யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீட்கப்பட்ட துப்பாக்கியின் பாகங்கள்.! Video
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்துள்ள நூலகக் கட்டிடத்தின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆயுதங்களும் வெடிபொருட்களும் நேற்று மாலை (நேற்றுமாலை) மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட பொருட்களில் இரண்டு மகசின்களும், அவற்றுக்குரிய 59 துப்பாக்கி ரவைகளும், அத்துடன் 5 அடி நீளமான மின் வயர்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நூலகத்தின் சீலிங் பகுதிக்குள் இந்த ஆபத்தான பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், உடனடியாகக் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்து, நேற்று இரவு முதலே பல்கலைக்கழக வளாகத்துக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இன்று காலை...
கணவன் வைத்தியசாலையில் அனுமதி! முச்சக்கர வண்டியை விற்ற மனைவி!
பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, பண்டாரகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையின் போது, முறைப்பாட்டாளரின் மனைவி போலி கையொப்பத்தை பயன்படுத்தி முச்சக்கர வண்டியை விற்றிருப்பது தெரியவந்தது.
மாணவியின் அங்கத்தில் தொட்ட விளையாட்டு ஆசிரியர் கைது!!
விளையாட்டு பயிற்சிகளுக்கிடையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரின் மார்பகங்களை பிடித்து தள்ளிவிட்ட ஆசிரியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலையொன்றின் விளையாட்டு துறை ஆசிரியரான 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகார சபையின் தகவலுக்கமைய மாரவில பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான...
நூற்றாண்டின் கோரத் தாண்டவம்: மெலிசா புயல் (Storm of the Century)
முன்னுரை அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான 'மெலிசா' சூறாவளி, தனது கோரமான வடிவத்தையும், அபரிமிதமான வேகத்தையும் கொண்டு “நூற்றாண்டின் புயல்” (Storm of the Century) என்று வர்ணிக்கப்படுகிறது. 174 ஆண்டுகாலப் பதிவுகளில் ஜமைக்காவைத் தாக்கிய மிக வலிமையான புயலாக இது பதிவாகியுள்ளது. இந்தச் சுழல் காற்று, புவியின் வேகமாக வெப்பமயமாகும் (Rapid Heating) காலத்தின் விளைவுகளை அழுத்தமாக உணர்த்தியுள்ளது. வெறும் 24 மணி நேரத்திற்குள் தீவிரமடைந்து, ஒரு அபாயகரமான வகை 5 புயலாக (Dangerous Category 5 Hurricane) உருவெடுத்த இதன் தீவிரம், மக்கள்...
மாங்குளம் பனிக்கன்குளம் பகுதியில் தடம்புரண்ட ஹயஸ் வாகனம்! Video
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் 227 ஆவது கிலோமீற்றர் பகுதியில் (பனிக்கன்குளம்) கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி வந்த கயஸ் ரக வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் பிரண்டு வீதியை விட்டு தூக்கிவீசப்பட்டுள்ளது கொழும்பு நோக்கி மக்களை அழைத்துச் சென்ற குறித்த வாகனம் அவர்களை கொழும்பில் இறக்கிவிட்டு மீண்டும் கிளிநொச்சி நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்ற போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது இதன் போது இந்த வாகனத்தில் சாரதி மட்டுமே இருந்திருக்கின்ற நிலமையில் தெய்வாதீனமாக சிறிய ஒரு காயத்துடன் மாத்திரம் சாரதி...
இலஞ்சம் பெற்ற நீதிமன்ற அலுவலக உதவியாளர் கைது!!
10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரி, பெற்றுக்கொண்ட நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், ஒரு வழக்கு அறிக்கையின் சான்றளிக்கப்பட்ட பிரதியொன்றை வழங்குவதற்காக 10,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரியுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (29) காலை 10.26 மணியளவில் வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில்...
இலங்கையில் நடந்த சோகம்.. கடலில் மிதந்து வந்த திரவத்தை அருந்திய இருவர் உயிரிழப்பு..!
புத்தளம், நாரக்கல்லி பிரதேசத்தில் தற்காலிகத் தங்குமிடம் ஒன்றில் இருந்த இருவர், ஒருவகை திரவத்தை அருந்திய பின்னர் ஏற்பட்ட சுகவீனத்தால் உயிரிழந்துள்ளனர். குறித்த இடத்தில் நால்வர் இருந்துள்ளதுடன், கடலில் இருந்து மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த திரவத்தையே அவர்கள் அருந்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் திரவத்தை அருந்திய பின்னர், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏனைய மூவரும் புத்தளம் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் தற்போதும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது!!
அவிசாவளை நீதிமன்ற வளாகத்தில் விளையாட்டு துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவிசாவளை மாஜிஸ்திரேட் நீதிமன்ற வளாகத்திற்கு விளையாட்டு துப்பாக்கியை கொண்டு வந்த ஒரு பெண் அவிசாவளை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நெடோல்பிட்டி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல்துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட பெண்ணின் கைப்பையை ஆய்வு செய்தபோது, அதில் இந்த பொம்மை துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். இந்தப் பொருளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்ததற்கான காரணத்தையும்...
காலியில் மகனை கழுத்தறுத்து கொன்று விட்டு தானும் துாக்கில் தொங்கி தற்கொலை செய்த இளம் குடும்பப் பெண்!! வீடியோ
காலி படபொல கஹட்டப்பிட்டிய பகுதியில் தாய் ஒருவர் தமது குழந்தையைக் கொன்று*விட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று பதிவாகியிருந்தது. படபொல பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குறித்த பெண்ணினதும், அவரது குழந்தையினதும் சடலங்கள் அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டெடுத்து விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். கொல்லப்பட்ட குழந்தை மூன்றரை வயதுடைய ஆண் குழந்தை எனவும், தற்கொலை செய்துகொண்ட பெண் 24 வயதுடையவராவார்.
கனடாவில் உயர் கல்வி கற்றுவரும் மாணவன் கட்டுநாயக்காவில் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் 21 வயது கனேடிய பிரஜை எனவும் அவர் கனடாவில் உயர்கல்வி பயிலும் மாணவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த சந்தேக நபர் டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார். குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பைகளை சோதனை செய்த போது, 18.253 கிலோகிராம் ஹாஷிஷை சுங்க அதிகாரிகளால்...










