில்லாலைப் பகுதியில் நாகேஸ்வரன் நவீன்ராஜ் எனும் இளைஞன் இன்று 21-06ல் தவறான முடிவெடுத்து மரணமாகியுள்ளார். பக்கத்து வீட்டு நிகழ்ஙுக்கு சென்று வீடு திரும்பிய பின் இரவு படுக்கச் சென்றவர் பின்னர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் .
ரயில் மோதி தந்தை – மகன் உயிரிழப்பு! கந்தானையில் சம்பவம்!!
கந்தானை பகுதியில் இருந்து ராகமை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன், கந்தானை - பேரலந்த ரயில் கடவையில் ரயில் மோதியதில் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மகன் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த தந்தை, மிக மோசமான நிலையில் ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
செம்மணியில் குவியலாக என்புக்கூடுகள்!
தமிழீழப் போராட்டம் நாசமாகி நிர்மூலமாக்கப்பட்டது எதனால் என்பது பலருக்குத் தெரியாது. புலிகளின் இரண்டாவது தலைவர் என போராளிகளால் கருதப்பட்டு கருணா அம்மான் என்று அன்பாக அழைக்கப்பட்ட அந்த நாதாரியின் குஞ்சாமணி செய்த அட்டகாசமே தற்போது தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு மூல காரணம். யாழ் பல்கலைக்கழகம் தற்போது தரம் கெட்டு இருப்பதற்கும் இவ்வாறான காவாலிகளே காரணம். ஊடக ஜாம்பவான் என பலராலும் மதிக்கப்பட்டு வந்த இந்தக் காவாலி பாலியல் லஞ்சத்தை எப்படிக் கேட்கின்றான் என்று பாருங்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடாதிபதியாக Jan 2023- Jan 2026 வரை...
குருநாகலில் தனது கணவனின் கள்ளக் காதலியின் அந்தரங்கப் பகுதியில் 47 முறை கத்தியால் குத்திக் கொன்ற மனைவிக்கு மரண தண்டனை! நடந்தது என்ன?
தனது கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக, குருணாகல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் குருணாகல் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. மல்கடுவாவ, குருணாகல் பகுதியைச் சேர்ந்தவருக்கே மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், இரு பிள்ளைகளின் தாயாவார். 47 முறை கத்திக் குத்து கொலை செய்யப்பட்ட பெண், தண்டனை விதிக்கப்பட்ட குறித்த பெண்ணின் வீட்டிற்குள் வைத்துதான் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கத்தியைப் பறித்து, தற்காப்புக்காகவே தான் அவரைக் குத்தியதாகத் தண்டனை பெற்ற பெண் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தார். எனினும், அந்தப் பெண்...
ஜேர்மனியைச் சேர்ந்த தமிழ் வயோதிபருடன் தங்கியிருந்த கிளிநொச்சி நிர்வாக அலுவலரான யுவதி கைது!! ஆசையை துாண்டி நகைகளை சுருட்டினாராம்!
கொழும்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்த புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர் ஒருவரை ஏமாற்றி அவரது நகைகளை சுருட்டிய குற்றச்சாட்டில் கிளிநொச்சிப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட சமூக நிறுவனம் ஒன்றில் நிர்வாக அலுவலராக பணியாற்றும் 32 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. கிளிநொச்சிப் பகுதியில் செயற்படும் சமூக நிறுவனம் ஒன்றிற்கு குறித்த முதியவர் உதவி செய்து வந்ததாகவும் மற்றொரு உதவி திட்டம் ஒன்றை மேற்கொள்ள ஜேர்மனியிலிருந்து கொழும்பு வந்திருந்த குறித்த முதியவரை கிளிநொச்சிக்கு அழைத்து வருவதற்காக கட்டுநாயக்கா சென்றிருந்த குறித்த...










