மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்த இராணுவ சிப்பாயை கொ லை சிப்பாய்

0

தனது மனைவியுடன் தவறான தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இராணுவ சிப்பாயை மற்றொரு இராணுவ சிப்பாய் வெட்டிக் கொன்ற சம்பவமொன்று மகாஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. மகா ஓயாவின் பொரபொல பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் அம்பாறை மல்வத்த முகாமில் பணியாற்றும் (21) இராணுவ வீரர் ஆவார். மின்னேரியா ராணுவ முகாமில் பணியாற்றும் (24) இராணுவ வீரர் ஒருவர் இந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட இராணுவ வீரர், சந்தேக நபரான இராணுவ வீரரின் மனைவியுடன் தொடர்பில்...

வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் சிந்துஜா கொலை!! கணவனும் குழந்தையும் மாயம்!!

0

வவுனியா பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்…. குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் இன்றையதினம் காலை வீட்டில் இருந்துள்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியைசேர்ந்த இ.சிந்துஜா வயது 25 என்ற ஒருபிள்ளையின் தாயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலத்தின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

இலங்கை போதைப்பொருள் கடத்தல் மையமானது எப்படி..? ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கை

0

கடல் மார்க்கமாக நடைபெறும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளும் பிரதான இலக்குகளாகவும், போதைப்பொருள் பரிமாற்றம் செய்யும் மையங்களாகவும் மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் தொடர்பான அலுவலகம் வெளியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் பாதுகாப்பு பிரிவு, அரச நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல் மற்றும் போதைப்பொருள் வலையமைப்புகளின் கட்டமைப்பு மற்றும் இந்து சமுத்திரத்தின் மேற்கு பகுதியில் இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வலையமைப்பு மற்றும்...

அவுஸ்ரேலியாவிலிருந்து வந்து கேகாலையில் ஒன்றாக உயிர் நீத்த காதல் தப்பதிகள்!! நடந்தது என்ன?

0

கேகாலை பகுதியில் மனைவியின் இறுதி சடங்கின் போது, கணவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 77 வயதான குணதாச அதிகாரி ஆராச்சி  கேகாலை புனித மேரி பெண்கள் கல்லூரியில் ஆசிரியரும், 76 தலதா விஜேரத்ன என்ற எழுத்தாளருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரும் இளம் வயதிலேயே காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். அந்த நிலையில் இரண்டு பிள்ளைகளுடன் இந்த தம்பதி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்தனர். மனைவியின் உடல்நிலை பாதிப்பு காரணமாக இருவரும் இலங்கைக்குத் திரும்பினர். எனினும் கடந்த 31ஆம் திகதி மனைவி உயிரிழந்தார்....

யாழ் விபத்தில் தலை நசுங்கிப் பலியான இளம் கலைஞர் வசந்தன் என்பவர் கடைசியாக ஆடிய ஆட்டம்!! வீடியோ

0

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் கலைத்துறையைச் சேர்ந்த வசந்தன் என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை சந்திக்கு அருகில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் , மயிலிட்டியை சேர்ந்த வசந்த் (வயது 35) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். இவர் ஒரு கலைத்துறையைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றது. தற்போது அவர் ஆடிய ஒரு ஆட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. அதனை அப்படியே தந்துள்ளோம்.

யாழில் பெண்ணிடம் சங்கிலி அறுத்த கொள்ளையன் ஊர் மக்களால் பிடிக்கப்பட்டான்!!

0

நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார். நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்று(01) அறுத்துச் சென்றுள்ளார். அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து வர்த்தக நிலைbreakயத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் இன்று...

எலும்பு முறிவை 3 நிமிடத்தில் சரி செய்யும் சீன விஞ்ஞானிகளின் அதிசயக் கண்டுபிடிப்பு!

0

சீனாவின் ஜெஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘Bone-02’ எனும் புதிய பசையை உருவாக்கி மருத்துவத்துறையில் சாதனை படைத்துள்ளனர். தற்போது எலும்பு முறிவு ஏற்பட்டால், முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும். இதனால் எலும்பு முறிவினால்  பாதிக்கப்பட்டவர்கள் தமது  அன்றாட வாழ்க்கையில் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், ‘Bone-02’ பசை 3 நிமிடத்தில் இரு எலும்புகளையும் துல்லியமாக ஒட்டிவிடக்கூடியது என்று விஞ்ஞானர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையில் 150 பேருக்கு இதன் செயல்திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், எலும்பு குணமடையும் போது இந்த பசை உடலால் இயற்கையாகவே உறிஞ்சப்படும், எனவே தற்போதைய...

சுவிட்சர்லாந்தில் சீனாவால் கண்காணிக்கப்படும் இனத்தவர்கள்!

0

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் திபெத்தியர்கள் மற்றும் உய்குர் இனத்தவர்கள் சீனாவால் கண்காணிக்கப்படுகிறார்கள் அல்லது தங்கள் சமூகத்தினரை வேவு பார்க்க ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. பாசல் பல்கலைக்கழகத்திடம் நீதித்துறைக்கான பெடரல் அலுவலகம் ஒரு அறிக்கையை கேட்டிருந்தது. அதில், இரண்டு குழுக்களும் திட்டமிட்ட முறையில் கண்காணிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உட்பட பல வழிகளில் அவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். இந்த குழுக்களுடன் தொடர்புடைய சுவிஸ் குடிமக்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படக்கூடிய குழுக்களை நாடுகடந்த அடக்குமுறையிலிருந்து பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

லண்டன் ரயிலில் நடந்த திகில் சம்பவம்: கத்திக்குத்துக்கு இலக்கான ஒன்பது பேர் ஆபத்தான நிலையில்

0

செவ்வாய்க்கிழமை மாலை ரயிலில் பலர் கத்தியால் குத்தப்பட்டனர். பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தின் வகை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் ரயில் ஆங்கில நகரமான ஹண்டிங்டனில் நிறுத்தப்பட்டபோது, ​​ஆயுதமேந்திய அதிகாரிகள் இரண்டு பேரைக் கைது செய்தனர். ஊடக அறிக்கைகளின்படி, சாட்சிகள் வியத்தகு காட்சிகளை விவரித்தனர். ஹண்டிங்டன் லண்டனுக்கு வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷயர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவல்துறையினரின் கூற்றுப்படி, ரயில் டான்காஸ்டரிலிருந்து பிரிட்டிஷ் தலைநகருக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. தாக்குதல் குறித்து அவசர சேவைகள் இரவு 7:42 மணிக்கு எச்சரிக்கப்பட்டன. ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மற்றும்...

காதலனின் கண் முன்னே களனி கங்கையில் மூழ்கிய இளம் பெண் பலி

0

முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (1) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட குழுவினர், கொழும்பு நோக்கிப் பயணிக்கும் வழியில், முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக கோகிலவத்தை பகுதியில் களனி கங்கை அருகே உள்ள வாகனங்களை கழுவும் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக ஆற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுக்க முற்பட்ட குறித்த இளம் பெண்,...