மார்ச் 3ஆம் திகதி நிகழும் அதிசயம் – 58 நிமிடங்கள் இரத்தச் சிவப்பாக மாறப்போகும் நிலவு!
வானியல் அதிசயங்களில் ஒன்றான முழு நிலவு கிரகணம் விரைவில் நிகழவுள்ளது. இதன்போது நிலவு சுமார் ஒரு மணி நேரம் அடர் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வு அரங்கேறப்போகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி சரியாக வரும்போது இந்த "பிளட் மூன்" (Blood Moon) அல்லது "இரத்த நிலவு" ஏற்படுகிறது. அப்போது பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி வடிகட்டப்பட்டு, ஒரு சிவப்பு நிற ஒளி நிலவின் மேற்பரப்பில் படுவதால் நிலவு சிவப்பாகத் தோன்றுகிறது. சூரிய கிரகணத்தைப் போலல்லாமல், இந்த சந்திர கிரகணத்தை வெறும்...
குழந்தைகளின் மூளை வளர்ச்சியைச் சிதைக்கும் கையடக்க தொலைபேசி – ஒரு மணிநேரத்தில் 400 வார்த்தைகளை இழக்கும் அபாயம்!
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் திரையைப் பார்ப்பது என்பது அவர்களின் மொழி வளர்ச்சியைத் தாமதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிஜமான மனித உரையாடல்களை முற்றிலும் இடமாற்றம் செய்கிறது. மூளையின் நரம்பியல் இணைப்புகள் உருவாகும் மிக முக்கியமான காலகட்டத்தில் ஏற்படும் இந்த இழப்பை, பிற்காலத்தில் முழுமையாக மீட்டெடுக்கவே முடியாது. மனிதர்களுக்கு இடையிலான நேரடிப் பேச்சுக்குப் பதிலாகத் திரைகள் வரும்போது, மொழி வளர்ப்பிற்கான வாய்ப்புகள் நிரந்தரமாகக் குறைகின்றன. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 220 குடும்பங்களிடம் 2.5 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஒரு நீண்டகால ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. குழந்தை பார்க்கும் ஒவ்வொரு நிமிடத் திரை நேரத்திற்கும்,...
சிலாபத்தில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் மாயம்!
மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவ்விரு மீனவர்களும் இன்று (19) அதிகாலை 2.00மணியளவில் ஒருநாள் மீன்பிடிப் படகொன்றில் கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகு கடலில் மிதந்துகொண்டிருந்ததை மற்றொரு மீன்பிடிப் படகில் இருந்த மீனவர்கள் கண்டு, அது குறித்து கரைக்குத் தகவல் அளித்துள்ளனர். இந்தத் தகவலைத் தொடர்ந்து, குறித்த மீனவர்களைத் தேடும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், வெல்ல, கருச பாடுவ பிரதேசத்தில் வசிக்கும் 40 மற்றும் 44 வயதுடைய இரண்டு மீனவர்களாவர். அவர்கள்...
நிலவுக்கு உங்கள் பெயரையும் அனுப்ப அரிய வாய்ப்பு!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான NASA,தமது அடுத்தகட்ட நிலவு பயணமான 'ஆர்ட்டெமிஸ் II' திட்டத்தில் பொதுமக்களையும் ஒரு அங்கமாக மாற்றும் வகையில் ஒரு சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள இந்த விண்கலத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் பெயர்களை நிலவுக்கு அனுப்ப நாசா அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் நபர்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு சிறிய SD கார்டில் சேமிக்கப்பட்டு, 'ஓரியன்' (Orion) விண்கலத்தின் மூலம் நிலவுக்கு கொண்டு செல்லப்படும். இதில் பங்கேற்கும் நபர்களுக்கு ஒரு நினைவுப்...
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் வர்த்தக நிலைய ஊழியர்களை சூட்சுமமாக ஏமாற்றி பணம் பெற்ற கில்லாடி பிடிபட்டது எப்படி?
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள ஊழியர்களை மிகவும் சூட்சுமமான முறையில் ஏமாற்றி பணம் பெற்று வந்த நபர் ஒருவர் இன்று (19) காலை கொட்டாவை நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரது மோசடிகள் குறித்து ரத்மலானை, கல்கிசை, மகரகம, திஸ்ஸமஹாராம உள்ளிட்ட நாட்டின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. சந்தேகநபர் பல்வேறு வர்த்தக நிலையங்களுக்குச் சென்று, அங்குள்ள காசாளர்களை (Cashiers) ஏமாற்றிப் பணம் பெற்றுள்ளதாகவும்,...
கொழும்பில் தொழிலதிபரின் விபரீத மோகம்! வீட்டில் பலரின் முன் பணிப்பெண்ணின் ஆடைகளை களைந்து கூத்து! வீடியோ வெளியாகியதால் கைது! நடந்தது என்ன?
சமூக ஊடகங்களில் பரவிய பெண்ணொருவரை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கும் காணொளி ஒன்று தொடர்பாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணைப் பணியகத்தினால் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் நேற்று (18) ஹிக்கடுவை பிரதேசத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 43 வயதுடைய பொரளை, பெயார்பீல்ட் வத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபருக்கு உதவியளித்த மற்றும் பொலிஸாருக்கு சாட்சியங்களை மறைத்த எஹலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 மற்றும் 55...
யாழ் மருத்துவபீடத்தில் சினிமாப்பாணியில் சம்பவம்!! ஏ.எல் சித்தியடையாது மருத்துவபீடத்தில் படித்த யுவதி!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது , மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த தென்னிலங்கையைச் சேர்ந்த யுவதி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமானது. அதன் போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர் , புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு , விடுதியில் தங்கியிருந்து , மருத்துவபீட விரிவுரை மண்டபத்திற்கு விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
வவுனியா மயிலங்குளம் குளத்தில் குளிக்கச் சென்ற மாணவன் டனுசியன் மரணம்!!
நேற்று மாலை வவுனியா மயிலங்குளம் குளத்தில் 4 மாணவ நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்ற 18 வயதான மாணவன் சிவலிங்கம் டனுசியன் நீரில் மூழ்கிப் பலியானான். குறித்த மாணவன் வவுனியா கோயில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்தவன் என்பதுடன் வவுனியா இந்துக்கல்லுாரி 2026ம் ஆண்டு ஏ.எல் பிரிவு மாணவன் என தெரியவருகின்றது. உடல் மேலதிக பரிசோதனைக்காக வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக வவுனியாப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இன்றைய (19.01.2026) ராசி பலன்கள்
மேஷம் இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும். தள்ளிப் போடுதலும் கூடாது. சாதாரணமாக செய்யக்கூடிய காரியங்களைக் கூட அதிகமாக முயற்சிகள் எடுத்து செய்ய வேண்டியதிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6 ரிஷபம் இன்று தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து...
யாழ் நீர்வேலியில் துணிச்சாயம் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்பு! அதிர்ச்சித் தகவல் இதோ
இந்தப் பதிவு கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சமூகவலைத்தளத்தில் காணப்பட்ட பதிவாகும் கடந்த 10 மாதம் நீர்வேலி பாடசாலை முன்பாக விற்பனை செய்யப்பட்ட இனிப்பு மிட்டாய் தொடர்பாக மாதிரி அரச பகுப்பாய்வு அனுராதபுரம் அனுப்பப்பட்டு கிடைத்த அறிக்கைப்படி இன்று யாழ்பாணம் மேலதிக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்த மனுவில் துணிகளுக்கு மற்றும் பிளாஸ்டிக் நிறமூட்ட, பயன்படுத்த ரொடமன்B எனும் நிறமுடையதை இனிப்புகள் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பு நீதிமன்றம் வழக்கில் இரண்டு நிறுவனங்களுக்கு 126,000 வீதம் 252,000 தண்டம் மற்றும் காசு...










