வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கடற்தொழிலாளர் கைது!
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில் வெடி மருந்துடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் சட்டவிரோத கடற்தொழிலில் சிலர் ஈடுபடுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , கடற்படையினர் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர் அதன் போது ஒரு கடற்தொழிலாளர் வெடி மருந்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அதேவேளை அனுமதி பத்திரம் இன்றியும் , வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 கடற்தொழிலாளர்கள் கைது...
யாழில் இளைஞன் மீது கொலை வெறித் தாக்குதல்!! பொலிசார் மௌனமா? வீடியோ
யாழ் உரும்பிராய் கற்பகபிள்ளையார் கோவில் வீதியில் இளைஞன் ஒருவனை 4 பேர் கொண்ட குழு வீதியில் கிடத்தி கொடூரத் தாக்குதலை மேற்கொண்ட காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்வலையைக் கொடுத்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிசாருக்க முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞனின் உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவில் கொடூரக் கொலை – 25 வயதுப் பெண்ணைத் தேடும் போலிஸார்!
டொராண்டோ நகரின் நார்த் யோர்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் தொடர்பாக, 25 வயதுடைய பெண் ஒருவரை போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கடந்த ஜூன் 14 அன்று அதிகாலை, அகேட் ரோட் (Agate Road) பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் ஒரு குழுவினர் சண்டையிட்டுக் கொள்வதாக போலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார், அங்கு 32 வயதுடைய எரிக் சபார் (Eric Safar) என்ற நபர் வாகனத்தால் மோதப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு உயிரிழந்து கிடப்பதைக்...
அம்பாறையில் கணவன் இறந்த செய்தி கேட்டுமனைவியும் மரணம்!
சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த கணவர் உயிரிழந்ததையடுத்து கவலை தாங்காமல் அழுத மனைவியும் சில மணி நேரத்தில் உயிரிழந்த சோக சம்பவம் பாண்டிருப்பில் நிகழ்ந்துள்ளது. இச் சம்பவம் அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையில் பாசத்துடன் வளர்த்த யானை இருவரின் உயிரைப் பறித்த சோகம்!
யானையை தனது குடும்ப உறுப்பினர் போல நேசித்து அன்புடன் பராமரித்து வந்த யானைப் பாகனும் அவரது உதவியாளரும் அதே யானையின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்து வரப்பட்ட யானை திடீரென ஆவேசமடைந்து முதலில் பாகனின் உதவியாளரை தாக்கி உயிரிழக்கச் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. அவரை காப்பாற்ற ஓடிச் சென்ற யானைப் பாகனையும் அதே யானை தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த யானையுடன் கழித்த மனிதர்களின் உயிரையே...
கிளிநொச்சியில் நடு வீதியில் அடித்துக் கொல்லப்பட்டார் பாடசாலை அதிபர் கணேசன்!! வீடியோ
வழமையான தனது நடை பயிற்சியினை முடித்து திரும்புகின்ற போது பெரிய மோட்டார் சைக்கிலில் அதிவேகமாக வந்த இளைஞர்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள பாதசாரிகள் கடவையில் மோதியதில் ஓய்வு பெற்ற அதிபர் பெ. கணேசன் அவர்கள் படுகாயம் அடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீப நாட்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக பயணிக்கும் இளைஞர்களால் பல விபத்துகள் இடம்பெற்றுள்ளன. பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. போக்குவரத்து போலீசார் சட்டத்தை...
பிருத்தானியாவில் 15 வயது மனவளர்ச்சி குறைந்த தமிழ் சிறுமி கர்ப்பம்!! கணவனே காரணம் என பொலிசாரிடம் மாட்டிய பச்சைக் கள்ளி வெள்ளவத்தை சுரேக்கா கள்ளக்காதலனுடன் இலங்கைக்கு தப்பி ஓட்டம்!!
பிருத்தானியாவின் லெஸ்டர் பகுதியில் 15 வயதான ஓட்டிசம் என்ற நோயால் சிறுவயதிலேயே பாதிக்கப்பட்டு மனவளர்ச்சியற்ற நிலையில் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த தமிழ் சிறுமி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவரது கர்ப்பத்திற்கு காரணம் தனது கணவரே என அப்பாவியான கணவனை பொலிசாரிடம் மாட்டியுள்ளாள் கொடூர மனைவியான வெள்ளவத்தையை சொந்த இடமாக கொண்ட 38 வயதான தமிழ் குடும்பப் பெண் சுரேக்கா. சுரேக்காவின் பெற்றோர் தீவகத்தைச் சேர்ந்தவர்கள். 1990ம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைகளின் பின் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் குடியேறியுள்ளார்கள். வெள்ளவத்தைப்...
லண்டனில் நாட்டுப்பற்றாளனான பொறியியலாளர் ஜெயந்தனை குத்திக் கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை! நடந்தது என்ன?
உணவகத்திற்கு வெளியே விமானப் பொறியாளரைக் குத்திக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை புஷே (Bushey) உணவகத்திற்கு வெளியே விமானப் பொறியாளர் ஒருவரைக் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு, 20 ஆண்டுகள் குறைந்தபட்ச சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த 20 ஆண்டு காலத்திற்குப் பிறகே அவர் பரோல் (Parole) எனப்படும் தற்காலிக விடுப்புக்கு விண்ணப்பிக்க முடியும். லண்டனின் டாலிஸ் ஹில் (Dollis Hill) பகுதியைச் சேர்ந்த 26 வயதான டெக்வார்ன் வில்லியம்ஸ் (Dequarn Williams), புஷே ஹை ஸ்ட்ரீட்டுக்கு அருகில் உள்ள 'வூ லவுஞ்ச்'...
தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு!
தண்ணிமுறிப்பு குளத்தின் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு (Feasibility Study) இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, UN-Habitat Climate Resilient Project அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் மற்றும் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் (Consultants) ஆகியோர் இணைந்து கள ஆய்வில் பங்கேற்றனர். இதன்போது தண்ணிமுறிப்பு குளத்தின் தற்போதைய நிலைமைகள், அணைக்கட்டின் பலப்படுத்தல் பணிகள், பழுதடைந்த கதவுகளை சீரமைக்கும் நடவடிக்கைகள் மற்றும் குளத்திற்கு நீர் வரத்து ஏற்படுத்தும் ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள் நேரடியாக பார்வையிடப்பட்டன. மேலும், குளத்தின்...
கிளிநொச்சியில் பெரும் சோகம்!! பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியான காட்சிகள்! வீடியோ
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் இன்று திங்கட்கிழமை (22.06.2026) அயலவர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாகப் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா (வயது-02) குழந்தையே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.










